கம்பராமாயணம் (உரைநடை) - யுத்தகாண்டம்
“குமுதம் போன்ற இதழ்களை உடையவளே! நீ தான் எனக்கு உயிர் தர வேண்டும்; உன் அடைக்கலம் நான்” என்று சொல்லிப் பழைய பாட்டைப் பாடினான்; தனக்கு இணங்குமாறு வேண்டினான்; அவள் துவண்டு, அவனை வெகுண்டு வெறுத்து ஒதுக்கினாள்.
நாடகம் தொடங்கியது; சனகன் வடிவில் வந்த அரக்கன் தன் உரையாடலைத் தொடங்கினான்.
“அன்பு மகளே! அவன் ஆசைக்கு இணங்கு; பிணங்கினால் நம் குலத்தையும் நம்மையும் அழித்து விடுவான்; நீ மனம் வைத்தால், நான் உயர் பதவிகள் பெறுவேன்; நீயும் அவனுக்குத் தேவியாவாய்; இருவர் ஆவியும் நிற்கும்; நீ சிறையிடைத் தேம்பி என்ன பயன்?” என்று அறிவுரை கூறினான்.
“மானத்தை விட்டு என்தந்தை உயிர் வாழான் ஈனச் செயலுக்கு அவன் ஒருகாலும் சம்மதியான்; முறை கெட்டு வாழும்படி உரை செய்யமாட்டான்” என்றாள் சீதை.
வாள்உருவி சனகனாய் வந்தவனைக் கொல்லக் கையோங்கினான்.
நகைத்தாள் சீதை, “நாடகம் நன்று” என்று நவின்றாள்.
“நீ என்னையும் கொல்ல மாட்டாய்; இவனையும் கொல்லப்போவது இல்லை; யாரையும் கொல்லப் போவ தில்லை; அது மட்டுமன்று; போரில் நீ வெல்லப்போவதும் இல்லை.”
“உனக்கு அழிவு நெருங்கிவிட்டது; இராமன் அம்பு நீ வரும் வழியைப் பார்த்துக் கொண்டு இருக்கிறது; புகழ் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது” என்றாள்.
மகோதரன் இடைநின்று, இராவணனைத் தடுத்தான்.
“அவசரப்பட்டு இவனைக் கொல்லாதே; நாளை நீ வெற்றிபெற்றால், சீதை உம்வசமாவாள்; அப்பொழுது தன் தந்தை எங்கே என்று அவள் கேட்பாள், அங்கை விரிக்க வேண்டி வரும்” என்று கூறினான்.
அந்நேரத்தில் கும்பகருணன் போரில் மடிந்த செய்தி இராவணனுக்கு எட்டியது; ஆறாத் துயரத்தில் ஆழ்ந்தான்; ‘தம்பியை இழந்தது ஈடு செய்ய முடியாத இழப்பு’ என்பதை உணர்ந்தான்; போர்க்களத்தை நோக்கி அவன் சிந்தனை சுழன்றது.
அங்கிருந்த திரிசடை சீதைக்கு ஆறுதல் கூறினாள்; வந்தவன் சனகன் அல்லன்; நடிப்பு, என்று கூறி அவளைத் தெளிவுபடுத்தினாள்; ‘அலைகள் ஒய்வதில்லை’ என்பதை அறிந்து அவள் தெளிவு பெற்றாள்.
இந்திரசித்துடன் போர்
தம்பியைக் களப்பலி யாக்கியபின் ‘அடுத்த தளபதி யார்?’ என்று நாடினான். இராவணன் இளைய மகன் துடிப்பு மிக்கவன், துயர் அறியாதவன்; கொட்டிலில் கட்டி வைத்த இளங்கன்று; அது துள்ளிக் குதித்தது. ஆம் அவன்தான் அதிகாயன்! அடுத்து அவன் அனுப்பட் பட்டான், இராமனுக்கு இளயவனைச் சந்தித்தான். அவனோடு தன்வீரத்தைக் காட்டி விளையாடினான் படுகளத்தில் உயிர் விட்டான்.
