கணிதம் :: இந்தியக் கணித மேதைகள்
11.ஆரியபட்டரின் சிறப்பென்ன?
இவர் கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இந்திய வானியல் அறிஞர். கேரளாவில் பிறந்தவர். புவி வட்டமானது, தன் அச்சில் தானே சுழல்கிறது என்று முதலில் நிறுவிக் காட்டியவர். திங்கள் மறைவு, கோள் மறைவு ஆகியவற்றிற்கு அறிவியல் விளக்கம் அளித்தவர். இவர் சிறந்த கணக்கறிஞரும் ஆவார். இவர் பையின் மதிப்பை 3.1416 என்று கணக்கிட்டவர். சைன் அட்டவ னையை முதன்முதலில் வகுத்த பெருமை இவரையே சாரும். முடிவுறாச் சமன்பாடாகிய ax-by=zc என்பதற்குத் தீர்வு கண்டவர்.
12. இவரை இந்திய அரசு எவ்வாறு சிறப்பித்தது?
இந்தியா தான் முதலில் ஏவிய செயற்கை நிலாவிற்கு ஆரியபட்டர் என்று பெயரிட்டது. இது 1975 மார்ச் 19 இல் ஏவப்பட்டது.
13. ஆரியபட்டர் இயற்றிய நூல்கள் யாவை?
ஆரியபட்டியம், வராகமித்திரா, பஞ்ச சித்தாந்திகா.
14. பிஜா கணிதம் எப்பொழுது தோன்றியது?
1500 ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்கலாம்.
15. இக்கணிதத்தை உருவாக்கியவர் யார்?
இந்தியக் கணிதமேதை பாஸ்கராச்சார்யா. இவர் பிஜா கணிதம் குறித்தும் நூல்கள் எழுதியுள்ளார்.
16. பாஸ்கரரின் சிறப்பு என்ன?
கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த இந்தியக் கணக்கறிஞர். இவர் தொகை நுண்கணிதத்தை நிறுவியவர். நியூட்டன், இலய்பினிட்ஸ் இருவருக்கு முன்னரே எந்த உறுப்பை சுழியால் வகுத்தாலும் கிடைப்பது முடிவிலி (infinity) என்று உறுதியாகக் கூறியவர். இது சுழற்சிமுறை இயற்கணிதச் சமன்பாடுகளைத் தீர்ப்பதற்கு உருவாக்கப்பட்டது. இது இவர்தம் சிறந்த பங்களிப்பு. இதை மேனாட்டுக் கணித அறிஞர்கள் நேர்மாறு சுழற்சி (inverse cyclic) என்றனர். இவர் சிறந்த கணித நூல் சித்தாந்த சிரோமணி.
17. இவரை இந்திய அரசு எவ்வாறு சிறப்பித்தது?
இந்தியா தான் இரண்டாம் தடவையாக ஏவிய இரு செயற்கை நிலாவிற்கும் பாஸ்கரா என்று பெயர் அளித்தது. பாஸ்கரா - 1 1979 ஜூன் 7 இலும், பாஸ்கரா - 2 1981 நவம்பர் 20 இலும் ஏவப்பட்டன.
18. லீலாவதியின் சிறப்பென்ன?
பாஸ்கரரின் அருமை மகள் இவர். திருமணமான ஒரு வாரத்திற்குள் இவர் கணவர் இறந்துவிட்டார். பாஸ்கரர் தம் மகள் பெயரில் ஒர் இயலையே சித்தாந்த சிரோமணியில் சேர்த்திருந்தார். இது லீலாவதி கணக்குகள் எனப்படும். தம் மகள் நினைவாக இவர் இதைச் செய்தார். லீலாவதி கணக்கு தெரிந்திருந்தால், ஒரு கிளையின் இலைகளைக் கூட ஒருவர் எண்ணிவிடலாம். அந்த அளவுக்குத் துல்லியம் வாய்ந்தது.
19. பிரமகுப்தாவின் சிறப்பென்ன?
இவர் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியக் கணக்கறிஞர். சுழிச்செயலுக்குரிய விதிகளை முதன் முதலில் வகுத்தவர். ax2 + 1 = y2 போன்ற தேரப்பெறாத சமன்பாடுகளுக்குத் தீர்வு அளித்தவர். எண் புகுப்பு என்பது உயர் கணிதப் பிரிவு. இதை நிறுவியவர் இவரே. தவிர, எளிய சமன்பாடான, ax + b = 0 என்பதற்கும், ax2 + bx + c = 0 என்னும் இருபடிச்சமன்பாட்டிற்கும் தீர்வு கண்டவர்.இயல்கணிதமும், எண்கணிதமும் வெவ்வேறு பிரிவுகள் என்பதைச் சுட்டிக் காட்டியவர்.
20. வடிவ கணிதத்தில் தலைசிறந்த இந்திய அறிஞர் யார்?
ஆர்.சி.போஸ். மத்திய பிரதேசத்தைச் சார்ந்தவர். புள்ளியியலிலும் புலமை பெற்றவர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்தியக் கணித மேதைகள் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - இவர், இந்திய, சிறந்த, பாஸ்கரா, மகள், இந்தியக், முதலில், நூற்றாண்டில், சிறப்பென்ன, தீர்வு