முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » ஜான் டால்ட்டன் (கி.பி.1766 - கி.பி.1844)
ஜான் டால்ட்டன் (கி.பி.1766 - கி.பி.1844)
ஜான் டால்ட்டன் ஓர் ஆங்கிலேய அறிவியலார். அவர் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பொது அறிவியல் அணு பற்றிய கருதுகோளைப் புகுத்தினார். இதனால் அவரது காலம் முதல் இயைபியலாகிய இரசாயனவியலில் பெரும் முன்னேற்றம் விளைய வழி ஏற்பட்டது.
எல்லாப் பொருள்களும் அணுக்கள் எனப்படும் எண்ணற்ற நுண்ணிய அழியாத் துகள்களாலானவை என்று முதன் முதலில் கூறியவர் அவரல்லர். பண்டைய கிரேக்கத் தத்துவ அறிஞரான டெமாக்கிரிட்டஸ் (கி.மு. 460 - 370) அக்கருத்தை எடுத்துரைத்தார். ஒருவேளை அதற்கு முன்னே அக்கருத்து நிலவியிருத்தல் கூடும்; அக்கருதுகோளை (மற்றொரு கிரேக்க தத்துவ அறிஞரான) எப்பிக்கியூரஸ் ஏற்றுக் கொண்டார். ரோமானிய எழுத்தாளரான லுக்ரேஷியஸ் (இறப்பு கி.மு. 55) தமது தெ ரேரும் நாத்துரா (பொருள்களின் இயல்பு) எனும் புகழ்மிகு கவிதையில் அக்கருத்தை எழில்பட எடுத்துரைத்தார்.
இடைக்காலத்தில் (அரிஸ்டாட்டில் ஏற்றுக் கொள்ளாத டெமாக்கிரிட்டஸ் கொள்கை புறக்கணிக்கப் பட்டது. அது தற்கால அறிவியலைப் பாதிக்கவில்லை. ஆயினும் (ஐசக் நியூட்டன் உள்பட) 17 ஆம் நூற்றாண்டின் பல முக்கிய அறிவியலார் அதுபோன்ற கருத்துகளை ஆதரித்தனர். ஆனால் முற்கால அணுக் கொள்கைகள் எதுவும் அளவினமாக எடுத்துரைக்கப் பெறவில்லை; மேலும் அணுக்கள் பற்றிய தத்துவ ஊகங்களுக்கும் இயைபியலின் உண்மைகளுக்குமுள்ள தொடர்பை யாரும் கண்டறியவில்லை.
அப்போதுதான் டால்ட்டன் தோன்றினார். அவர் தெளிவான ஓர் அளவினக் கொள்கையை வகுத்தார். இயைபியல் பரிசோதனைகளை விளக்குவதற்கு அதைப் பயன்படுத்த முடியும். அதை ஆய்வகத்தில் பரிசோதிக்கவும் முடியும்.
டால்ட்டன் பயன்படுத்திய கலைச் சொற்கள் நாம் இப்போது பயன்படுத்தும் சொற்களைப் போல் இல்லையெனினும், அவர் (1) அணுக்கள் (2) மூலக்கூறுகள் (3) தனிமங்கள் எனும் கருத்துகளைத் தெளிவாக எடுத்துரைத்தார். உலகிலுள்ள அணுக்களின் மொத்த எண்ணிக்கை மிகுதியெனினும் அணுக்களின் வெவ்வேறு வகைகளின் எண்ணிக்கை குறைவு என்று அவர் தெளிவுபடுத்தினார். (அவருடை முதல் நூல் 20 தனிமங்களின் அல்லது அணு வகைகளின் பட்டியலைத் தந்தது. இன்று ஏறக்குறைய 100 தனிமங்களின் அல்லது அணு வகைகளின் பட்டியலைத் தந்தது. இன்று ஏறக்குறைய 100 தனிமங்களை நாம் அறிந்திருக்கிறோம்.)
வெவ்வேறு வகையான அணுக்களின் எடை வேறுபட்டுள்ள போதிலும், ஒரே வகையைச் சேர்ந்த இரு அணுக்கள் பொருண்மை உட்பட எல்லா இயல்புகளிலும் ஒன்றுபோலானவை என்று டால்ட்டன் வலியுறுத்தினார். டால்ட்டன் தமது நூலில் பல்வேறு வகை அணுக்களின் எடைகளைப் பட்டியலிட்டுக் காட்டினார். இதுவே முதலில் தயாரிக்கப்பட்ட அத்தகைய பட்டியலாகும். இது அளவின அணுக் கொள்கையின் முக்கிய இயல்பு.
ஒரே இரசாயனக் கூட்டுப் பொருளின் இரு மூலக்கூறுகள் அதே அணுக்கலவையினாலானவை என்று டால்ட்டன் தெளிவாகக் கூறினார். (எடுத்துக்காட்டாக, நைட்ரஸ் ஆக்சைடின் ஒவ்வொரு மூலக்கூறும் இரு நைட்ரஜன் அணுக்களாலும், ஓர் ஆக்சிஜன் அணுவாலுமூ ஆனது). இதிலிருந்து, ஓர் இரசாயனக் கூட்டுபூ பொருள், எவ்வாறு தயாரிக்கப்பட்ட போதிலும், எங்கு கிடைத்த போதிலும், ஒரே எடை விகிதத்திலுள்ள அதே தனிமங்களாலானது என்பது புலனாகின்றது. இதுவே ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன் ஜோசப் லூயிஸ் ப்ரூஸ்ட் பரிசோதனை மூலம் கண்டுபிடித்திருந்த வரையறுக்கப் பட்ட விகிதங்களின் விதியாகும்.
