தர்மபுரி - தமிழக மாவட்டங்கள்
பெண்ணாகரம் :
சுமார் 2,00,000 மக்கள் தொகை கொண்ட இவ்வூராட்சி ஒன்றியத்தில் 35 ஊராட்சிகள் அடங்கியுள்ளன. இவ்வூர் தர்மபுரிக்கு 19 மைல் தொலைவில் அமைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை சந்தை நாள். அஞ்செட்டி காடுகளிலிருந்து மூங்கில் இங்குதான் சேமித்து வைக்கப்படுகின்றன. ஒகனக்கல் - பெரும்பாலை செல்லும் வழியில் உள்ளது இவ்வூர்.
மொரப்பூர் :
45 ஊராட்சிகள் கொண்ட இவ்வொன்றியத்தில் மக்கள் தொகை : 1,50,000. இங்கு இரயில் வசதி உண்டு. இவ்வொன்றியத்தில் ஈச்சம்பாடி, கடத்தூர், கம்பய நல்லுர் முதலானவை முக்கிய ஊராட்சிகளாகும். மொரப்பூருக்கு அருகில் உள்ள தொட்டம்பட்டியில் ஒருகோடி மூலதனத்தில் இரும்பு ஆலை உள்ளது.
பாப்பிரெட்டிப்பட்டி :
மொத்த ஊராட்சிகள் 21. மக்கள் தொகை 1,00,000; மலைவாழ்மக்கள் 13,000 பேர் உள்ளன. பூதக்காடு, மஞ்சவாடி, மேலாயனுர், பி.பள்ளிப்பட்டி, பட்டுக்கோணாப்பட்டி சித்தேரி முதலிய ஊராட்சிகளில் மலைவாழ் மக்கள் அதிகமாக வாழ்கின்றன.
தளி :
50 ஊராட்சிகள் அடங்கியது. குறிப்பிடத்தக்க ஊராட்சிகள் : அஞ்செட்டி, நாட்ரா பாளையம்; இவ்வூர் ஓசூரிலிருந்து 16மைல் தொலைவில் உள்ளது. கோட்டை தகர்க்கப்பட்டு விவசாயம் செய்யப் பட்டு வருகிறது. கல்வி, வாணிகம், மருத்துவத்தில் சிறந்து விளங்குகிறது. சனிக்கிழமை சந்தை கூடுகிறது. சந்தையில் காட்டுப் பொருள்கள், துணிவகைகள், நல்ல காய்கறிகள் விற்கப் படுகின்றன. இங்கிருந்து பெங்களூருக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்வூர் உடல் நலத்திற்கு ஏற்றது.
கேளமங்கலம் :
தற்போது கீழமங்கலம் என்று அழைக்கப்படுகிறது. ஓசூரிலிருந்து 15மைல் தொலைவில் உள்ளது. இவ்வூர் மாட்டு சந்தைக்குப் பெயர் பெற்றது. ஆனெக்கல். தேன்கனிக் கோட்டைப் பகுதிகளிலிருந்து இங்கு மாடுகள் விற்பனைக்கு வருகின்றன. 1673 இல் குமார ராஜா தளவாய் என்பவரால் கட்டப்பட்ட பெரிய பேளூர் அணைக்கட்டு உள்ளது. இங்கு கேழ்வரகு, எள் மிகுதியாக விளைகிறது.
சூலகிரி :
ஊரின் கிழக்கே மூன்று சிகரங்கள் காணப்படுவதால் இப்பெயர் பெற்றுள்ளது. இம்மலையின் உயரம் சுமார் 2895 அடி. சூலகிரி பஞ்சாயத்து ஒன்றியத்தின் தலைமையகமாக இருப்பதால், கல்வி, மருத்துவம், வணிக இடமாகவும் திகழ்கிறது. இங்கு வெள்ளிக் கிழமை சந்தை கூடுகிறது. இது பாளையப்பட்டாக இருந்தவூர். ஊருக்கு மேற்கில் இரண்டு மைல் தொலைவில் மங்களூர் ஓடுகள் தயாரிக்கும் நிறுவனங்கள் கம்மன் தொட்டி என்ற பகுதியில் நடந்து வருகிறது.
காவேரிப்பட்டணம் :
கிருஷ்ணகிரிக்கு தெற்கில் 7 1/2 மைல் தொலைவில் பெண்ணையாற்றங்கரையில் இவ்வூர் உள்ளது. மைசூர் போர்களில் சிறப்பிடம் பெற்றது. நல்லெண்ணெய் உற்பத்தி மிகுதியாக இவ்வூரில் நடைபெறுகிறது. இத்தொழிலில் வாணிபச் செட்டியார்கள் ஈடுபட்டுள்ளனர். இங்குள்ள கோட்டையினுள், கோட்டை வெங்கட்ரமணசாமி கோயில் உள்ளது. இங்கு ஆய்வு மேற்கொள்ளப் பட்ட போது, இடிந்த பல கட்டிடப்பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பர்கூர் :
கிருஷ்ணகிரிக்குத் தெற்கில் ஆறுமைல் தொலைவில் பர்கூர் உள்ளது. திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி இரயில் பாதையிலும், திருப்பத்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலைக் கருகில் இவ்வூர் அமைந்திருக்கிறது. இங்கு மாங்காய், தேங்காய்க்கு பெயர் பெற்றவூர். வியாழக்கிழமை சந்தை இங்கு கூடுகிறது. பட்டுநூல் தயாரிப்பில் இவ்வூர் சிறந்து விளங்குகிறது.
வேப்பனப்பள்ளி :
கிருஷ்ணகிரியிலிருந்து 14 மைல் தொலைவில் உள்ளது. பஞ்சாயத்து ஒன்றிய தலைநகர். மார்கண்ட நதியின் கரையில் அமைந்துள்ளது. புதன் தோறும் சந்தை கூடுகிறது. காய்கறிகள், போர்வைகள் வாங்க ஏற்ற இடம். மண்பானைகள் செய்வதும், கயிறு திரித்தலும் சிறப்புத் தொழில்களாக விளங்குகின்றன. பெண்ணையாறு, மார்கண்டநதி இரண்டிலும் மார சமுத்திரம், பனை பள்ளி, வேப்பன பள்ளி, நடுசோலை ஹென்னு கொள்ளு முதலிய இடங்களில் சிறு அளவில் அணைகள் கட்டப்பட்டு விவசாயம் செய்யப்படுகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தர்மபுரி - Dharmapuri - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - உள்ளது, இவ்வூர், தொலைவில், இங்கு, ஊராட்சிகள், சந்தை, தமிழக, தர்மபுரி, கூடுகிறது, மக்கள், மைல், மாவட்டங்கள், tamilnadu, தொகை, தமிழ்நாட்டுத், தகவல்கள், காய்கறிகள், விளங்குகிறது, பெற்றது, செய்யப்படுகிறது, பெயர், பள்ளி, மிகுதியாக, பர்கூர், தெற்கில், சிறந்து, திருப்பத்தூர், சூலகிரி, பஞ்சாயத்து, | , இவ்வொன்றியத்தில், கொண்ட, அமைந்துள்ளது, சுமார், information, dharmapuri, districts, அஞ்செட்டி, செல்லும், விவசாயம், வருகிறது, கோட்டை, ஓசூரிலிருந்து, இரயில், முதலிய, கல்வி