செய்தி அறிந்து இராவணன் செயலற்றான் அரக்கியர் இராவணன் அருமைமகன், இறந்தது கேட்டு அழுகையால் அதனை அம்பலப்படுத்தினர்; “முத்தவன் இருக்க இளையவன் மடிந்தது ஏன்? முறைமாறி நடந்து கொண்ட தந்தையிடம் சொல் மாரிபெய்து, “என்னை அனுப்பி வைக்காமல் தம்பியை அனுப்பி வைத்தது முறையா?” என்று கேட்டான் இந்திரசித்து.
“தம்பியைக் கொன்ற கொடியவன் யார்?” என்று கேட்டு அறிந்தான்; இலக்குவனைத் தன் இலக்காகக் கொண்டு போர் தொடுத்தான் இளஞ்சிங்கங்கள் களத்தில் முழக்கம் செய்தன; இடிகள் மாறிமாறி இடித்தன; மழை பெய்யவில்லை; நேருக்கு நேர் சந்தித்தால் வேருடன்தான் அழிய வேண்டும் என்பதை இந்திரசித்து உணர்த்தான்; வீரம் வளைந்து கொடுத்தது; சூழ்ச்சி முன்னால் நின்றது; விண்ணில் பறந்து, கண்ணுக்குக் தெரியாமல் மறைந்தான்; “அவன் போர்க்களத்தை விட்டுப் புறமுதுகு இட்டான்” என்று இலக்குவன் தவறாய்க் கருதினான்; இந்திரசித்தின் தித் திட்டம் அறியாது வாளா இருந்துவிட்டான்.
இராவணன் இட்ட ஆணையின்படி இலக்கு வனையும் அனுமனையும் நாகபாசம் கொண்டு பிணிக்கத் திட்டமிட்டான்; அவர்கள் சோர்வாய் இருந்த நேரத்தில் அரவக்கயிறுகள் கொண்டு இருவரையும் பிணித்து வைத்தான்; கட்டுண்டவர்கள் தப்பவழி தெரியாமல் டுமாறினர்; கயிறுகள் இறுக்கின; கழுத்தைச் சுருக்கின; இலக்குவன் திக்குமுக்கு ஆடினான்; திசை தெரியாமல் கைத்தான்; செயலற்றுத் தளர்ச்சி அடைந்தான்.
செய்தி கேட்ட இராமன், களம் நோக்கி விரைந்தான்; தம்பி நிலைகண்டு, உளம் தளர்ந்தான்; “களத்தில் தம்பியைப் பறிகொடுத்து விட்டோமே என்று ரிதவித்தான். வழி காட்டும் விழியற்றான்; இருளில் உழன்றான்; யுகமுடிவில் கடல் பிரளயம் மண்ணை மூடிக் காள்வதுபோல வேதனை அவனை வயப்படுத்திக் காண்டது. தேவர் செய்வது அறியாது திகைத்தனர்.
எதிர்பாராத விதமாய் வானத்தில் கருடன் பறந்து கொண்டிருந்தது; நிதானமாய்க் கீழே நடப்பதைக் கண்டது; சிறகுகளைக் குவித்துக் கொண்டு கீழே இறங்கியது; தன் சிறகுகளை அவர்கள் மீது விரித்துக் காற்றை வீசியது. அவர்கள் மீது கருடன் காற்று பட்டது; திருடனைத் தேள் கொட்டியதைப் போல நாகங்கள் நடுங்கின; கட்டு அவிழ்ந்து நெகிழ்ந்தன; செத்தவர் உயிர் பெற்றது போல இருவரும் விடுதலை பெற்றனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
யுத்தகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - கொண்டு, உயிர், அவன், இராவணன், தெரியாமல், சீதை, அவள், என்பதை