கம்பராமாயணம் (உரைநடை) - யுத்தகாண்டம்
‘இலக்குவன் இறந்திருப்பான்’ என்ற நம்பிக்கை யில் இந்திரசித்து அரண்மனையில் தங்கிவிட்டான். நாகங்களின் பிணிப்பில் அவர்கள் அகப்படவில்லை என்ற செய்தி இராவணனுக்கு எட்டியது; மகனை அவன் அறிவீனத்துக்காகக் கடிந்து கொண்டான்.
மறுநாள் போரில் இந்திரசித்து, வேகமாய்ச் செயல் பட்டான்; இலக்குவனொடு நேருக்கு நேர் சந்தித்துப் போ செய்தான்; நாகபாசம் ஏவித் தன் ஆகத்தைக் கட்டியவனை அயன்படை கொண்டு அழிக்க இலக்குவன் விரும்பினான் இராமன் “அஃது அறமன்று” என்று கூறித் தடுத்து நிறுத்தினான்; ‘அதே அயன்படையை இலக்குவன் மீது எறிவது’ என்று தீர்மானித்து, இந்திரசித்துக் களம்விட்( வெளி யேறினான்; ‘அவன் அஞ்சி ஒடிவிட்டான்’ என்று கணக்கைத் தவறாய்ப் போட்டுவிட்டனர்; அவன் அரண் மனைக்குச் சென்று, தந்தையைச் சந்தித்துத் திட்டத்தை பற்றிக் கூறினான்.
அயன்படை, பெறுதற்கு வேள்வி செய்ய வேண் இருந்தது; அதுவரை மகோதரனைப் போருக்கு அனுப்பி இலக்குவனைக் களத்தில் மடக்கி வைத்தனர்.
மகோதரன் இலக்குவனுக்கு ஆற்றாமல் ஒடி விண்ணில் ஒளிந்தான்; அங்கிருந்து ஐராவதம் என்னும் யானை மீது அமர்ந்து இந்திரனைப் போல வேடம் புனைந்து, முனிவர்களையும் தேவர்களையும் வஞ்சித்து அழைத்துக் கொண்டு மண்ணுலகம் வந்து, இலக்கு வனோடு போர் தொடுத்தான்; வானவரோடு போர் செய்தலை வானரங்கள் விரும்பவில்லை; தேவர்கள் ஏன் தன்னை எதிர்க்கிறார்கள்?’ என்பது இலக்குவனுக்குப் புரியாத புதிராய் இருந்தது.
செயவிழந்த இந்நேரத்தில் அயன்படையை இந்திரசித்து ஏவினான். அப்படையினின்று அளவு மிக்க அம்புகள் வெளிப்பட்டு, வானரர்மீதும் ஏனைய படைஞர் மீதும் பாய்ந்தன. அவ் அம்புகளுக்கு ஆற்றாமல் அவர்கள் அயர்ந்து விழுந்தனர்; இலக்குவனும் மயக்கமுற்றுக் கீழே சாய்ந்தான்: மூச்சுபேச்சு அற்று விழுந்தவன் போல் காணப்பட்டான்; போர்க் களமே பிணக்களமாய்க் காட்சியளித்தது.
இந்திரசித்து தன் தந்தையிடம் சென்று, அயன் படையால் நேர்ந்த அழிவுகளைச் சொல்லி, ‘இராமன் ஒருவனைத் தவிர அனைவரும் துறக்கம் புக்கனர்’ என்றான்; இலங்கையர்கோன் உள்ளம் பூரித்தான்; ‘போர் முடிந்தது’ என்று உவந்தான்; ‘தனியனான இராமனை இனி எளிதில் சந்திக்க முடியும்’ என்று நினைத்தான்.
இராமன் போர்க்களம் சென்று களம்பட்ட வானரங் களையும், சுக்கிரீவனையும், அனுமன், சாம்பவான் முதலிய படைத்தலைவர்களையும், தம்பி இலக்குவனை யும் கண்டான்; ‘அனைவரும் மடிந்துவிட்டனர்’ என்று நம்பிவிட்டான், புலம்பி, நைந்து, செயலிழந்து மயக்கம் உற்றான்; செத்தாருள் ஒருவனாய் மதிக்கப்பட்டான்.
