வாமன புராணம் - பகுதி 8 - பதினெண் புராணங்கள்
தேவர்கள் காத்யாயனியை வாழ்த்த, தேவைப்படும் பொழுது “நீங்கள் வேண்டினால் நான் மீண்டும் வருவேன்" என்று கூறி மறைந்தாள்.
உமாவின் தோற்றம்
நாரதர், புலஸ்தியரைப் பார்த்து தேவையான பொழுது வருவேன்' என்று காத்யாயனி சொன்னாரே, எப்பொழுது மறுபடியும் வந்தார்?' என்று கேட்க, புலஸ்தியர் சொல்ல ஆரம்பித்தார்.
முன்னொரு காலத்தில் மகிஷனோடு சேர்ந்த அசுர குலத்தில் சும்ப நிசும்பர்கள் என்ற இரு சகோதரர்கள் இருந்தனர். மிக்க வரபலம் உடைய அவர்கள் தங்கள் குலத்திற்கு எதிரிகளாகிய தேவர்களை வென்று, இந்திரனை விரட்டி எல்லையற்ற கொடுமைகள் செய்தனர். செய்வதறியாத தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று தங்கள் பரிதாப நிலையை விளக்கினர். அது கேட்ட விஷ்ணு, எங்களில் யாரும் இவர்களைக் கொல்ல முடியாத அளவிற்கு வரம் பெற்றுள்ளனர். நீங்கள் அனைவரும் சென்று குருக்ஷேத்திரத்தில் பிருதுதாகா என்ற தீர்த்தத்தில் உங்கள் முன்னோர்களைக் குறித்து வேண்டுங்கள். அவர்களிடத்தில் மேனகா என்ற பெண் இருக்கிறாள். அவளை இமவானுக்கு மணமுடித்தால், அவள் வயிற்றில் உமா என்ற பெயருடன், ஒரு பெண் தோன்றுவாள். அவள் சிவனை மணந்தால் கார்த்திகேயன் என்ற குழந்தையும் தோன்றுவான்’ என்று கூற குருக்ஷேத்திரம் எங்கே உள்ளது என்று தேவர்கள் வினாவினார்கள்.
குருக்ஷேத்திரம் பற்றி…
இந்த குருக்ஷேத்திரமும், பிருத்துதாகா தீர்த்தமும் எங்கே உள்ளன என்று கேட்ட தேவர்களுக்கு விஷ்ணு சொல்ல ஆரம்பித்தார்.
பன்னெடுங்காலத்திற்கு முன்னர் ரிக்ஷா என்ற மன்னன் உலகை ஆண்டு வந்தான். அவனுடைய மகனாகிய சம்வரணன் வசிட்டரை குருவாக ஏற்றுக் கொண்டு எல்லா சாத்திரங்களையும், அரசியல் முறையையும் கற்று அறிந்தான். சம்வரணன் வேட்டைக்குச் சென்றபொழுது வைப்ரஜா என்ற வனப்பகுதியில் பல அப்ஸரஸ்கள் இருப்பதைக் கண்டார். அவர்களுள் தப்தி என்பவளைக் கண்ட வுடன் அவள் மீது எல்லையில்லாக் காதல் கொண்டான். அதன் பயனாகக் குதிரை மீதிருந்த அவன் மயங்கிக் கீழே விழும்படி ஆயிற்று. அங்கு வந்த வித்யாதரர்கள் அவன் மயக்கத்தைத் தெளியவைத்து நாட்டிற்கு அனுப்பினர். என்றாலும் சம்வரணன் தான் சந்தித்த மங்கையை மறக்கவில்லை. தப்தி சூரியனின் மகளாவாள். இருவரும் மணம் புரிந்துகொள்ள விரும்பினர்.
விஷயத்தை அறிந்த வசிட்டர் சூரியனைக் கூப்பிட்டுப் பேசித் திருமணத்தை முடித்து வைத்தார். இவர்களுக்குப் பிறந்த குழந்தைதான் குரு' என்ற பெயருடையவன். இவர்கள் பிறந்ததில் இருந்தே வசிட்டரிடம் கல்வி பயின்றனர். ஆதலின் பத்து வயதிற்குள் கற்க வேண்டிய அனைத்தும் கற்று விட்டான். குருவிற்குப் பதினாறு வயதாகும் பொழுது அவன் தந்தை, சுதாமா என்ற அரசனின் மகள் செளதாமினியை குருவுக்குத் திருமணம் செய்து வைத்தான். நாளாக நாளாக குருவின் மனத்தில் ஒர் ஆழமான எண்ணம் பிறந்தது. இதுவரை உலகத்தில் யாரும் செய்யாத காரியத்தைத் தான் செய்து, உலகம் புகழும்படித் தன் பெயரை நிலைநாட்ட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். ஒவ்வொரு இடமாகத் தேடிச் சென்று, துவைத வனம் என்ற இடத்தை அடைந்தான். பிரம்மன் வந்து தங்குவதற்கு இந்த உலகில் ஐந்து இடங்கள் உண்டு. அவை
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாமன புராணம் - பகுதி 8 - Vamana Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, சம்வரணன், அவன், அவள், சென்று, பொழுது, தேவர்கள்