தர்மபுரி - தமிழக மாவட்டங்கள்
தேன்கனிக் கோட்டை :
ஓசூரிலிருந்து 25கி.மீ. தொலைவில் உள்ளது. வனத்துறையினரின் சந்தனமரக்கிடங்கு ஒன்று உள்ளது. தாலி, அஞ்செட்டி, கீழமங்கலம் வழியாக இக்கோட்டையை அடையலாம். மலைச்சரிவுகளில் மக்கள் மிகுதியாக வசிக்கின்றனர். இதைப் புதுப்பேட்டை என்பர். பழைய பேட்டையில் பெருமாள் கோவில் உள்ளது. சித்திரையில் இங்கு நடைபெறும் தேர்த்திருவிழாவுக்குப் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து கூடுவார்கள். வியாழக்கிழமைகளில் சந்தை கூடுகிறது. வன ஆராய்ச்சி நிலையம் உள்ளது. புளி, சீயக்காய், அவரை முதலியவை பல ஊர்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கேழ்வரகு, எள் போன்றவை அதிகமாக விளைகின்றன. மங்களூர் ஓடுகள் தயாரிப்பு நிலையங்கள் பல செயல்படுகின்றன. இங்குப்பட்டு நூல் உற்பத்தியும், பச்சை மூங்கிலில் குச்சி தயாரித்து ஊதுவத்தி செய்வதும் தொழில்களாக உள்ளன.
அதமன் கோட்டை :
தர்மபுரியிலிருந்து 4மைல் தொலைவில் அதமன் கோட்டை இருக்கிறது. தகடூரை ஆண்ட அதியமான் பெயரை மக்கள் அதமனாக்கி விட்டனர். கோட்டை அழிந்து விட்டது. கோட்டையில் சோமேஸ்வரர் கோயில் பெரியது. விஷ்ணு, பைரவர், அங்காளம்மன் கோயில்களும் உள்ளன. பைரவர் கோயிலுக்கு மேற்புறத்தில் சமண சிற்ப வேலை பாடுகளை ஒரு கிராமத்தில் காணலாம். கோயிலில் பல கல்வெட்டுகள் உண்டு.
அஞ்செட்டி துர்கம் :
ஓசூர் வட்டத்தில் கேளமங்கலம் ஊருக்கு கிழக்கில் சுமார் 3மைல் தொலைவில் அஞ்செட்டி துர்கம் உள்ளது. இங்குள்ள மலையின் உயரம் 3192 அடி ஆகும். சிதையுற்ற கோட்டை மலைமேல் உள்ளது. கோட்டையில் ஒரு சிவாலயம் உள்ளது.
பாகளூர் :
ஓசூரிலிருந்து சுமார் 7 1/2 மைல் தொலைவில் அகழியுடன் கூடிய பாகளூர் கோட்டை உள்ளது. கோட்டையினுள் 5 கோவில்களும் சிதைவுற்ற அரண்மனையும் உண்டு.
வீரபத்திர துர்கம் :
பாலக்கோடு-ராயக்கோட்டை சாலையில் உள்ள பீகம் பள்ளியிலிருந்து மலை படிப் படியாக உயர்ந்து சுமார் 3088 அடி உயரத்தில் காணப் படுகிறது. இதற்கு வடகிழக்கில் சந்தைப்பேட்டை கிராமம் உள்ளது. இங்கு செந்திராய சுவாமி கோவிலைக் காணலாம். இங்கிருந்து மேற்கிலுள்ள உயர்ந்த சிகரத்தில் பெரிய கட்டிடமும், வெடிமருந்துக்கிடங்கும் உள்ளன. இதற்கருகில் இராம லட்சுமண சுனை உள்ளது. இது ஆழமான பள்ளத்தாக்கில் உள்ளது.
தோப்பூர் :
தர்மபுரிக்கு 16 மைல் தொலைவில் உள்ளது இவ்வூரில் சத்திரம் ஒன்று உண்டு. கிழக்கில் மனுகொண்ட மலையின் உச்சியில் தோப்பூர் கணவாயை நோக்கி கோட்டை ஒன்று தென்படுகிறது. வாரத்தில் திங்கள் தோறும் சந்தை கூடுகிறது. இங்குள்ள ஏரிக்கு தாமஸ் மன்ரோ ஏரி என்று பெயர். இதை வனத்துறை செடி உற்பத்திக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.
உத்தான பள்ளி :
ஓசூர்-ராயக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ளது. இக்கிராமத்தின் தென்மேற்கே ஒருமைல் தொலைவில் தையராணாதுர்கம் என்னும் மலைக்கோட்டை உள்ளது. இது சுமார் 2930 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இதற்கருகில் உள்ள அணை ஒன்றுக்கு மேலாகத் தொங்கும் பாறையில் அனுமான் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
தீர்த்தாமலை |
அரூருக்கு வடகிழக்கில் சுமார் 10மைல் தொலைவில் தீர்த்தாமலை உள்ளது. இம்மலையில் பல தீர்த்தங்கள் இருப்பதால் தீர்த்தங்களின் மலை என்ற பொருளில் அழைக்கப்படுகிறது. மலையடிவாரத்தில் சிவன் கோவில் உள்ளது. இங்குள்ள செங்குத்தான மலைமீது ஏறிச் சென்றால் தீர்த்தகிரீஸ்வரர் என்னும் கோவில் உள்ளது. இங்குள்ள 11 தீர்த்தங்களில் குளிக்கலாம் கோயிலுக்கு மேற்காகச் செல்லும் குறுகிய பாதை வழியாகப் போனால், சில்ல நாயக்கரின் மலைக்கோட்டை காணப் படுகிறது. இக்கோவிலில் பல கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தர்மபுரி - Dharmapuri - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - உள்ளது, தொலைவில், கோட்டை, சுமார், தர்மபுரி, tamilnadu, இங்குள்ள, தமிழக, மாவட்டங்கள், கோவில், துர்கம், அஞ்செட்டி, உண்டு, மக்கள், தகவல்கள், தமிழ்நாட்டுத், தீர்த்தாமலை, ஒன்று, உள்ள, ராயக்கோட்டை, | , மைல், உயரத்தில், மலைக்கோட்டை, என்னும், பாகளூர், தோப்பூர், இதற்கருகில், படுகிறது, வடகிழக்கில், காணப், பைரவர், இங்கு, சந்தை, ஓசூரிலிருந்து, information, dharmapuri, districts, கூடுகிறது, அதமன், ஓசூர், கிழக்கில், காணலாம், கோயிலுக்கு, கோட்டையில், மலையின்