பவிஷ்ய புராணம் - பகுதி 5 - பதினெண் புராணங்கள்
தேவதச்சனான விஸ்வகர்மாவின் கூற்றுப்படி ஒரு கோயிலை 300 வகைகளில் கட்டலாம். அவற்றுள் சில: மேரு அமைப்பு என்பது பல அடுக்குகளையும், பல கோபுரங் களையும் கொண்டது. மந்தர அமைப்பு என்பது பல அடுக்குகளும், ஒரு கோபுரமும் உடையது. கைலாச அமைப்பு இல்லாதது. சமுத்ரா விருந்தா, விருக்ஷா, மிருகசிம்ஹா என்பது வட்டவடிவமானதும், ஒரு அடுக்கும் உடையது. கோபுரம் இல்லாதது. பத்மா என்பது தாமரை வடிவில், ஒரே அடுக்கு உடையது. கருடன் என்பது, இதிகாசத்தில் கூறப்பட்ட கருடன் என்ற பறவை வடிவுடையது. நந்தி என்பது, எருது வடிவில் அமைப்பது. கஜப்பிருஷ்டா என்பது யானையின் பின்பகுதி போன்றது (தூங்கானை மடம்); குஹரஜா என்பது குகை வடிவில் அமைப்பது; ஹம்சா என்பது பறக்கும் அன்னப் பறவை போன்று அமைப்பது: கும்பகட்ட என்பது குட அமைப்பில் கட்டுவது; சர்வடோபாத்ர என்பது ஐந்து அடுக்குகளும், பல கோபுரங்களும், சதுரமான பீடமும் கொண்டது. சதுரஸ்ர வவ்ரிக் ஷத் சதுஷ்கோணா என்பது ஒரே ஒரு கோபுரமும், சதுரமான பீடமும் கொண்டது: அஷ்டக்ஷரா என்பது ஒரே ஒரு அடுக்கும் எட்டு கோணங்களும் கொண்டு அமைப்பது. ஷோடஷாrரா என்பது ஒரே ஒரு அடுக்கும், பதினாறு கோணங்களும் கொண்டு அமைப்பது.
விக்கிரகங்கள், பின்வரும் உலோகங்களால் செய்யப் பெறலாம். தங்கம், வெள்ளி, தாமிரம், மண், கல், மரம், எட்டு உலோகங்கள் ஆகியவை. தெய்வப்படிமங்கள் செய்தற்குரிய மரங்கள்: தேவதாரு சந்தனம், வில்வம், மா, வேம்பு, பலா, சிவப்பு சந்தனமரம் ஆகியவை.
சூரிய விக்கிரகம் கீழ்க்கண்டவாறு செய்யப்பெற வேண்டும். விக்ரகம் 84 அங்குல உயரமும், முகம் 12 அங்குல நீளமும் இருக்க வேண்டும். முகத்தில் மூன்றில் ஒரு பங்கு தாடை அமைக்க வேண்டும். மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கில் மூக்கும், நெற்றியும் அமைக்கப்படவேண்டும். கண்கள் இரண்டு அங்குல நீளமும், ஒரு அங்குல விழித்திரையும் உடையதாக இருக்க வேண்டும். விழித்திரையில் மூன்றில் ஒரு பங்கு அளவு கருவிழி அமைக்கப்பெறவேண்டும். கைகள், கால்கள், முன்னங்கைகள், தொடைகள் சம அளவாக இருக்க வேண்டும். பாதம் ஆறு அங்குல நீளமும், நான்கு அங்குல அகலமும் கொண்டிருக்க வேண்டும். மார்பு, தொடை, கண்புருவம், நெற்றி, மூக்கு, கன்னம் ஆகியவை சற்றுத் துருத்திக் கொண்டிருக்க வேண்டும். கண்கள் பெரியவையாகவும், உதடுகள் சிவப்பாகவும், முகம் தாமரை மலர் போன்றும் இருக்க வேண்டும். விக்கிரகத்தில், ஆபரணங்கள், காதணிகள், பூணூல், மாலைகள், கிரீடம் ஆகியவை அணியப் பெற வேண்டும். கைகளில் தாமரை மலரும், பொன்னால் ஆன மணிமாலையும் இருக்க வேண்டும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 12 | 13 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பவிஷ்ய புராணம் - பகுதி 5 - Bhavishya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, வேண்டும், என்பது, அங்குல, இருக்க, அமைப்பது, கோயில், ஆகியவை, நீளமும், மூன்றில், வடிவில், உடையது, கட்டப்படும், அமைப்பு, கொண்டது, அடுக்கும், தாமரை