புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 128
பாரப்பா பகலவனும் சனிசேய்பாம்பு |
இன்னமொரு கருத்தையும் கேள்! சூரியனும், சனி செவ்வாயும் பாம்பு என்று கூறப்படும் இக்கோள்கள் ஆறாம் இடத்தில் நிற்க அச்சாதகனுக்குச் பகைவர்கள் அடங்கிப் பயந்து போவார்கள். அச்சாதகனுக்கு சீரும் செம்பொன்னும் சிறந்த நாடும் உண்டு. அவற்றைப் பெற்றுப் புகழோடு வாழ்வான். அவனது ஆயுளூம் தீர்க்க முடையதேயாகும். மேலும் அந்த ஆறாம் இடத்திற்கு உடையோன் 6,8,12 ஆகிய இடத்தில் வீழ்ந்து கெட்டாலும் அச்சாதகன் ஒரு சிங்கத்தைப் போலவே இருப்பான் என்பதையும் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 126 | 127 | 128 | 129 | 130 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 128 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -