மருதகாசி பாடல்கள் - பக்கம் - 19
பொன்னு வெளையிற பூமியடா-வெவசாயத்தேப் பொறுப்பா கவனிச்சுச் செய்யிறோமடா உண்மையா உழைக்கிற நமக்கு-எல்லாம் நன்மைகளும் நாடி வந்து கூடுதடா...! |
(பாட்டு)
மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்டை உழுது போடு சின்னக் கண்ணு-பசுந் தழையெப் போட்டுப் பாடுபடு செல்லக் கண்ணு ஆத்துாரு கிச்சிடிச் சம்பா பாத்து வாங்கி வெதை வெதைச்சு நாத்தைப் பறிச்சு நட்டுப் போடு சின்னக் கண்ணு தண்ணியே ஏத்தம் புடிச்சு எறைச்சுப் போடு செல்லக் கண்ணு , கருதெ நெல்லா வெளையவச்சு மருதெ சில்லா ஆளெ வெச்சு அறுத்துப் போடு களத்து மேட்டிலே சின்னக் கண்ணு நல்லா அடிச்சுத் தூத்தி அளந்து போடு செல்லக் கண்ணு! பொதியெ ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சிச் சந்தையிலே விருதுநகர் வியாபாரிக்கு சின்னக் கண்ணு-நீயும் வித்துப் போட்டுப் பணத்தை எண்ணு செல்லக்கண்ணு சேத்த பணத்தைச் சிக்கனமா செலவு பண்ணப் பக்குவமா அம்மா கையிலே கொடுத்துப் போடு சின்னக்கண்ணு அவுங்க ஆறை நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு. |
மக்களைப் பெற்ற மகராசி-1957
இசை :K. V. மகாதேவன்
பாடியவர்:T. M. செளந்தரராஜன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 19 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - கண்ணு, போடு, சின்னக், செல்லக்