கூர்ம புராணம் - பகுதி 4 - பதினெண் புராணங்கள்
அடுத்து பிரம்மன் பதினோரு பேரை மானசீக மக்களாக உற்பத்தி செய்தார். அவர்கள் முறையே- மரீச்சி, பிருகு, ஆங்கீர புலஸ்தியா, புலவிதலை, இரது கட்சா, அத்ரி, வசிய்யு, தர்மா என்போர் உடன் சங்கல்யா அதன் பிறகு தேவர்கள், அசுரர்கள், பித்ருக்கள், மனிதர்கள் என்ற நால்வகையினரும் படைக்கப் பட்டனர். இவர்களைப் படைத்த பிரம்மன் தன் உடலை இரண்டாகப் பிரித்து ஒர் ஆண் உருவத்தையும், பெண் உருவத்தையும் படைத்தார். சுவயம்புமனு, சத்தரூபா என்ற பெயர் கொண்ட அவர்கள் பிரியவ்ரதா, உத்தானபாதா என்ற மகன்களையும், பிரசுத்தி, அகுத்தி என்ற பெண்களையும் படைத்தனர். பிரசுத்தி, தட்சணை மணந்து இருபத்தி நான்கு பெண்களைப் பெற்றாள். அதில் பதின்மூன்று பேர், பிரம்மனின் மகனாகிய தர்மதேவனையும், சியாதி பிருகுவையும், சதி சிவனையும், சம்புதி மாரீச்சியையும், ஸ்மிருதி ஆங்கீரஸா வையும், பிரிதி புலஸ்தியரையும், ஷமா புலவிதலையும், சண்ணடி கிரதுவையும், அனுசுயை அத்ரியையும், உர்ஜா வசிட்டரையும், ஸ்வாஹா அக்னியையும், ஸ்வதா பித்ரி தேவனையும் மணந்தனர்.
பிரம்மா, விஷ்ணு, சிவன்
தேவர்களும் முனிவர்களும் விஷ்ணுவிடம், 'ஐயனே! எங்கள் குழப்பத்தை நீக்க வேண்டும் என, பிரம்மன் விஷ்ணுவின் உடலில் இருந்துதான் தோன்றியதாகக் கூறினார். பிறகு பிரம்மன் பொன் முட்டையினுள் இருந்துதான் தோன்றியதாகக் கூறினார். அதேபோல் சிவன் பிரம்மனின் கண்ணிரிலிருந்து தோன்றியதாகக் கூறினர்கள். ஆனால் நாங்கள் வேறு மாதிரிக் கேள்விப்பட்டோம். இதில் எது சரி. எது தவறு என்று தயை கூர்ந்து சொல்ல வேண்டும் என்று பணிவுடன் கேட்டனர். விஷ்ணுவும் இதில் குழப்பம் ஏற்பட எதுவுமில்லை. முதன் முதலில் பிரபஞ்ச உற்பத்தியின் பொழுது பிரம்மா பொன் முட்டையிலிருந்துதான் தோன்றினார். அதன் பிறகு ஒவ்வொரு கல்பத்திலும் ஒரு பிரளயம் ஏற்படும். அதில் பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மூவரைத் தவிர மற்றவர்கள் இறந்து போவார்கள். அதன் பிறகு மறுபடியும் பிரபஞ்ச உற்பத்தி நடைபெறும். கடைசி கல்பத்தின் முடிவில் எங்கும் நீரே நிறைந்திருக்கும். சொர்க்க லோகம், பூலோகம், பாதாளலோகம் ஆகிய அனைத்தும் நீரால் மூடப்பட்டிருக்கும். தேவர்கள், முனிவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அப்பொழுது ஆயிரம் தலைகள், ஆயிரம் கண்கள், ஆயிரம் கைகள், ஆயிரம் கால்களுடன் விஷ்ணு மட்டுமே அனந்தன் என்னும் பாம்பின் மேல் படுத்திருப்பார். நீரில் படுத்துறங்கும் விஷ்ணுவின் கொப்பூழினின்று சூரியனை ஒத்த ஒளியுடைய ஒரு பெரிய தாமரை மலர் தோன்றிற்று. அதன் மணம் எல்லாத் திசைகளுக்கும் பரவிற்று. அம் மலரிலிருந்து பிரம்மா தோன்றினார்.
அவ்வாறு தோன்றிய பிரம்மன், விஷ்ணுவைப் பார்த்து “நீ யார்?' என்று கேட்டார். விஷ்ணுவும் “நான்தான் விஷ்ணு. அனைத்திற்கும் மூலப்பொருள் நானே” என்று விடை அளித்தார். பிரம்மனை நோக்கி, “நீ யார்?' என்று கேட்டார். பிரம்மன் "நானே படைத்தல் தொழில் செய்பவன். இப் பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட அனைத்தும் என் உடம்பில் உள்ளன” என்று கூற, விஷ்ணுவும் "அப்படியா! எங்கே பார்க்கலாம்” என்று கூறி, பிரம்மாவின் உடலில் புகுந்தார். அங்கு மூன்று உலகங்கள் தேவர்கள், அசுரர்கள் மக்கள் ஆக அனைத்தையும் பிரம்மன் வயிற்றில் கண்ட விஷ்ணு, பிரம்மன் வாய் வழியே வந்து, "என் உடம்பினுள்ளும் இவைகளைக் காணலாம், நீ வந்து பார்” என்று அழைக்க பிரம்மனும் அவ்வாறே செய்தார். உள்ளே சென்ற பிரம்மன், விஷ்ணுவின் வயிற்றில் அண்ட சராசரங்களைக் கண்ட போதிலும், வெளியே வரும் வழியின்றித் தவித்தார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கூர்ம புராணம் - பகுதி 4 - Kurma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, பிரம்மன், விஷ்ணு, ஆயிரம், சிவன், பிறகு, ", விஷ்ணுவும், தோன்றியதாகக், தேவர்கள், கூறினார், பிரம்மா, விஷ்ணுவின்