முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 142
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 142
தெரியும்.”
“குசீனாரா மல்லர்கள் உன்னுடைய குணங்களை அறியவில்லை யாக்கும். இதை நான் நம்ப முடியாது. லிச்சவி*க் குலத்தலைவர் இங்கு வந்து உன்னோடு தங்கியிருந்த போது, அவர் வாயார உன்னுடைய குணாதிசயங்களைப் புகழ்ந்ததை இவர்களும் கேட்டுக்கொண்டுதானே இருந்தார்கள்?”
“மல்லிகா! என்னுடைய திறமையைத் தெரிந்துகொண்டிருப்பதினால் தான், இந்த மல்லர்கள் என்மீது பொறாமைப்பட ஆரம்பித்திருக்கிறார்கள். திறமைசாலியாகவும் எல்லோருடைய அன்பிற்கும் பாத்திரமானவனாகவும் இருப்பது தான் பொறாமையைத் தூண்டிவிடுவதற்கு முக்கிய காரணம். என்னைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால், நான் தட்சசீலத்திலே கற்றவித்தைகள் யாவற்றையும் இந்த மல்லர்களின் சேவையிலே உபயோகிக்க முடியாமற்போகிறதே என்றுதான் கவலைப்படுகிறேன். கோசல அரசனும், மகத மன்னனும், வைசாலி லிச்சவியர்களைத் தங்களுக்குச் சமமாகக் கருதுகின்றனர். ஆனால், கோசல தேசத்து அரசனை நம்முடைய குசீனாரா மல்லர்கள் தங்களுக்கு மேலானவனாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். பாவா, அனூபியர், குசீனாரா முதலிய ஒன்பதுமல்ல கணங்களையும் (சமூகம்) ஒன்றாக இணைத்து, லிச்சவியர்களைப் போன்று ஒரு பெரிய பலமுள்ள மல்ல சமூகத்தைத்
தோற்றுவிக்க வேண்டும் என நான் திட்டமிட்டேன். என்னுடைய திட்டம் நிறைவேறினால், மன்னன் பிரசேனஜித்தன் மல்லர்களை நிமிர்ந்து பார்க்கக் கூட யோசிப்பான். அது நிறைவேற முடியாமல் போகிறதே என்ற கவலைதான் எனக்கு.”
பந்துலனுடைய அழகிய முகத்திலே கவலையின் ரேகைகள் படர்வதைப் பார்த்த மல்லிகா, அவனுடைய கவனத்தை வேறு பக்கம் திருப்ப விரும்பி,
“பந்துல்! உன்னுடைய நண்பர்கள் வேட்டைக்குப் போவதற்கு உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்களே? நானும் கூட வர விரும்புகிறேன். நடந்து போவதா அல்லது குதிரையிலா?”
“குதிரைமீது ஏறிக்கொண்டு மரை வேட்டையாட முடியாது மல்லிகா! பாதம் வரை தொங்கும் உன்னுடைய ஆடை, மூன்று நான்கு முழ தூரம் பறக்கக் கூடிய மேலாடை, நிலையற்றுக் கருநாகம் போல இங்குமங்கும் ஆடிக் கொண்டிருக்கும் கூந்தல், இவைகளைக் காற்றிலே பறக்கவிட்டுக் கொண்டு, புதர்கள் நிறைந்த வனத்திலே வேட்டையாடுவதற்குக் கிளம்பிவிட்டாயா?”
“ஏன், இவைகள் உனக்குப் பிடிக்கவில்லையா?”
“எனக்கா பிடிக்காது? மல்லிகா! உன்னோடும் உன் பெயரோடும் ஒட்டியிருக்கும் எந்தப் பொருளும் எனக்கு இனியவையே. ஆனால் வேட்டையாடுவதற்குப் புதர்கள் அடர்ந்த வனத்திலே ஓட வேண்டியிருக்குமே!”
“இதோ, உனக்கு முன்னாலேயே இவைகளை வரிந்து கட்டிக்
____________________________________________________
*லிச்சவி வைசாகப் பிரதேசத்தில் வாழ்ந்த ஒரு ஆரிய வம்சம். பின்னால் கோசலம், மகதம், நேபாளம் இங்கு இவர்களுடைய ராஜ்யம் இருந்திருக்கிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 140 | 141 | 142 | 143 | 144 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உன்னுடைய, நான், மல்லிகா, ஆனால், மல்லர்கள் - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்