மருதகாசி பாடல்கள் - பக்கம் - 116
பட்டுச் சிறகடித்தே-பறக்கும் சிட்டுக் குருவிகளா!--சிறைப் பட்டுத் தவித்துருகும் பாவை என் பரிதாபம் காணீர்களா? தட்டிப் பறித்து வந்தே! - என்னை சஞ்சலக் கூட்டுக்குள்ளே!-ஒரு துஷ்டன் அடைத்து விட்டான்!-பெரும் துன்பத்தில் ஆழ்த்தி விட்டான்!- இதை விட்டுப் பறப்பதற்கோ-எனக்கு இறகுகள் ஏதுமில்லை!-என்னைத் தொட்டுக் கலந்தவர்க்கே- இதைப்போய் சொல்லிட மாட்டீர்களா? முத்துமுத்தாய் கண்ணிர்த்-துளியை முகத்தினில் சோரவிட்டே-இங்கு எத்தனை நாள் இன்னும்-நான் இவ்விதம் வாடுவதோ?-மனம் பித்துப் பிடிக்கும் முன்னே-இந்த பேதை படுந்துயரை-என். அத்தானிடத்தில் சொல்லி-அழைத்தே வந்திட மாட்டீர்களா? |
பொன்னித்திருநாள்-1960
இசை: K. V. மகாதேவன்
பாடியவர்: P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 114 | 115 | 116 | 117 | 118 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 116 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை -