முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 336
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 336
இருவரும் பேசிக்கொண்டிருந்த இடத்திற்கு லேசான மஞ்சள் நிறச்சேலையும் சிவப்பு நிற ப்ளவ்ஸும் அணிந்து கொண்டு, சகீனா வந்து சேர்ந்தாள். சங்கர் எழுந்து நின்று ‘வணக்கம் மன்னி’ என்று கைகூப்பினார். மன்னியின் பதில் வணக்கம், புன்முறுவல் உருவத்திலே வந்தது; ஒரு காலத்தில், ஒரு பணக்கார ‘ஸர்’ரின் ‘கிராஜுவேட்’ மகள் சகீனா, பட்டிக் காட்டானைப்போலத் தோன்றும் இந்தப் பட்டதாரியோடு சபதர் நட்புரிமை கொள்வதை வெறுத்தாள். சகீனா தந்தையாரின் வீட்டிலே படுதாப் பழக்கத்தை கைக் கொள்ளவில்லை. ஆகையால், சங்கருக்கு முன்னால் வருவதைப் பற்றி எவ்விதக் கூச்சமும் கிடையாது. ஆயினும் ஆரம்பத்தில் ஆறுமாத காலம் வரை சங்கர் சபதரோடு வேற்றுமையின்றி நெருங்கிப் பழகுவதைப் பார்க்கும் பொழுதெல்லாம், அவளது புருவம் நெரிந்து உயர்ந்துவிடும். ஆனால் ஆறுமாதப் பழக்கத்திற்குப் பிறகு, சங்கர் உண்மையிலேயே நம்முடைய அன்பிற்கு மட்டுமல்ல, மரியாதைக்கும் உரியவர் என்று சபதரிடம் அவள் ஒப்புக்கொள்ள வேண்டியநிலை ஏற்பட்டது.
இப்பொழுது சங்கருக்கும் சகீனாவுக்குமிடையே மன்னி கொழுந்தன் முறை
உறுதிப்பட்டுப் பல வருடங்களாகி விட்டன. சகீனா தன் விருப்பப்படியே தனக்குக் குழந்தைகள் பிறக்காதபடி செய்து கொண்டு விட்டாள். ஆனால், அடிக்கடி அவள் சங்கரின் குழந்தைகளை வைத்துக் கொண்டு பொழுதுபோக்குவாள். ஆறு வருடகாலமாக, ‘சங்கர’-சபத ரின் தயவு தன் மீது அதிகமாய் இருப்பதாய் சங்கர் கருதினார். ஏனெனில் அவர் வீட்டில் எப்போதும் இரண்டு வயதிற்குக் குறைவான குழந்தை இருந்து கொண்டேயிருக்கும்.
கடந்த ஒருவார காலமாக சாஹிப் ஆழ்ந்த சிந்தனையிலிருப்பதை, சகீனா கவனித்து வந்தாள். ஆகவே இன்று சங்கரின் வரவு அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஏனெனில் சாகிப்பின் மனப்பாரத்தைக் குறைக்கும் சக்தி சங்கர் ஒருவருக்குத்தான் உண்டு என்பது அவளுக்குத் தெரியும். சகீனா சங்கரைப் பார்த்துக் கொண்டே, “சங்கர், இன்று உனக்கு வீட்டிலே ஒன்றும் அதிக வேலையில்லையே? மன்னி கையால் செய்யும் ‘சாக்லட் புட்டிங்’ குக்காகக் காத்திருக்கலாமல்லவா?” என்று கேட்டாள்.
சபதர்-“இது நல்ல ஒழுங்கு, வேணுமா என்று கேட்பது?”
சகீனா-“நான் முதலிலேயே ஏன் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்றால் கொழுந்தனார் சாகிப்பிற்குத் தான் ஒன்றும் நிச்சயம் இல்லையே. நான் தயாரித்த பிறகு அவர் மாயமாய் மறைந்துவிட்டால்...?”
சங்கர்-“எனக்கு அநியாயம் செய்யாதே மன்னி! எப்பொழுதாவது உன் உத்தரவை மீறியிருக்கிறேனா? ஒரு உதாரணம் சொல் பார்ப்போம்.”
சகீனா-“உத்தரவை மீறுவதைப் பற்றி நான் சொல்லவில்லை. மைத்துனரே; உத்தரவைக் கேட்காமலேயே தப்பி ஓடி விடுவதும் குற்றம்தான்.”
சங்கர்-“நான் எனது ‘ஜெனரல்’ மன்னி சாஹிப்பின் உத்தரவைக் கேட்பதற்கு எப்பொழுதும் காத்துக் கொண்டிருக்கிறேன்.”
சகீனா-“நல்லது! நான் போகிறேன். இன்று இரவுச் சாப்பாட்டுடன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 334 | 335 | 336 | 337 | 338 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சகீனா, சங்கர், மன்னி, என்று, நான், இன்று, கொண்டு - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்