கம்பராமாயணம் (உரைநடை) - யுத்தகாண்டம்
வீடணன் அடைக்கலம்
பற்றி எரிந்த நகரை மயன் என்னும் தெய்வத் தச்சன் பொலிவுடைய மாநகராக ஆக்கிப் புதுப்பித் தான்; மாணிக்கத் துண்கள் அமைந்த மணிமண்டபத் தில் சிம்மாசனத்தில் இராவணன் கொலு வீற்றிருந்தான்.
வரம்பறு சுற்றமும், மந்திரத் தொழில் நிரம்பிய அமைச்சரும், சேனைத் தலைவரும் அவன் அவைக் கண் அமர்ந்தனர். அரம்பை மாதர் கவரி வீசி அவனைச் சுகப்படுத்தினர். அடுத்து நடக்க வேண்டியதைத் தொடுத்துச் சிந்திப்பதற்குச் சற்று அயலானவரை வெளிப்படுத்தி, நெருங்கிய சுற்றத்தினரையும், அமைச்சரையும், உடன் பிறந்த தம்பியரையும் மட்டுமே நிறுத்திக் கொண்டான்.
“சுட்டது குரங்கு, கெட்டது கடி நகர்; பட்டனர் சுற்றமும் நட்பும்; கிட்டியது இழிவும் பழியும்; அழிவு செய்த அனுமன், சென்றவழி தெரியாமல் தப்பி விட்டான். இனிச் செய்யத் தக்கது யாது; “” என்ற வினாவை எழுப்பினான் இராவணன்.
“கரன் சிரத்தை இழந்தான்; சூர்ப்பனகை செவியையும் மூக்கையும் இழந்தாள்; வீரர் மனைவியர் தாலியை இழந்தனர்; சித்திர நகர் எழிலை இழந்தது; நாம் மானத்தையும் புகழையும் இழந்தோம்” என்று இழப்புகளை அடுக்கிக் கூறினான்.
மகேந்திரன், துன்முகன், பிசாசன் முதலிய படைத் தலைவர் நாடக வசனம் பேசினர்: “படை எழுப்பி எதிரிகளைத் துடைப்பதுதான் செய்யத் தக்கது” என்ற கருத்தைச் சொல்லினர்.
உடன் பிறந்த தம்பியாகிய கும்பகருணன் மட்டும் அதற்கு உடன்படவில்லை; திடமுடன் தான் கருதியதை எடுத்து உரைத்தான்; அடிப்படைத் தவற்றை எடுத்துக் கூறினான்; ‘சீதையைச் சிறை பிடித்தது இராவணன் செய்த தவறு’ என்றான்; ‘இராமனை அடைந்து மன்னிப்புக் கேட்பதுதான் பெருமை’ என்றான்; தொட்ட இடத்தில் அவளைக் கொண்டு விடுவித்தால் அது தூய செயலாகும்; அன்றி, வீரம் பேசினால் அதனையும் திறம்படச் செய்ய வேண்டும்; படை எல்லாம் கூட்டி, ஒரு சேரச் சென்று தாக்குதலே நடைமுறைக்கு ஏற்றது” என்று கூறினான்.
வயதால் இளைஞன், வாலிபப் பருவத்தினன்; இராவணன் வீரமகன் இந்திரசித்து மூத்தோர் வார்த்தை களை எதிர்த்துப் பேசினான்; “முள்ளைக் களை வதற்குக் கைநகம்போதும்; கோடரி தேவை இல்லை” என்றான்; “தான் ஒருவனே தக்க படை கொண்டு அவர்களைத் தாக்கிப் பாடம் கற்பிக்க முடியும்” என்றான்.
அறச் செல்வனாகிய வீடணன், அறிவு நிரம்பிய கருத்துகளைச் சொல்லினான்.
“சுட்டது கூன் உடைய குரங்கு அன்று; மிதிலை வந்த சனகன் மகள்” என்றான்; “சீதை கற்பு” எரிமலையாகும்; நெறி திறம்பியவரை அது சுட்டு எரிக்கவல்லது” என்று கூறினான்.
“ஆணவத்தால் அறிவு இழந்த இரணியன் எப்படி அழிந்தான்? யாரால் ஒழிந்தான்? பெற்ற மகனே அவனுக்குப் பெரும்பகைஞன் ஆனான்; “உன்னோடு உடன் பிறந்தவன் என்பதால் நீ செய்யும் கொடுமை களுக்கு எல்லாம் நான் துணைபோக வேண்டும், என்று எதிர் பார்த்தால் அது கற்பனை ஆகும்”.
“தவற்றைத் திருத்திக்கொள். பைந்தொடியாள் சீதை அவளை விட்டுவிடு; பெண்பாவம் பொல்லாதது; வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டு நீ வேதனைப்படுவதில் பொருளே இல்லை”.
“இரணியனைக் கொன்றது யார் தெரியுமா? பாற்கடலில் துயிலும் பரமன்தான்; அவன் துயில் எழுந்து துரயோர் துயர்துடைக்கப் பிறந்துள்ளான்; பகை பெரிது; மானுடரால் நீ சாகப் போகிறாய்; நீ கேட்ட வரத்தில் செய்த பிழை இது; மனிதனை மறந்து விட்டாய்; மானுடத்தின் வெற்றியை நிலைநாட்டப் பிறந்தவன் அவன்” என்றான்.
வீடணன் கூறியது, வீண்உரை என்று கருதினான் இராவணன். அரக்கர் குலத்தில் பிறந்த அவன், பெண்ணுக்காக இரக்கம் காட்டுவதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. “இனப்பற்று இல்லாத துரோகி நீ; தப்பிப் பிறந்து விட்டாய்; இனி நீ தப்பிச் சென்றால்தான் பிழைப்பாய்; பிரகலாதர் தோன்றிக் கொண்டே இருக்கின்றனர். நீ விதி விலக்கில்லை” என்றான்.
வீடணன் திருத்த முயன்றான்; திருத்துதல் தீராதாயின் பொறுத்துற வேண்டும்; இவன் கும்ப கருணன் அல்லன்; கடமை என்பது எது? என்று முடிவு செய்வதில் வேறுபாடு இருந்தது; “உடன் பிறந்தவனுக் காக உயிர் விடுவது கடமை” என்று கருதினான் கும்பகருணன், உடன் பிறந்த கொள்கைக்காக எதையும் இழப்பது என்பது வீடணன் கொள்கையாய் இருந்தது; முன்னவன் கடமை வீரன்; இவனோ அறச் செல்வன்; “தனிமனிதனுக்காகத் தன்னை இழப்பதை விட உலகப் பொது அறத்திற்காகத் தான் பணி செய்வதே செய்யத் தக்கது” என்ற கொள்கை இவனிடம் நிலவியது.
அறம் என்பது ஒன்று; அதோடு அவன் ஞானநெறியில் நம்பிக்கை உள்ளவன்; பிறப்பு என்பது பந்த பாசங்களைக் கொண்டது; இறப்பு என்பது முடிந்த முடிவு அன்று; பிறப்பு இறப்பற்ற பேரின்ப வாழ்வு. அடைதலே பிறப்பின் அடிப்படை’ என்று கருதினான்; சமயக் கோட்பாடுகள் இவனைப் பண்படுத்தி இருந்தன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
யுத்தகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - என்றான், வீடணன், இராவணன், என்பது, கூறினான், உடன், பிறந்த, அவன், கருதினான், வேண்டும், செய்த, தான், செய்யத், கொண்டு