வாமன புராணம் - பகுதி 10 - பதினெண் புராணங்கள்
நிலம் பெற்றுக் கொண்ட வாமனன் (விஷ்ணு) வலியின் நேர்மை, தியாக மனப்பான்மை என்பவற்றை மெச்சி “வரப்போகும் மன்வந்திரத்தில் நீ இந்திரனாக ஆவாய்” என்று வரம் கொடுத்துச் சென்றார்.
வெனா
(இக்கதை முன் உள்ள புராணங்களில் சொல்லப் பட்டுள்ளது,) இறந்து பாபலோகத்தில் இருந்த வெனாவைக் கொண்டு வந்து குருக்ஷேத்திரத்தில் உள்ள ‘ஸ்தானு' தீர்த்தத்தில் அவனை நீராட்ட வேண்டும் என்று கருதிய வெனாவின் மகன் பிருத்து அச்செயலைச் செய்ய முற்படும் பொழுது, வானத்தில் அசரீரி ஒன்று கேட்டது. பிருத்துவே! மிகப் பாவியான உன் தந்தை இந்தத் தீர்த்தத்தில் இறங்கினால் தீர்த்தம் முழுதும் மாசு அடைந்துவிடும். அதற்கு பதிலாக நீ இறங்கி நீராடிவிட்டுக் கொஞ்சம் தண்ணிரை எடுத்து உன் தந்தை மேல் தெளித்தால் அவன் பாவம் நீங்கும் என்றது. பிருத்து அதைச் செய்து கொண்டிருக்கும் பொழுது, ஒரு நாய் அங்கு வந்தது. அந்த நாய் பூர்வ ஜென்மத்தில் கோயில்களில் உள்ள பொருள்களைப் பாதுகாக்கும் காவலனாகப் பணி புரிந்தது. காவலனாக இருந்தும் அவனே கோயிலில் உள்ள விலையுயர்ந்த பொருள்களைத் திருடியதால் இந்த ஜென்மத்தில் நாயாகப் பிறந்திருந்தான். அந்த நாய் சரஸ்வதி முதலிய தீர்த்தங் களில் குளித்துவிட்டு இப்பொழுது குருக்ஷேத்திரத்தில் உள்ள ஸ்தானு தீர்த்தத்திற்கு வந்தது. ஆனால் நடுங்கிக் கொண்டிருந்த அந்த நாயை வெனா அன்புடன் தடவிக் கொடுத்தான். அந்த நாய் முன்னரே பல தீர்த்தங்களில் குளித்திருந்ததால் அதில் கிடைத்த புண்ணியம், வெனாவிற்கு வர, வெனா தன் பாவங்களினின்று விடுபட்டான். இதன் பிறகு வெனா சிவனை நோக்கிக் கடும் தவம் புரிந்தான். மகிழ்ச்சி அடைந்த சிவன், வெனா எதிரே தோன்றி, "தவத்தை மெச்சினேன். என்னுடன் வந்து இரு. ஆனால் நீ செய்த பாவங்களின் பலனை நீ அனுபவித்துத்தான் தீர வேண்டும். அந்தகாசுரன் என்ற அசுரனாக நீ பிறப்பாய். உன்னை நான் வந்து கொல்லும் பொழுது உன் பாவங்கள் முற்றிலும் தீர்ந்து நீ விடுதலை அடைவாய்” என்று கூறினார்.
சிவ - உமா திருமணம்
விஷ்ணுவின் ஆணைப்படி தேவர்கள் முன்னோர் களைக் குறித்துத் தவம் செய்ய முன்னோர்கள் மேனகாவைத் தந்தனர். மேனகாவை மணந்த இமவான் மூன்று பெண்களைப் பெற்றான். மூன்று பெண்களில் யார் சிவனை மணக்கத் தகுதியுள்ளவள் என்பதை அறியாத தேவர்கள் முதலில் முதல் பெண் குடிலாவை பிரம்மனிடம் அழைத்துவர, இவள் சிவனுக்கு ஏற்றவள் அல்லள் என்று பிரம்மா கூறினார். அவள் கோபித்து பிரம்மனை வசைபாட, ஆறாகப் போவாய்' என பிரம்மா சபித்தார். இரண்டாவது பெண்ணாகிய ராகினியை அழைத்து வர, முன்போலவே அவளும் பிரம்மன் சாபத்தினால் மாலை நேரமாக மாறிவிட்டாள். மூன்றாவது பெண்ணை அழைத்து வாருங்கள் என்று பிரம்மன் கூற, தேவர்கள் அவளை அழைத்து வர நெருங்கினர். அவளிடம் இருந்து வெளிப்பட்ட சக்தி தேவர்களை நெருங்க விடவில்லை. அதை வந்து பிரம்மனிடம் கூற அவளே தகுதியானவள் என்று பிரம்மன் கூறினார். (உமா அல்லது காளி என்ற இந்தப் பெண் சிவனை மணந்த கதை முன் புராணங்களில் கூறப் பட்டுள்ளது.)
விநாயகர் தோற்றம்
சிவனும், உமாவும் மந்தர மலையில் விஸ்வகர்மா அமைத்துத் தந்த மாளிகையில், அமைதியாக வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் சிவன், உமையின் மற்றொரு பெயராகிய காளி என்று கூறி அழைத்துவிட்டார். தான் கறுப்பாக இருப்பதால் தான் இப்படி அழைத்தார் என்று நினைத்து, உமாதேவி தவம் செய்யப் போனார். பிரம்மன் வெளிப்பட்டவுடன் தன்னுடைய நிறத்தை
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாமன புராணம் - பகுதி 10 - Vamana Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, உள்ள, வெனா, பிரம்மன், நாய், அந்த, வந்து, தேவர்கள், அழைத்து, கூறினார், தவம், வந்தது, சிவனை, பொழுது