வாமன புராணம் - பகுதி 12 - பதினெண் புராணங்கள்
அந்தகன் என்ற அசுரனைப் பற்றி நாம் முன்பே அறிந்துள்ளோம். அந்த அசுரன் ஒருநாள் பிரகலாதனுடன் மந்தர மலைக்குச் சென்ற பொழுது, பார்வதியைக் கண்டு அவளை மணந்து கொள்ள விரும்பினான். இது கேட்ட பிரகலாதன், அந்தகனிடம், "பைத்தியக்காரனைப் போல் உளறாதே. பார்வதி சிவனின் மனைவியாவார். இந்த அகில உலகத்திற்கு அவரே தாய் ஆவார். ஆகையால் நீ உன் புத்தியை மாற்றிக் கொள்” என்றான். அதைக் காதில் போட்டுக் கொள்ளாத அந்தகன் பார்வதியைத் தாக்க நினைத்து அங்கு சென்றான். சிவனின் நண்பனாகிய நந்தி, அந்தகனைத் தடுக்க, கோபம் கொண்ட அசுரன் நந்தியைக் கலப்பையால் அடித்து மயக்கமுறச் செய்தான்.
இதை அறிந்த பார்வதி ஒரே மாதிரி தோற்றம் தரக் கூடிய நூறு உருவங்கள் பெற்றார். அங்கு வந்த அந்தகன் உண்மையான பார்வதியைக் கண்டுபிடிக்க முடியாமல் சோர்ந்து போனான். இத்தருணத்தைப் பயன்படுத்திக் கொண்ட பார்வதி அவனை ஒர் ஆயுதத்தால் வீழ்த்தினார். அந்தகன் மயக்கமுற்றுக் கிடந்த சமயத்தில் பார்வதி அவ்விடத்தை விட்டுச் சென்று விட்டார். நீண்ட நேரத்திற்குப் பிறகு கண் விழித்த அந்தகன், பார்வதியைக் காணாமையால் ஏமாற்றத்துடன் பாதாளலோகம் திரும்பினான். சில நாட்கள் கழிந்தன. அந்தகன் பார்வதியை மறக்க முடியாததால், தன் படைகளைக் கூப்பிட்டு, பார்வதியைக் கவர்ந்து கொண்டு வருபவர்களுக்குத் தக்க பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறினான்.
இதைக் கேட்ட பிரகலாதன் அந்தகனிடம், "உனக்குப் பைத்தியம் பிடித்து விட்டது. பார்வதி உன் தாய் என்பதையும், சிவன் உன் தந்தை என்பதையும் நீ மறந்துவிட்டாய். இப்போது அதை உனக்குச் சொல்லப் போகிறேன்” என்று கூறி, சொல்லத் துவங்கினான் பிரகலாதன்.
ஒருமுறை சிவன் தனியே வீற்றிருக்கும் பொழுது, பார்வதி பின்புறமாக வந்து அவர் கண்களைப் பொத்தினார். அண்டங்கள் முழுவதும் இருண்டன. சிவனுடைய உடம்பிலிருந்து ஒரு பிள்ளை உதயமானான். ஹிரண்யாக்ஷன், பிள்ளை இல்லை என்று தவம் செய்தபொழுது சிவன் தோன்றி, "இந்த ஜென்மத்தில் உனக்குப் புத்திரபாக்கியம் இல்லை. என்னிடம் கண் இல்லாத ஒரு பிள்ளை இருக்கிறான். அவனை உன் மகனாக ஏற்று வளர்ப்பாயாக’ என்றார். சிவன் பார்வதி இருவருக்கும் மானசீகமாகப் பிறந்தவன் நீ பிறர் மனைவியை விரும்புவது பெருங்குற்றம். அல்லாமலும் உன் தாயின் இடத்தில் இருக்கின்றவளை விரும்புவது பெரும் பாதகம் என்று கூறிவிட்டு, பிறன் மனைவியை விரும்புவது எவ்வளவு தவறு என்பதற்கு ஒரு கதை கூறினான் பிரகலாதன்.
தண்டா
தண்டா என்ற தைத்திய மன்னன் ஒருமுறை தன் குருவான சுக்ராச்சாரியார் மகளைப் பார்த்தான். உடனே அவளை விரும்பி மணம் செய்து கொள்ளக் கேட்டான். அரஜா என்ற அப்பெண், என் தந்தையைக் கேள். மேலும் என் தந்தை உனக்கு குரு ஆவார். குருமகள் உனக்குத் தங்கை முறை ஆவாள். எனவே நீ விரும்புவது சரியன்று என்றாள். அதற்கு இசையாத அவன் மேலும் வற்புறுத்தவே என் தந்தை வெளியூர் சென்றிருக்கிறார். அவர் வந்தவுடன் அவருடைய உத்தரவைக் கேட்டுக் கொண்டு என்னை மணந்து கொள் என்றாள். தண்டன் குருவின் மகளைத் திருமணம் செய்து கொள்வது புதிதன்று. தந்தையின் உத்தரவுப்படிதான் செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை வலியுறுத்துவதற்காகச் சித்ராங்கதாவின் கதையைக் கூறினான்.
சித்ராங்கதா, விஸ்வகர்மாவின் மகள், சுரதா என்ற ராஜ குமாரனை மணம் செய்து கொள்ள நினைக்கையில், விஸ்வகர்மா ஊரில் இல்லை. அவன் வரும்வரை காத்திராமல் இருவரும் மணம் செய்து கொண்டனர். வந்த விஸ்வகர்மா நடந்ததைக் கேள்வியுற்று, உன் கணவனைப் பிரிந்து வாழ்வாயாக என்று சாபமிட்டார். அந்தச் சாபத்தின்படி ஆற்றுத் தண்ணிரில் சுரதா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாமன புராணம் - பகுதி 12 - Vamana Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, அந்தகன், பார்வதி, இல்லை, விரும்புவது, செய்து, சிவன், பிரகலாதன், பார்வதியைக், மணம், ", தந்தை, பிள்ளை, கூறினான்