முன்னுரை - பகுதி 5 - பதினெண் புராணங்கள்
யாஸ்க்கர் முனிவரின் கொள்கைப்படி புராணங்கள் என்பவை என்றோ நிகழ்ந்த நிகழ்ச்சியை இன்றுள்ள அறிவையும், அனுபவத்தையும் கொண்டு அப்பழைய நிகழ்ச்சிக்குப் புதிய விளக்கம் தருவதாகும். வரலாறு என்பது ஒரு சமுதாயத்தின் வாழ்க்கையை, நிகழ்ச்சிகளை தேனொழுக்குப் போல் சொல்வதில்லை. ஒரு நூறாண்டு வரலாற்றை எடுத்துக் கொண்டால், அதில் நிகழ்ந்த பெரிய நிகழ்ச்சிகளை மட்டும் அது குறித்துச் சொல்லும். இடையே நிகழ்ந்த சிறுசிறு நிகழ்ச்சிகள் இப்பெருநிகழ்ச்சிக்கு எவ்வாறு உதவியாக அல்லது விரோதமாக இருந்தன என்பதைக் குறிப்பிடுவதில்லை. புராணங்களில் வரும் மரபு மன்னர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அந்தந்த மன்னருடைய ஆட்சிக்காலத்தில் விரிவாக எழுதப்பட்டு வைக்கப்பட்டிருந்தன என்பது உண்மைதான். ஆனால் காலதேவனின் கொடுமையாலும், படையெடுப்பு, வெள்ளம், நெருப்பு ஆகியவற்றாலும் இவை அழிந்து விட்டன. ஆதலால் நமக்கு அவை கிடைக்கவில்லை. இன்று கிடைத்துள்ள புராணங்களும் வரலாற்று அடிப்படையில் எழுதப்பட்டவையல்ல. பெளராணிகர்களின் கைவண்ணமும் இதில் இடம் பெற்றுள்ளமையால் அவை ஒருசில மன்னர்களை அதீத ஆற்றலுடையவர்களாகக் காட்டிச் செல்கிறது. அந்த மன்னர்களின் வரலாற்றிலும் ஒரு தொடர்ச்சி காணப்படுவதில்லை.
பல புராணங்களிலும், குறிப்பாக விஷ்ணு புராணத்திலும் யவனர், சாகர்கள், கம்போஜர்கள் ஆகியவர்களைப் பொதுவாகக் குறிப்பிடுகின்றது. மார்க்கண்டேய புராணத்திலும் பிரம்மாண்ட புராணத்திலும் பாரதவர்ஷத்தின் கிழக்கில் கிராதர் நாடும் மேற்கில் யவன நாடும் தெற்கில் பொதிகை மலையும், வடக்கே இமயமலையும் எல்லைகளாகக் கூறப்பட்டுள்ளன.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முன்னுரை - பகுதி 5 - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, புராணத்திலும், நிகழ்ந்த, என்பது, வரலாற்றையும்