வாமன புராணம் - பகுதி 13 - பதினெண் புராணங்கள்
அந்தகன் தோல்வி
பிரகலாதன் எவ்வளவு சொல்லியும் அந்தகன் புத்திமதி கேட்கவில்லை. பார்வதியை மணந்து கொள்ள வேண்டும் என்ற அவன் எண்ணம் மாறவில்லை. சம்பரன் என்ற அசுரனை சிவனிடம் தூது அனுப்பினான். சிவனிடம் சென்ற சம்பரன் “எங்கள் அரசன் அந்தகன் மூன்று லோகத்திற்கும் தலைவன். அவன் அதிகாரத்தின் கீழ்தான் மந்தர மலை இருக்கிறது. இதில் நீங்கள் வாழ விரும்பினால் பார்வதியை எங்கள் அரசிடம் ஒப்படையுங்கள் என்று கூறினான். இதைக் கேட்ட சிவன், “எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. நீ சென்று பார்வதியைக் கேட்டுவிடேன்” என்று கூறினார். சம்பரன் பார்வதியைப் பார்த்துக் கேட்க, அவர் சிவனும், அந்தகனும் போரிட வேண்டும் என்றும், வெற்றி பெறுபவரை மணந்து கொள்வதில் தனக்கு ஆட்சேபணை இல்லை என்றும் கூறினார்.
சம்பரன் சென்று அந்தகனிடம் நடந்தவற்றைக் கூற, அவன் போருக்குத் தயாரானான். மாபெரும் படையைத் திரட்டிக் கொண்டு மந்தர மலைக்கு வந்தான். சிவனுடைய கணங்கள் நந்தியின் தலைமையில் போர்புரிய வந்தன. மருத்துக்கள், ருத்திரர்கள், ஆதித்தர்கள் ஆகிய அனைவரும் சிவன் பக்கம் நின்றனர். விஷ்ணுவின் படைகளும், சக்கரமும் இப்பக்கத்தில் நின்றன. போர் தொடங்கியவுடன் நந்தியும் கணங்களும் அந்தகன் படைகளை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தன. ஆனால் ஒர் அதிசயம் நிகழ்ந்தது. கொல்லப்பட்ட அனைவரும் மீண்டும் போராட வந்தனர். சுக்ராச்சாரியின் சஞ்சீவினி மந்திரத்தால் இறந்தவர்கள் எழுப்பப்படுவதை சிவனிடம் நந்தி கூற, சுக்கிராச்சாரியாரைக் கொண்டுவருமாறு சிவன் பணித்தார். நந்தி சுக்ராச்சாரியாரை இழுத்து வர, சிவன் சுக்ராச்சாரியாரை விழுங்கி விட்டார். சுக்ராச்சாரியார் இல்லாததால் அந்தகன் படைகள் வெகு விரைவில் காலியாயின. இறுதியில் அந்தகன் சிவனிடம் நேரிடையாகப் போரிட்டான். சிவன் அந்தகனை திரிசூலத்தால் குத்தி ஆகாயத்தில் ஏற்றிவிட்டார். சாகப்போகும் வேளையில் சிவனிடம் மன்னிப்புக் கேட்டு சிவபக்தனாக மாறிவிட்டான். அவனே மறுபிறப்பில் பிருங்கி முனிவனாகத் தோன்றினான்.
(இதற்குப் பிறகு மருத்துக்களின் கதை முன்னரே மற்ற புராணங்களில் கொடுக்கப்பட்டுள்ளதால் இங்கு எழுதப் பெறவில்லை,)
துந்துவின் கதை
(மாவலி கதையின் வேறுபட்ட கதை) தனு, காசியப முனிவர் தம்பதிகளின் மகன் துந்து என்னும் அரக்கன். அவன் பிரம்ம தேவனைக் குறித்துத் கோரத்தவம் செய்து தேவர்களால் தனக்கு மரணம் ஏற்படாதவாறு வம் பெற்றான். துந்து இந்திரனை வென்று அப்பதவியைப் பெற்றான். இந்திரன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாமன புராணம் - பகுதி 13 - Vamana Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, அவன், அந்தகன், சிவன், சிவனிடம், சம்பரன், சென்று, மணந்து