முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 245
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 245
“ஆம். நடந்து வரும் பழக்கங்களை உடைப்பது யாராலும் முடியாத காரியம்.”
“இதே மாதிரித் ததாதகர் நினைத்திருந்தால், இவ்விதமே ஆரிய அஸ்வகோஷு ம், ஆரிய நாகார்ச்சுனனும் கருதியிருந்தால்...”
“அவர்களுக்குத் தைரியமிருந்தது. அப்படியிருந்தும் கூட, அவர்கள் பழைய பழக்கங்களை உடைப்பதிலே அவ்வளவு தூரம் வெற்றியடைய முடியவில்லை.”
“அதிக தூரம் முடியாமல் இருக்கலாம். நீங்கள் கொஞ்ச தூரம் முன்னேறினால், வருங்கால சந்ததியர்கள் இன்னும் கொஞ்சம் முன்னேறுவார்கள்.”
“என்னை, உங்கள் வாயால் பயங்கொள்ளி என்று சொல்லித்தான் விடுவீர்களோ?”
“அப்படியல்ல, ஆனால், மதம் ஒரு பெரிய சூழ்ச்சியென்று நிச்சயம் சொல்வேன்.”
“என் மனத்திடம் கேட்டீர்களானால், அது உங்களுக்கு ‘ஆம்’ என்று பதில் சொல்லும். என் நாக்கிடம் கேட்டீர்களானால், ‘இல்லை’ என்று பதில் சொல்லும்; அல்லது மௌனமாகிவிடும்.
பிராமணர்களின் மதத்தை நான் மனப்பூர்வமாக வெறுக்கிறேன். உண்மையில் காமரூபாதிபதி போன்ற எத்தனையோ நன்மனம் படைத்த மனிதர்களைப் பயங்கொள்ளிகளாக ஆக்கி வைத்திருப்பது இந்தப் பிராமண மதந்தான். இந்தப் பூமியிலிருந்து அந்த மதம் மறைந்த அன்றே, இந்தப் பூமியைப் பிடித்த ஒரு களங்கமும் நீங்கிவிடும். வெளிநாடுகளிலிருந்து நாளந்தாவிற்கு வந்துள்ள பிக்ஷுக்களின் மூலம், அவர்கள் நாட்டிலே இந்தப்
பிராமணர்களைப் போலச் சக்திவாய்ந்த மதத் தலைமை வகிக்கும் ஜாதியில்லையென்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதைக் கேள்விப்பட்டதும் அந்த நாட்டிலே ஒரு கையில் தடியும், மற்றொரு கையில் எச்சிற் பாத்திரத்தையும் தூக்கிக் கொண்டு திரியும் சண்டாளர்கள் இல்லையென்பதற்குக் காரணத்தையும் தெரிந்து கொண்டேன். பிராமணர்கள், நமது நாட்டிலே ஒன்றோடொன்று ஒட்ட முடியாதபடி பல சிறிய பெரிய ஜாதிகளைப் பிரித்து வைத்து விட்டார்கள். இவர்களுடைய மதமும் அறிவும், ராகு கேதுக்களின் நிழலைப் போன்றவையே.
நாளந்தாவில் பல தேசங்களைப் பற்றியும் புதிய புதிய செய்திகள் ரொம்பக் கிடைக்கும். ஆக ஒன்றிரண்டு வருடங்கள் சுற்றுப் பிரயாணத்திற்குப் பிறகு, சில காலம் நாளந்தாவில் சென்று தங்குவதுண்டு. ஒரு முறை ஒரு பாரசீகப்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 243 | 244 | 245 | 246 | 247 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்தப், நாட்டிலே, என்று, தூரம் - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்