புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 298
மகரமரிகும்பம்யாழ் மாதலவன்வில் மீனம் |
கும்பம், மகரம், சிம்மம், மிதுனம், ஆகிய நான்கு லெக்கினங்களுக்கு சாத்மீகவேளை வந்தால் அமிர்த யோகமும், தாமதவேளை வந்தால் மரண யோகமும் இது இரண்டுமல்லாத மற்ற ராக்ஷச வேளை வந்தால் சித்த யோகமுமாம். அப்படியே, கன்னி-கடகம்-தனுசு-மீனம் ஆகிய நான்கு லெக்கினங்களுக்கும் ராக்ஷசவேளை வந்தால் அமிர்த யோகமும் சாத்மீக வேளையானால் மரணயோகமும் இதுகளிரண்டுமில்லாத மற்ற தாமத வேளையானால் சித்த யோகமும் அப்படியே-துலாம்-விருச்சிகம்-மேஷம்-ரிஷபம் ஆகிய நான்கு லெக்கினங்களுக்கும் தாமதவேளையானால் அமிர்தயோகமும், ராக்ஷசவேளையானால் மரண யோகமும், இதுகளிரண்டுமல்லாத மற்ற சாத்மீக வேளையானால் சித்தயோகமும், எவ்விதமான சுபநிகழ்ச்சிகளுக்கும் அநேகர் லெக்கினங்களூக்குத் தக்க வேளைகளைப் பொருந்தப் பார்க்காத தோஷத்தால் விக்கினங்கள் நேரிடுவதை கவனிக்க வேண்டும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 294 | 295 | 296 | 297 | 298 | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 298 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் - யோகமும், வந்தால், வேளையானால், நான்கு