டால்ட்டன் தமது கொள்கையை எவ்வளவு உறுதியுடன் எடுத்துரைத்தாரெனில், 20 ஆண்டுகளுக்குள்ளாக அறிவியலார் பெரும்பாலோர் ஏற்றுக் கொண்டார். மேலும், இயைபியலார் அவருடைய நூல் கூறிய கீழ்க்கண்ட முறையைப் பின்பற்றினார்; அணுக்களின் எடைகளைத் திட்டவட்டமாகத் தெரிந்துகொள்ளுங்கள்; இரசாயனக் கூட்டுப் பொருள்களை எடைக்கேற்ப பகுத்துக் கொள்ளுங்கள்; ஒவ்வொரு வகை மூலக் கூறும் அமைந்த அணுக்களின் கலவையைத் தெரிந்து கொள்ளுங்கள். இம்முறை பெரும் வெற்றியைத் தந்தது.
அணுக் கருதுகோளின் முக்கியத்துவத்தை இங்கு எடுத்துரைக்கத் தேவையில்லை எனலாம். அதுவே இயையியலைப் பற்றிய அறிவின் மையக் கருத்து. மேலும் அது தற்கால இயற்பியலுக்கு ஓர் இன்றியமையாத முன்னுரையாக இருக்கின்றது. டால்ட்டன் காலத்திற்கு முன்னே அணுக்கொள்கை பலமுறை எடுத்துரைக்கப் பட்டுள்ளதால், அவர் இப்பட்டியலில் உயரிடம் பெறவில்லை.
டால்ட்டன் 1766 இல் வட இங்கிலாந்திலுள்ள ஈகிள்ஸ்பீல்டு எனும் கிராமத்தில் பிறந்தார். 11 வயதாகும் போது அவர்தம் பள்ளிப் படிப்பை நிறுத்த வேண்டியதாயிற்று. அவர் தாமே அறிவியலைப் பயின்றார். அவர் வயதுக்கு மீறிய அறிவாற்றலைப் பெற்றிருந்தார். தம் 12 ஆம் வயதில் ஆசிரியரானார். பிறகு அவர் தம் வாழ்க்கை முழுவதும் ஆசிரியராக, அல்லது தனிப்பட்ட முறையில் கல்வி கற்பிப்பவராகப் பணியாற்ற வேண்டியிருந்தது. 15 ஆம் வயதில் கென்டல் நகருக்குச் சென்றார். 26 ஆம் வயதில் மான்செஸ்டருக்குச் சென்றார். 1844 இல் இறக்கும்வரை அங்கேயே வாழ்ந்தார். அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.
1787 இல் டால்ட்டன் வானிலை ஆய்வியலில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு 21 வயது. 6 ஆண்டுகள் கழித்து அவ்வியலைப் பற்றி ஒரு நூல் வெளியிட்டார். காற்றையும் காற்று மண்டலத்தையும் பற்றி அவர் ஆய்ந்ததால், அவருக்குப் பொதுவாக வாயுக்களின் இயல்புகள் பற்றிய ஈடுபாடு ஏற்பட்டது. பல பரிசோதனைகளின் பயனாக அவர் வாயுக்கள் பற்றிய இரு முக்கிய விதிகளைக் கண்டுபிடித்தார். அவற்றுள் முதல் விதியை 1801 இல் எடுத்துரைத்தார். அதன்படி, ஒரு வாயுவின் கன அளவு அதன் வெப்பநிலைக்கேற்ற விகிதத்திலிருக்கும். (இது பொதுவாக சார்லஸ் விதி எனப்படும். ஏனெனில் சார்லஸ் எனும் ஃபிரெஞ்சு அறிவியலார் டால்ட்டனுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே இவ்விதியைக் கண்டுபிடித்தார். ஆயினும் அவர் தாம் கண்டுபிடித்ததை வெளியிடவில்லை. இரண்டாம் விதியை டால்ட்டன் 1801 இல் எடுத்துரைத்தார். அது டார்வினின் குறை அழுத்த விதி எனப்படும்.
1804 இல் டால்ட்டன் தமது அணுக்கொள்கையை வகுத்து அணுக்கொள்கையை வகுத்து அணு எடைகளின் பட்டிகலைத் தயாரித்திருந்தார். ஆயினும் எ நியூ சிஸ்டம் ஆஃப் கெமிக்கல் ஃபிலாசஃபி எனும் அவருடைய முக்கிய நூல் 1808 வரை வெளிவரவில்லை. அந்நூலே அவருக்குப் புகழைத் தந்தது. பிற்காலத்தில் அவர் பல சிறப்புப் பாராட்டுதல்களைப் பெற்றார்.
டால்ட்டனுக்குச் சில நிறங்களைக் காணமுடியாத பார்வைக் கோளாறு இருந்தது. ஆகவே அவர் அதைப் பற்றி அறிய ஆவல் கொண்டார். அதை ஆழ்ந்து ஆராய்ந்து, அக்கோளாறு பற்றி ஓர் அறிவியல் கட்டுரை வெளியிட்டார். அதுவே அப்பொருள் பற்றிய தெளிவான முதல் வெளியீடாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 71 | 72 | 73 | 74 | 75 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜான் டால்ட்டன் (கி.பி.1766 - கி.பி.1844), அவர், டால்ட்டன், பற்றிய, அணுக்களின், எனும், எடுத்துரைத்தார், அறிவியலார், முக்கிய, தமது, நூல், பற்றி, தந்தது, அணுக்கள், அல்லது, இரசாயனக், வயதில், போதிலும், ஆயினும், தத்துவ, எனப்படும், ஏற்றுக், கொண்டார், மேலும், அணுக், வகைகளின், Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்