பத்ம புராணம் - பகுதி 8 - பதினெண் புராணங்கள்
உஞ்வலா: தந்தையே! அந்தப் பெண்ணுக்குத் தன் பாவங்களிலிருந்து வெளியேறி நற்கதி அடைய வழி உண்டா என்பதைச் சொல்ல வேண்டுகிறேன்.
குஞ்சலா: உண்டு மகனே! அவள் எல்லாவற்றையும் துறந்து காட்டிற்குச் சென்று விஷ்ணுவைக் குறித்து கடுந்தவம் இயற்றினால் அவள் உய்கதி அடைய முடியும். அவளிடத்தில் அன்பு வைத்திருக்கும் நீ நாளை அங்கு செல்லும் பொழுது, அவளைக் கண்டு இதனைச் சொல்வாயாக.
நிறம் மாறிய அன்னங்கள்
ஆலமரத்தின் மேல் குடியிருந்த கிளிக் குடும்பத்தின் தலைவன் குஞ்சலா தன் இரண்டாவது பிள்ளையாகிய சமுஜ்வலாவிடம் பேசத் தொடங்கிற்று.
குஞ்சலா (தந்தை): என் இரண்டாவது மகனே, சமுஜ்வலா! நீ எப் பக்கம் இரை தேடப் போகிறாய்? நீ ஏதாவது விசேஷத்தைக் கண்டாயா?
சமுஜ்வலா (மகன்): தந்தையே! வட திசையில் இமயத்தில் இருக்கும் மானசரோவர் என்ற ஏரிக்குத்தான் இரை தேடிச் செல்கிறேன். ஒருமுறை நான் அங்கு இருந்தபொழுது முழுவதும் கருநிறம் வாய்ந்த ஒரு பெரிய அன்னப் பறவையும், அதன் பின்னர் அதே கருநிறம் பொருந்திய பல அன்னங்களும் மானசரோவருக்குள் வந்தன. சற்று நேரத்தில் உடல் முழுவதும் வெள்ளையும், மூக்கும் காலும் கருப்பாக உள்ள சில அன்னங்கள் வந்து சேர்ந்தன. இந்தப் பறவைகள் எல்லாம் ஏரியில் நீந்தி விளையாடும் பொழுது மிகப் பெரிய ஒரு ராஜ அன்னமும், 2 துணை அன்னங்களும் மானசரோவர் உள்ளேயிருந்து புறப்பட்டு வெளியே பறந்து சென்று விட்டன. சற்று நேரத்தில் பேய் வடிவுடைய 4 பெண் பூதங்கள் மானசரோவர் கரைக்கு வந்து மிகப் பெரிய குரலுடன் ஒலமிட்டுக் கொண்டே இருந்தன. இதைப் பார்த்த எனக்குத் தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. இதுபற்றிய விளக்கங்கள் ஏதேனும் தரமுடியுமா? r
குஞ்சலா (தந்தை): மகனே! இதன் ரகசியத்தை நான் அறிவேன். இதோ உனக்குச் சொல்லுகிறேன். ஒருமுறை நாரதர் இந்திரலோகம் சென்றார். இந்திரன் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்று, நீண்ட நாட்களாக உங்களைக் காணவில்லையே, எங்கு சென்றிருந்தீர்கள்?’ என்று கேட்டான். நாரதர், தீர்த்த யாத்திரை சென்றிருந்தேன்’ என்றார். உடனே இந்திரன், 'ரொம்ப நல்லது. எல்லாத் தீர்த்தங்களையும் பார்த்த தாங்கள் அவற்றுள் மிக உயர்ந்தது எது என்று சொல்ல முடியுமா? என்று கேட்க, அனைத்தும் உயர்ந்ததுதான். ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்று கூறிவிட்டார். இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று இந்திரன் விரும்பியதால் அனைத்துத் தீர்த்தங்களையும் தன்னிடம் வருமாறு ஆணை யிட்டான். இந்திர சபையில் கங்கை, கோதாவரி, நர்மதா, சரஸ்வதி, புண்யா, காவேரி ஆகிய 58 தீர்த்தங்களுக்கும் தலைவிகளாகிய பெண்களும், பிரயாகை, வாரணாசி, அவந்தி, புஷ்கரா, மதுரா முதலிய 10 நகரங்களின் தலைவிகளும் வந்து நின்றனர். இந்திரன் அவர்களைப் பார்த்துப் பெண் கொலை, சிசுக் கொலை, பிராமணக் கொலை, பசுக் கொலை முதலிய பெரும் பாவங்களைச் செய்தவர்களுள் உங்களில் யாரிடம் வந்தால் அனைத்துப் பாவங்களையும் தீர்க்க முடியும் என்பதை எனக்குத் தெரிவிக்க வேண்டும் என்றான். அவர்கள் இத்தனையும் தீர்க்கும் ஒரே தீர்த்தத்தையோ ஒரே நகரையோ எங்களால் குறிப்பிட்டுக் காட்ட முடியாது. ஒன்றை மட்டும் சொல்ல முடியும். மிகவும் தெய்வீகமானது என்று சொல்லக் கூடியவை பிரயாகை, புஷ்கரா, அர்க்ய தீர்த்தா, வாரணாசி என்பனவாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பத்ம புராணம் - பகுதி 8 - Padma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, சொல்ல, இந்திரன், கொலை, குஞ்சலா, வந்து, மானசரோவர், மகனே, முடியும், பெரிய