மருதகாசி பாடல்கள் - பக்கம் - 18
ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை!... ஏ... ஏ... என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லை!...ஆ...ஆ... ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை! என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லை! பூமியிலே மாரியெல்லாம் சூரியனாலே-பயிர் பூப்பதுவும் காய்ப்பதுவும் மாரியினாலே!-நாம் க்ஷேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே-இந்த தேச மெல்லாம் செழித்திடுது நம்ம கையாலே!....(ஏர்) நெத்தி வேர்வை சிந்தினோமே முத்து முத்தாக-அது நெல் மணியாய் விளைஞ்சிருக்குக் கொத்துக் கொத்தாக பக்குவமாய் அறுத்து அதைக் கட்டுக்கட்டாக-அடிச்சு பதரு நீக்கிக் குவிச்சு வைப்போம் முட்டுமுட்டாக! (ஏர்) வளர்ந்து விட்ட பருவப்பெண் போல் உனக்கு வெட்கமா?-தலை வளைஞ்சு சும்மா பாக்கிறியே தரையின் பக்கமா-இது வளர்த்து விட்ட தாய்க்குத்தரும் ஆசை முத்தமா?என் மனைக்கு வரக் காத்திருக்கும் நீ என் சொத்தம்மா! (ஏர்). |
பிள்ளைக் கனியமுது-1958
இசை: K. V. மகாதேவன்
பாடியவர்:T. M. செளந்தரராஜன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 18 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - இல்லை, நம்ம