கூர்ம புராணம் - பகுதி 5 - பதினெண் புராணங்கள்
விஷ்ணுவிடம் கோபம் கொண்டு, “என்னை எவ்வாறு நீ சிறை வைக்கலாம்” என்று கேட்க, விஷ்ணு, "பிரம்மனே! கோபம் வேண்டாம். உன்னுடன் சிறிது நேரம் விளையாடவே இவ்வாறு செய்தேன். மிக உயர்ந்தவராகிய உம்மைச் சிறை வைக்க யாருக்கும் தைரியமில்லை. என்னை மன்னிக்கவும்" என்று கூறி எனக்கு ஒரு வரம் தரவேண்டும். அதன்படி என்னுடைய கொப்பூழினின்று தோன்றிய நீ என்னுடைய மகன் என்றே அழைக்கப்பட வேண்டும் என்று கேட்டார். பிரம்மனும் அதற்குச் சம்மதித்து நாம் இருவரும் சமாதானமாகி விடுவோம். ஏனெனில் நாம் இருவருமே பரப்பிரம்மத்தின் பகுதிகளாவோம் என்று கூறினார்.
உடனே விஷ்ணு, 'சிவனை மறந்துவிட வேண்டா. உன்னுடைய வார்த்தைகளைக் கேட்டால் சிவன் கோபிப்பார்’ என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுதே, சிவன் அங்கு வந்தார். சடைமுடியும், மூன்று கண்களையும் கொண்ட சிவன், கையில் திரிசூலம் ஏந்தி இருந்தார். உடனே பிரம்மன் இவர் யார்? இவரைப் பார்த்தால் திடீரென்று முன்னுக்கு வந்தவன் போல் தெரிகிறது என்றார்.
விஷ்ணு, பிரம்மனைச் சமாதானப்படுத்தி, தெய்விகக் கண்களை பிரம்மனுக்குக் கொடுத்து சிவனுடைய உண்மையான சொரூபத்தைக் காணுமாறு செய்தார். பிரம்மனே! இவர் யார் என்று தெரியுமா? இவர்தான் என்றும் அழியாதவராய், ஒளிப்பிழம்பாய், ஆதியும், அந்தமும் இல்லாதவராய் விளங்கும் மகாதேவராவார். இவர்தான் சங்கரர் (மங்களம் செய்பவர்), சம்பு (நலங்களைப் பொழிபவர்), ஈசான (ஆள்பவன்) பரமேஸ்வரன் (தலைமை ஆட்சியாளர்) அனைத்திற்கும் உயிராயும், மனிதர்களின் பிரபுவாகவும், பெரிய தியானேஸ்வரராய் ஈடு இணையற்ற ஈசனாகவும் இருப்பவர் சிவனேயாவார். அவரே அனைத்தையும் ஆக்குபவர், உயிர்க்கு வினைகளை அனுபவிக்குமாறு செய்பவரும் இவரே. இந்தச் சிவனே, கால தேவனாக மாறி அனைத்தையும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்கின்றார். ஈறும் முதலும் இல்லாத இந்தச் சங்கரனே உன்னைப் படைத்தவர் ஆவார் என்று விஷ்ணு பிரம்மனிடம் பேசிய பிறகு, உண்மை சொரூபத்தைக் கண்ட பிரம்மன் சிவனைப் பிரார்த்தித்தான். பிரார்த்தனையில் மகிழ்ந்த சிவன், உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். பிரம்மன் தாங்கள் எனக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்று கூற சிவனும் அதற்குச் சம்மதித்தார்.
சிவன் விஷ்ணுவிடம் பேசத் துவங்கினார். உலகம் முழுவதும் நிறைந்திருக்கும் விஷ்ணுவே! உன்னுடைய பக்தியைக் கண்டு மெச்சினேன். என்ன வரம் வேண்டுமோ பெற்றுக் கொள் என்றார் சங்கரன். சிவன் கூறியதைக் கேட்ட விஷ்ணு, எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தவராய் சிவன் முகத்தை நேருக்கு நேர் பார்த்து பின்வருமாறு பேசலானார். "யாவருக்கும் தலைவனாய், பரப்பிரம்மத்தின் சொரூபமாய் இருக்கின்ற தங்களை நேருக்கு நேராகப் பார்த்துப் பேசும் வாய்ப்பைப் பெற்றுள்ளோம். இதைவிடச் சிறந்த வரம் வேறு என்ன இருக்கிறது? .
இதேபோல தங்களிடம் இடைவிடாத பக்தி பூண்டு நான் வாழுமாறு அனுக்கிரகம் செய்யுங்கள்.'.
அது அங்ங்னமே ஆகட்டும் என்று கூறிய சிவன் மறுபடியும் விஷ்ணுவைப் பார்த்துப் பேசலானார். “விஷ்ணுவே! எல்லாச் செயல்களையும் செய்கின்றவர் நீரே ஆவீர். தலைமையிடத்திலிருந்து அதைப் பார்க்கும் பொறுப்பு மட்டும் என்னுடையது. எல்லாவற்றிலும் நம் இருவரிடையேயும் எவ்விதமான வேற்றுமையும் இல்லை என்பது தெளிவான, நிரூபிக்கப்பட்ட ஒன்றாகும். நீரே சந்திரன், நான் சூரியன், நீரே இரவு, நான் பகல் வெளிக்குத் தெரியாத பிரகிருதி ஆவீர் நீர். நான் புருஷனாக உள்ளேன். நீரே அறிவு. நானே அதை அறிபவன். நீரே மாயையாக உள்ளீர். நானே ஈஸ்வரனாக உள்ளேன். அறிவின் மூலம் கிடைக்கின்ற சக்தி ஆவீர் நீர். அந்தச் சக்தியின்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கூர்ம புராணம் - பகுதி 5 - Kurma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, சிவன், நீரே, விஷ்ணு, நான், வரம், ஆவீர், பிரம்மன், வேண்டும், என்ன