வாமன புராணம் - பகுதி 14 - பதினெண் புராணங்கள்
அதையறிந்த அரக்கன் துந்து படைத்தலைவனிடம் பிரம்ம லோகம் அடைந்து தேவர்களைத் துரத்தித் தங்க இடமின்றிச் செய்ய வேண்டும் என்றான். பிரம்மலோகம் செல்லும் வழியில் ஏற்படக்கூடிய கஷ்ட நஷ்டங்கள் பற்றி அவர்கள் எடுத்துரைத்தனர்.
அரக்கன் சுக்கிராச்சாரியாரை அடைந்து, பிரம்மலோகம் செல்ல என்ன செய்ய வேண்டும் என்று கேட்க, அவர், இந்திரன் நூறு அசுவமேத யாகங்கள் செய்து அந்தச் சக்தியை அடைந்தான் என்றார். உடனே துந்துவும் நூறு அசுவமேத யாகங்கள் செய்யும் முயற்சியில் ஈடுபட்டான்.
அப்படியானால் ஒரே நேரத்தில் நூறு அசுவமேத யாகங்களைச் செய்ய ஏற்பாடு செய்யுங்கள் என்றான் துந்து. அதற்குரிய ஏற்பாடுகள் நடைபெறும் செய்தி சத்யலோகத்தை எட்டவே, தேவர்கள் அஞ்சி நடுங்கினர். பிரம்மனிடம் சென்று முறையிட, பிரம்மன் துந்துவின் வரபலம் அறிந்தவர் ஆதலால் அவனைக் கொல்ல முடியாது, எல்லோரும் சென்று விஷ்ணுவிடம் முறையிட்டால் ஏதாவது வழி பிறக்கும் என்று கூறினார். அனைவரும் விஷ்ணுவிடம் சென்றனர். அவர்கள் குறை கேட்ட விஷ்ணு அஞ்ச வேண்டாம். துந்துவைக் கொல்ல முடியாது என்றாலும், அடக்கி வைக்கிறேன்’ என்றார்.
அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது, குள்ளன் வடிவத்தில் ஒரு இளைஞன் தோன்றினான். அதைக் கண்ட அசுரர்கள் ஒடிச் சென்று அவனைக் காப்பாற்றி துந்துவின் எதிரிலே நிறுத்தினர். துந்து, குள்ளனைப் பார்த்து 'உனக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது? என்றான்.
வாமனன் (குள்ளன்) தன் கதையைச் சொல்லத் தொடங்கினான்: “பிரபசா என்ற பிராமணனுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தனர். நேத்ரபாசா, கதிபாசா என்றும் அழைக்கப்பட்டனர். தந்தை இறந்தவுடன் பாகப் பிரிவினையில் தகராறு எழுந்தது. வீட்டின் பாதிப்பகுதி எனக்குச் சேர வேண்டும் என்று நான் கூறியவுடன் என் அண்ணன், 'குள்ளன் முழுமனிதன் அல்லன். ஆகவே அவனுக்கு ஒரு பங்கு தருவது என்பது அர்த்தமற்ற செயலாகும் என்று கூறினான். நான் பிடிவாதமாக என் பங்கைத் தரவேண்டும் என்று கேட்டதற்கு என்னைத் துக்கி ஆற்றில் எறிந்து விட்டான்” என்று கூறி முடித்தான்.
இதைக் கேட்ட துந்து, மிகவும் மனம் வருந்தி “கவலைப் படாதே! உனக்கு எவ்வளவு நிலம் வேண்டுமோ, அது எந்த இடத்தில் வேண்டுமோ அங்கு உனக்குத் தருகிறேன்” என்றான். குள்ளன் பயந்தவன் போல, உடலைச் சுருக்கி வளைத்துக் கொண்டு, “எங்கே எனக்கு இடம் கொடுத்தாலும் என் அண்ணன் பிடுங்கிக் கொள்வான். ஆகவே என் கால் அளவால் மூன்றடி நிலம் தந்தால் போதுமானது” என்றான். துந்து ஒப்புக் கொள்ள வாமனன் விஸ்வரூபம் எடுத்து பூமியை ஒர் அடியாகவும், ஆகாயத்தை ஓர் அடியாகவும் அளந்த பிறகு மூன்றாவது அடியை துந்துவின் முதுகில் வைத்து அழுத்த பூமியில் ஒரு பெரிய பள்ளம் தோன்றி அதில் துந்து வீழ்த்தப்பட்டான். அங்கு துந்து கயிற்றால் கட்டப்பட்டு, தொங்க விடப்பட்டான்.
புரூரவர்களின் வரலாறு
சந்திர வம்சாவளியின் முதல் அரசன் புரூரவன் ஆவான். அம்மன்னனின் பழைய வரலாற்றை, வாமன புராணம் பேசுகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாமன புராணம் - பகுதி 14 - Vamana Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, துந்து, என்றான், சென்று, குள்ளன், துந்துவின், அசுவமேத, நூறு, வேண்டும், செய்ய