தர்மபுரி - தமிழக மாவட்டங்கள்
வேளாண்மை :
ஆறுகள் :
காவிரி, தென்பெண்ணை, தொப்பையாறு, வன்னியாறு, மார்க்கண்ட நதி, தோப்பூர் ஆறு, சனத்குமாரநதி, கம்பையநல்லூர் ஆறு, பாம்பாறு முதலியவை. இவ்வாறுகளால் மாவட்டத்தில் விவசாயம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
ஏரிகள் :
மழையளவு குறைவாக உள்ள மாவட்டம். காவிரி தவிர மற்ற நதிகளால் அதிக பயன் இல்லை. அதனால் ஏரியை நம்ப வேண்டிய அவசியம் உள்ளது. இங்கு கிருஷ்ணகிரி, ஓசூர், தர்மபுரி வட்டங்களில் அதிகமாக ஏரிகள் உள்ளன.
அணைகள் :
ஓசூர் வட்டத்தில் அஞ்செட்டிக்கருகில் சனத்குமார நதியில் அணைகட்டப்பட்டுள்ளது. தர்மபுரி வட்டத்தில் மாரண்டஹள்ளி அணைக்கட்டு பெரியதாக விளங்குகிறது. சின்னாறு நீர்த்தேக்கம் 1958-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதனால் 2600 ஏக்கர் நிலம் பயனடைகிறது.
மொத்த விவசாயப் பரப்பு : 4.68 ஹெக்டேர். இதில் நெல், இஞ்சி, கொள்ளு, உளுந்து, பட்டாணி, முட்டைகோஸ், பச்சைப் பயறு, துவரை, அவரை, காலிபிளவர், காராமணி, மொச்சை, சோளம், கேழ்வரகு, கம்பு, பருத்தி, நிலக்கடலை, சூரியகாந்தி, கரும்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு, ஆமணக்கு, கடுகு மற்றும் மஞ்சள் விளைவிக்கப் படுகிறது. தர்மபுரி மாவட்டம் மலர் உற்பத்தில் மூன்றாம் இடம் வகிக்கிறது. ஆண்டுக்கு 3385 மெ.டன் மலர்கள் உற்பத்தி ஆகின்றன.
நெல் :
தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி வட்டங்களில் நெல்விளைகிறது.
சோளம் :
அரூரில் சோளம் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. பெரிய மஞ்சள், செஞ்சோளம், தலைவிரிச்சான் சோளம் என்ற மூன்று இனங்கள் இங்கு பயிராகின்றன.
கேழ்வரகு :
நெல்லுக்கு அடுத்தபடியாக கேழ்வரகு ஓசூர், தாலி, பாரகோல் பகுதியில் விளைகிறது. இங்கு இ.சி. 593 ரகம் விளைகிறது. இதனுடன், கம்பு, சாமை, தினை, வரகும் விளைகிறது.
பருத்தி :
கம்போடியா பருத்தி தர்மபுரிவட்டத்தில் விளைகிறது.
கொள்ளு :
ஓசூர்-அரூர் வட்டங்கள் அதிக மகசூல் நடைபெறுகிறது.
துவரை :
கிருஷ்ணகிரி வட்டத்தில் கேழ்வரகோடு சேர்த்தும், அரூர் வட்டத்தில் எள்ளுடனும் துவரை விளைவிக்கப்படுகிறது.
உளுந்து :
அரூர் வட்டத்திலும், கிருஷ்ணகிரி வட்டத்திலும் பச்சைப்பயறு, உளுந்து, கடலை விளைகிறது.
எள் :
ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி. இப்பகுதிகளில் கொட்டை முத்துவும் விளைவிக்கப்பட்டு விளக்கெண்ணை எடுக்கப்படுகிறது.
புகையிலை :
அரூர் வட்டம். ஏலம், கிராம்பு, மிளகு, புளி :கிருஷ்ணகிரியில் விளைகிறது. இது தவிர தர்மபுரி, அரூர் பகுதிகளில் மல்லி விளைவிக்கப்படுகிறது. ஓசூரில் வாழை பயிரிடப்படுகிறது.
கால்நடைவளம் :
தர்மபுரி கால்நடை வளம் நிரம்பப்பெற்றது. இங்கு ஆடு, மாடு, கோழி, பண்ணைகள் பரந்து காணப்படுகின்றன. மேச்சேரி அல்லது மைலம்பாடி வகை ஆடுகளிலிருந்து 60 பவுண்டு ரோமம் ஆண்டுக்கு எடுக்கப் படுகிறது. மந்தியா வகை ஆடுகள் ஓசூரில் வளர்க்கப்படுகின்றன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தர்மபுரி - Dharmapuri - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தர்மபுரி, விளைகிறது, ஓசூர், கிருஷ்ணகிரி, அரூர், tamilnadu, மாவட்டங்கள், வட்டத்தில், தமிழக, இங்கு, சோளம், பருத்தி, விளைவிக்கப்படுகிறது, தகவல்கள், தமிழ்நாட்டுத், உளுந்து, துவரை, கேழ்வரகு, கம்பு, ஆண்டுக்கு, | , ஓசூரில், வட்டத்திலும், படுகிறது, மஞ்சள், அதிகமாக, காவிரி, information, districts, dharmapuri, ஏரிகள், மாவட்டம், நெல், வட்டங்களில், அதிக, தவிர, கொள்ளு