மருதகாசி பாடல்கள் - பக்கம் - 160

வெள்ளிப் பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகுதூரம்-இது உள்ளபடி இந்த உலகம் உணர்த்தும் ஒரு பாடம்! (வெள்ளி) பிள்ளை யெனும் பந்த பாசத்தை தள்ளி பிரிந்தோடும்-தன் உள்ளத்தை இரும்புப் பெட்டகமாக்கித் தாள் போடும்! இல்லாதவர் எவரான போதிலும் எள்ளி நகையாடும்-இணை இல்லாத அன்னை அன்புக்குக் கூட சொல்லாமல் தடை போடும் (வெள்ளி) வெள்ளத்தினால் வரும் பள்ள மேடு போல் செல்வம் வரும் போகும்-இதை எள்ளளவேனும் எண்ணாத கஞ்சர்க்குத் துன்பம் வரவாகும்! கள்ள மில்லாத அன்புச் செல்வமே என்றும் நிலையாகும்! கஷ்டம் தீரும் கவலைகள் மாறும் இன்பம் உருவாகும்! (வெள்ளி) |
சபாஷ் மாப்பிளே-1 961
இசை: K. V. மகாதேவன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 158 | 159 | 160 | 161 | 162 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 160 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - வெள்ளி