முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 209
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 209
விட்டுச் செல்கிறாள். உன்னுடைய கண்கள் தலை நரைத்த-பல்லுப் போன- இடுப்புக் கூனிய பிரபாவைப் பார்க்கும் நிலைமை ஏற்பட மாட்டாது. எனது காதல், எனது அழிவற்ற அழகு, மாறா இளமை உனது கவிதைக்கு விளைநில மாயிருக்கும். அதை நீ அலட்சியப்படுத்தி விடாதே, அன்ப! குடும்பப் பிரச்னைகளுக்காகவோ அல்லது உனது தாய் தந்தையர்களின் வருத்தத்திற்கு அஞ்சியோ, நான் தற்கொலை செய்து கொள்வதாக நீ தவறாகக் கருதிவிடாதே.
உன்னுடைய கவிதைக்கு ஒரு விளைநிலம் தோற்றுவிக்க, உனது கவிதா சக்தி என்றும் இளமையுடன் விளங்க, என்னுடைய அழிவற்ற அழகும் - மாறா இளமையும் தேவை என்று கருதினேன். அதற்காகவே அந்த மாறா இளமை உணர்ச்சியை உன்னிடம் விட்டுச் செல்கிறேன், காதல! பிரபாவின் கடைசி ஆலிங்கனத்தையும், கடைசி முத்தத்தையும் ஏற்றுக்கொள்.”
இந்தக் கடிதத்தைப் படித்து முடிக்க விடாதபடி, கண்ணீர் பலமுறை மறைத்தது. அடிக்கடி கண்ணீரைத் துடைத்துக் கொண்டே ஒருவாறு கடிதத்தைப் படித்து முடித்தான். முடித்ததும் ஓலை நழுவிக் கீழே விழுந்தது. அவன் அப்படியே அயர்ந்து கட்டிலிலே உட்கார்ந்து விட்டான். அவன் மனம் செயலற்று நிலைத்துவிட்டது. இதயத்தின் துடிப்பும் மந்தமடைந்து விட்டது. கற்சிலை போல் அசைவற்று இருந்தான். நீண்ட நேரம் காத்துப் பார்த்த பிறகு, பிரபாவின் தாயும் தந்தையும் அருகே வந்தார்கள். அஸ்வகோஷின் நிலைமையைப் பார்த்ததுமே, அவர்களுக்குப் பலத்த சந்தேகம் உண்டாகி விட்டது. கீழே கிடந்த ஓலையை எடுத்துப் படித்தனர். தாய் கூச்சலிட்டு மூர்ச்சித்து விழுந்தாள். தத்தமித்திரரின் கண்கள் தடையற்ற நீரருவியாய் விட்டன. இவை எதையும் உணராமலே, கற்சிலையாய் இருந்தான், அஸ்வகோஷ். அவன் நிலையைப் பார்த்து பேசாமலேயே திரும்பிச் சென்றனர் தாயும் தந்தையும். பொழுது கழிந்தது; இரவு வந்தது; அதுவும் போயிற்று. ஆனால் அஸ்வகோஷ், கண்ணீர் உகுக்கும் கற்சிலையாய் அப்படியே அசைவற்று இருந்தான். மறுநாள் காலையில் அவன் சிறிது தன்னுணர்வு பெற்றிருப்பதைக்
கண்ட பிரபாவின் தாய், “மனம் எப்படி இருக்கிறது, மகனே!“ என்று கேட்டாள்.
“அம்மா! இப்பொழுது எல்லாம் சரியாகிவிட்டது. பிரபா என்னிடம் ஒப்புவித்துச் சென்றுள்ள வேலையை நான் பூர்த்தி செய்ய வேண்டும். என்னுடைய கடமையை நான் உணரவில்லை. அவள் அறிந்திருந்தாள். ஆகவே எனது கடமையை நினைவூட்டிச் சென்றாள். அவள் உயிரை அழித்துக் கொள்ளவில்லை; எனக்குத் தானமாகத் தந்து சென்றாள். அந்த உயிர்த்தானத்தை உயிரழிவாக மாற்றிவிட மாட்டேன்.”
அஸ்வகோஷ் எழுந்து புறப்பட்டான். அதைப் பார்த்த தாய், “எங்கு செல்கிறாய், மகனே?” என்று கேட்டாள்.
“பிக்ஷு சிரேஷ்டர் தர்மரட்சிதரைச் சந்திக்க வேண்டும். அப்பால் சரயூவையும் போய்ப் பார்க்க விரும்புகிறேன்.”
“பிக்ஷு தர்மரட்சிதர் உனக்காகக் கீழே காத்துக் கொண்டிருக்கிறார். சரயூவைப் போய்ப் பார்க்க நானும் வருகிறேன்.” இதைச் சொல்லும்பொழுது தாயின் குரல் தழுதழுத்தது.
அஸ்வகோஷ் கீழே சென்று பிக்ஷு சிரேஷ்டர் தர்மரட்சிதருக்கு
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 207 | 208 | 209 | 210 | 211 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாய், கீழே, அஸ்வகோஷ், அவன், இருந்தான், பிரபாவின், என்று, மாறா, உனது, நான், எனது - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்