மருதகாசி பாடல்கள் - பக்கம் - 162
பார்க்காத புதுமைகளெல்லாம் கண்ணாரப் பாரடி பொம்மி கேட்காத சங்கதி யெல்லாம் காதாரக் கேளடி பொம்மி! ஆம்பளெ வந்து ஆடிப்பாடினா அவனுக்கு பைசா கெடைக்காது! அழகுப் பொம்பளெ ஆடிப்பாடினா அதுக்கு கெடைக்குது பணம் காசு! அரும்பு மீசையில் கையைப் போடுது அங்கே பாரு! ஒரு கேசு! குறும்பாப் பாத்து பல்லை இளிக்குது கூறு கெட்ட ஒரு முண்டாசு! (பார்க்காத) தெருவுக்குத் தெருவு சந்திக்கு சந்தி டிங்கி அடிக்கிற ஒரு கூட்டம்! இருக்கிற இருப்பெ பொழப்பையும் மறந்து இங்கு செய்யுமாம் ஆர்ப்பாட்டம் வரவுக்கு மிஞ்சி செலவுகள் பண்ணி மஜா தேடுற ஒரு கூட்டம் இரவு ராணிகள் வலையில் விழுந்து ஏங்கி நிக்குமாம் குரங்காட்டம்! (பார்க்காத) பரபரப்பாக இருக்கிற சமயம் பாக்கட் அடிப்பான் கில்லாடி! இருக்கிற காசை பறி கொடுத்தவனோ ஏங்கித் தவிப்பான் தள்ளாடி! சுறு சுறுப்பாக இருக்கற இடத்தில் தூங்கியே வழிவான் சோம்பேறி! சொன்னதை எல்லாம் மனசுலேவச்சு நடந்துக்க வேணும் அம்மாடி! (பார்க்காத) |
நான் சொல்லும் ரகசியம்-1959
இசை: G. ராமநாதன்
பாடியவர்: P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 160 | 161 | 162 | 163 | 164 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 162 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பார்க்காத, இருக்கிற