மருதகாசி பாடல்கள் - பக்கம் - 164
(தொகையறா)
பாடுபட்டுத் தேடிப் பணம் குவித்து மாடிமனை நிலபுலன்கள் வாங்கி வைத்து வாழ்வதனால் சுகபோகம் வந்திடுமோ? மாறாத மன நிறைவு தந்திடுமோ? |
(பாட்டு)
இருப்பவர்கள் அனுபவிக்க இருக்குது பல இன்பமே!-பணம் இருப்பவர்கள் அனுபவிக்க இருக்குது பல இன்பமே! இதையுணர்ந்து அதை எறிந்து சுகிக்க வேணும் என்றுமே! (இருப்பவர்கள்) |
(தொகையறா) .
தேவைக்கு மேல் பொருளைச் சேர்த்து வைத்துக் காப்பவரே! ஆவிபோனபின் அதனால் என்ன பலன் சொல்வீரே! |
(பாட்டு)
காலனும் வரும் முன்னே கண்ணிரண்டும் மூடுமுன்னே வாலிபம் வாழ்வில் தோன்றி வான வில்லாய் மறையு முன்னே வண்டாக ஆடிப்பாடி உலகிலே! (இருப்பவர்கள்) |
(தொகையறா)
என் அங்க நிறத்திற்குத் தங்கமும் ஈடாமோ? பொங்கும் விழிப்பார்வைக்குப் புதுவைரம் இணையாமோ? குங்கும இதழுக்குச் செம்பவழம் நிகராமோ? கோடானுகோடி பொருள் ஒரு கொஞ்சு மொழி சுவைதருமோ? |
(பாட்டு)
செங்கரும்புச் சாறெடுத்து தேனுடனே அதைச் சேர்த்து சிங்கார ரசமளிப்போம் தேடியாரும் வரும் போது! திகட்டாத இனிமை தந்து வாழ்விலே! (இருப்பவர்கள்) |
நாலுவேலிநிலம்-1959
இசை: K. V. மகாதேவன்
பாடியவர்: P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 162 | 163 | 164 | 165 | 166 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 164 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - இருப்பவர்கள், பாட்டு, தொகையறா