மருதகாசி பாடல்கள் - பக்கம் - 163
சாமி சாமி என்று ஊரை ஏய்க்கின்ற-ஆ சாமி ரொம்ப இந்த நாட்டிலே!-ஒரு சாண் வயித்துக்காக ஆண்டவன் பேரையும் சந்திக்கிழுக்கிறாங்க பாட்டிலே-ஏ சாமியோ!-நடு சந்திக்கிழுக்கிறாங்க பாட்டிலே! (சாமி) தாடிசடைமுடி தண்டு கமண்டலம் கொண்டவனெல்லோரும் சாமி!-நல்லா பாடுபட விரும்பாத திருவோட்டுப் பரதேசிப் பயல்களும் சாமி! கூடுபொய் வீடுபொய் குடும்பம் பொய் எனப்பாடும் கேடுகெட்டவன் ஒரு சாமி! தன்குட்டு மறைய வேடம் கட்டிக் கடவுள் பெயர் குரைக்கும் நாயும் ஒரு சாமி!-இப்படி (சாமி) கட்டின பெண்டாட்டிதனை விட்டுவிட்டு ஓடிவந்த கையாலாகாதவனும் சாமி! கடனைவாங்கித் திருப்பித்தரமுடியாத காரணத்தால் காஷாயம் உடுத்தவனும் சாமி! சுட்ட திருநீறு பூசி துந்தனாவை மீட்டி வரும் துடுக்கனும் கூட ஒரு சாமி! விட்டெறிந்த எச்சிலையை வீதியில் பொறுக்கித்தின்னும் கிறுக்கனும் கூட ஒரு சாமி! இப்படி (சாமி) ஆருக்குந் தெரியாமல் பஞ்சமா பாதகம் அஞ்சாமல் தினம் செய்து ஊருக்கு நீதியை உபதேசம் செய்யும் உலுத்தப் பயலும் ஒரு சாமி! ஆருக்கும் குடியல்லோம் அஞ்சோம் நமனை என்று ஆர்ப்பாட்டம் செய்து நேருக்குநேர் வெறும் நிழலைக் கண்டு நடுங்கும் நீசப் பயலும் ஒரு சாமி! கஞ்சாக் குடிப்பனும் சாமி!-கடவுளைக் கண்டதாய்க் கதைப்பவனும் சாமி! காமியெல்லாங் கூட இங்கே சாமி!-பணம்சேர்க்க கயிறு திரிப்பவனும் சாமி! எத்தனெல்லாம் சித்தன்! ஏமாறுபவன் பக்தன்! ரோஹியெல்லாம் யோகி! பைராகி பெரும் தியாகி! |
ராஜராஜன்-1957
இசை: K. V. மகாதேவன்
பாடியவர்: T. M. செளந்தரராஜன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 161 | 162 | 163 | 164 | 165 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 163 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - சாமி