செய்தி அறிந்து இராவணன் வெற்றிப் படை கொட்டச் செய்து, விழாக் கொண்டாடினான். அரக்கர் பிணம் அத்துணையையும் ஆழ்ந்த கடலில் போடச் செய்து அவர்கள் சுவடு தெரியாமல் மறைத்தான். அவர்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்பி, அஞ்சலி செய்தற்கு அடையாளம் மட்டும் அமைத்துக் கொடுத்தான்.
சீதைக்குச் செய்தி சொல்ல வைத்து அவள் மங்கல நாண் களைதற்காக மயக்கமுற்ற இராமன்முன் கொண்டு வந்து அவளை நிறுத்தினான்.
“இப்பொழுது என்ன சொல்கிறாய்?” என்ற கேள்விக் கணையை எழுப்பிவிட்டான்.
அப்பொழுதும் அவள், அதை முழுமையாய் நம்பவில்லை; உறுதிகொண்ட நெஞ்சினளாய் விளங்கினாள்; ‘வானரப்படைகள் படுவதும், இலக்குவன் விழுவதும், இராமன் கண்கலங்கி அழுவதும், உயிர் மாய்த்துக் கொள்வதும் நிகழாதன’ என்ற நம்பிக்கை இருந்தது. இராமன் உடம்பில் அடிபட்ட தழும்பு எதுவும் இல்லை, என்பதைத் திரிசடை காட்டினாள்; ‘கொண்டது மயக்கமே யன்றி மரணம் அன்று’ என்று தெளிவித்தாள்.
கைதிகளைப் பாதுகாப்பாய்ப் பார்வையிட அழைத்ததைப் போல அழைத்து வந்த சீதை மறுபடியும் சிறைக்காப்பாய் அசோகவனத்தில் அடைக்கப்பட்டாள்.
உணவுப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த வீடணன், காற்றின் போக்கில் செய்தி அறிந்து, களம் வந்து சேர்ந்தான். வடு நீங்கிய இராமன் மேனி கண்டு, அவன் இறப்பைப் பற்றிக் கடுகு அளவு ஐயமும் அவனுக்கு எழவில்லை; அரவுக் கயிற்றால் பிணிப்புண்ட நிலையில் கருடன் வந்து காத்தது போல, அயன் அம்பால் தாக்குண்டவர் மயக்கம் தீர சஞ்சீவி மருந்துச்செடி தேவை என்பதை, உணர்ந்தான்.
அனுமன் இருக்கும் இடம்தேடி, நீர் தெளித்து அவனை மயக்கம் தெளிவித்தான்; நெடுமரமாய் நின்ற அனுமன், படுகளம் பார்த்துத் திகைத்தான்; ‘சஞ்சலம் தீர்க்க அவன் சஞ்சீவிப் பருவதத்தை அடைய வேண்டும்’ என்று வீடணன் உரைத்தான்; சாம்பவான் எழுப்பப்பட்டான்; அவன் வயதில் மூத்தவன் ஆதலால் அச்செடிகள் இருக்கும் மலைக்கு வழி அறிந்தவனாய் இருந்தான்.
“ஏமகூட மலையைக் கடந்து, மாமேரு மலையை அடைந்தால், அதற்கு அப்பால் அம்மருத்து மலை தெரியும்” என்று கூறினான் அவன் கூறியவாறே அனுமனும் அம்மலைகளைக் கடந்து அரிய மருந்து மலை இருக்கும் இடம் அடைந்தான்; அதனை வாணர மகளிர் காவல் காத்திருந்தனர்; வானரத் தலைவனாகிய அனுமனுக்கு அதைத் தந்து உதவினர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
யுத்தகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - அவன், இராமன், செய்தி, வந்து, இந்திரசித்து, மயக்கம், இருக்கும், அனுமன், சென்று, கொண்டு, இலக்குவன்