சொல் |
அருஞ்சொற்பொருள் |
அசுரமணம்
|
எண்வகை மணங்களுள் வில்லேற்றுதல் , ஏறு தழுவுதல் முதலிய வீரச்செயல் புரிந்து செய்துகொள்ளும் மணம் .
|
அசுரமந்திரி
|
காண்க : அசுரகுரு .
|
அசுரர்
|
அவுணர் , நிசிசரர் , தேவர்களின் பகைவர் , இராக்கதர் ; பதினெண்கணத்துள் ஒரு பிரிவினர் .
|
அசுரவாத்தியம்
|
முரசு முதலிய பேரொலி எழுப்பும் இசைக்கருவி .
|
அசுரவைத்தியம்
|
அறுவைச் சிகிச்சை .
|
அசுரை
|
இராசி ; இருள் ; பொதுமகள் ; அரக்கியர் .
|
அசுவகதி
|
குதிரை நடை ; அவை : மல்லகதி , மயூரகதி , வானரகதி , சசகதி , சரகதி .
|
அசுவகந்தி
|
அமுக்கிரா என்னும் ஒரு மருந்துச் செடி .
|
அசாரவாசி
|
அரசனது வாயில் காப்பவன் .
|
அசாவாமை
|
தளராமை .
|
அசாவிடுதல்
|
இளைப்பாறுதல் .
|
அசாவுதல்
|
இளைப்படைதல் ; தளர்தல் .
|
அசாவேரி
|
ஒரு பண் .
|
அசி
|
படைக்கலம் ; அம்பு ; வாள் ; இகழ்ச்சி நகை , ஏளனம் ; ஆன்மா .
|
அசிகை
|
நகைத்துப் பேசும் பேச்சு .
|
அசிங்கம்
|
தகாத பேச்சு ; அழகற்றது ; ஒழுங்கற்றது .
|
அசித்தம்
|
முடிக்கப்படாதது .
|
அசித்தல்
|
உண்டல் ; அழித்தல் ; சிரித்தல் .
|
அசித்திரன்
|
கள்வன் .
|
அசித்து
|
அறிவற்ற பொருள் , சடப்பொருள் .
|
அசிதம்
|
கருமை ; சனி ; ஒரு சிவாகமம் ; வெல்லக் கூடாதது ; சிரிப்பது ; மலர்வது .
|
அசிதன்
|
வெல்லற்கு அரியோன் ; சிவன் ; திருமால் ; புத்தன் ; தந்தை ; சனி .
|
அசிதாரு
|
ஒரு நரகம் .
|
அசிதை
|
அவுரி ; சிவசத்தியின் நால்வகைப் பிரிவுகளுள் ஒன்று .
|
அசிந்தம்
|
சிந்திக்கப்படாதது ; ஒரு பேரெண் ; இறப்பு .
|
அசிந்திதன்
|
சிந்திக்கப்படாதவன் ; மனத்துக்கு எட்டாதவன் .
|
அசிந்தியம்
|
சிந்தைக்கு எட்டாதது ஒரு பேரெண் .
|
அசிப்பு
|
ஏளனச் சிரிப்பு .
|
அசிபத்திரகம்
|
கரும்பு .
|
அசிபதம்
|
தத்துவமசி என்னும் பேருரையின் மூன்றாம் சொல் .
|
அசிர்த்தல்
|
காண்க : அயிர்த்தல் .
|
அசிரத்தை
|
அக்கறையின்மை ; கவனிப்பு இல்லாமை ; ஊக்கமின்மை .
|
அசிரம்
|
உடல் ; அற்பகாலம் ; காற்று ; தவளை ; முன்றில் ; தலையற்றது , முண்டம் ; தீ .
|
அசிரவணம்
|
செவிடு , காதுமந்தம் .
|
அசிரன்
|
அக்கினி ; சூரியன் : கவந்தன் .
|
அசினம்
|
விலங்கின் தோல் ; மானின் தோல் ; தோலிருக்கை .
|
அசீதி
|
எண்பது ; ஆனி புரட்டாசி மார்கழி பங்குனி மாதங்களின் பிறப்பு .
|
அசீரணம்
|
செரியாமை ; பசியின்மை ; அழிவு படாதது .
|
அசீரியம்
|
அழியாதது .
|
அசு
|
மூச்சு ; உயிர்வளி ; துன்பம் .
|
அசுக்காட்டுதல்
|
எள்ளல் , பரிகசித்தல் .
|
அசுகுசுத்தல்
|
அருவருத்தல் ; ஐயுறுதல் .
|
அசுகுணி
|
செடிப்பூச்சி வகையுள் ஒன்று ; காதில் வரும் கரப்பான் .
|
அசுகை
|
அருவருப்பு ; ஐயம் .
|
அசுசி
|
தூய்மையின்மை , அழுக்கு ; அருவருப்பு .
|
அசுணம்
|
இசையறியும் ஒருவகைப் புள் ; கேகயப் புள் ; ஒருவகை விலங்கு .
|
அசுணமா
|
இசையறியும் ஒருவகைப் புள் ; கேகயப் புள் ; ஒருவகை விலங்கு .
|
அசுணன்
|
வெள்ளை வெங்காயம் .
|
அசுத்ததத்துவம்
|
தத்துவவகை மூன்றனுள் ஒன்று .
|
அசுத்தப்பிரபஞ்சம்
|
கலாதத்துவம் முதல் பிருதிவிதத்துவம் ஈறாகிய தத்துவம் .
|
அசுத்தமாயை
|
அசுத்தப் பிரபஞ்சத்திற்கு முதற் காரணமான மாயை .
|
அசுத்தி
|
தூய்மையின்மை , அழுக்கு ; ஆணவமலம் .
|
அசுத்தை
|
அழுக்குடையவள் .
|
அசுப்பு
|
சடுதி , விரைவு .
|
அசுபக்கிரகம்
|
தீக்கோள் .
|
அசுபகக்கிரியை
|
இறந்தார்க்குச் செய்யும் சடங்கு .
|
அசும்பு
|
கிணறு ; சேறு ; நீர்ப்பொசிவு ; சிறுதிவலை ; வழுக்குநிலம் ; அசைவு ; ஒளிக்கசிவு ; பற்று ; குற்றம் ; களை .
|
அசும்புதல்
|
நீர் ஊறுதல் .
|
அசுமம்
|
இடியேறு ; கல் ; தீத்தட்டிக்கல் ; முகில் ; மணமற்ற மலர் .
|
அசுமாற்றம்
|
சாடை ; ஐயம் .
|
அசுமானகிரி
|
மேற்கட்டி ; பந்தலின் மேலே கட்டப்படும் துணி விதானம் முதலியன .
|
அசுரகுரு
|
அசுரர்களின் ஆசிரியனான சுக்கிரன் .
|
அசுரசந்தி
|
அந்திப்பொழுது ; இரணிய வேளை .
|
அசுரநாள்
|
மூலநாள் .
|
அசுரம்
|
எண்வகை மணங்களுள் வில்லேற்றுதல் , ஏறு தழுவுதல் முதலிய வீரச்செயல் புரிந்து செய்துகொள்ளும் மணம் .
|
அசாரம்
|
சாரமற்றது ; ஆமணக்கு ; அரசவை மண்டபம் .
|