விஷ்ணு புராணம் - பகுதி 19 - பதினெண் புராணங்கள்
இவற்றையெல்லாம் அறிந்த கம்ஸன் சனுரா, முஷ்டிகா என்ற இரண்டு மல்லர்களைத் தயார் செய்து கிருஷ்ண, பலராமனைக் கொல்ல முடிவு செய்தான். அது வெளியில் தெரியாமல் இருக்க யாகம் செய்வதாக எல்லோருக்கும் சொல்லி, அக்ருவர் மூலம் கிருஷ்ண பலராமன் இருவரையும் மதுராவிற்கு வரவழைத்தான். கிருஷ்ண பலராமர்கள் இரண்டு மல்லர்களையும் சாகடித்ததோடு 'குவலயாபீடம் என்ற கம்ஸனுடைய யானையின் கொம்புகளை உடைத்துக் கொன்று விட்டனர்.
மதுராவிற்குள் நுழைந்த பலராமனும் கிருஷ்ணனும் கம்ஸனின் சலவைத் தொழிலாளர்களைக் கொன்று அவரிடம் இருந்த சிறந்த உடைகளைப் பறித்து அணிந்து கொண்டனர். கம்ஸனுக்கு வாசனைச் சந்தனம் அளிக்கும் கூன் விழுந்த அழகிய பெண்ணின் கூனை நிமிர்த்தினர். மல்லர்களை முறியடித்த பின் கிருஷ்ணன் மேடை மீது ஏறிச் சென்று கம்ஸனின் முடியைப் பிடித்து உலுக்கி கையால் அவனைக் குத்திக் கொன்றுவிட்டான். இறந்த கம்ஸனின் உடம்பை அந்த விளையாட்டு அரங்கத்திலேயே புதைத்து விட்டனர். கம்ஸன் இறந்ததனால் அவனால் சிறை வைக்கப்பட்டிருந்த அவன் தந்தை உக்கிரசேனர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
கம்சவதம் முடிந்த பிறகு, பலராமனும் கிருஷ்ணனும் சாந்தீபன் என்ற முனிவரிடம் கல்வி கற்கச் சென்றனர். பல ஆண்டுகள் கற்க வேண்டியதை 64 நாட்களில் கற்றுக் கொண்ட அவர்கள் குருதட்சணையாக சாந்திபனுக்குப் பல காலத்திற்கு முன்னர் இறந்துபோன அவருடைய மகனை மீட்டுத் தந்தனர். இந்த மகனை மீட்க கடலின் அடியில் பஞ்சஜன்யன் என்ற அசுரனை வென்று, "பாஞ்சஜன்யம்' என்ற சங்கைக் கண்ணன் பெற்றான்.
கம்ஸன் ஜராசந்தன் என்ற மன்னனுடைய அஸ்டி, பிரப்டி என்ற இருமகள்களையும் மணந்திருந்தான். மருமகன் கொல்லப் பட்டதை அறிந்திருந்த ஜராசந்தன் பெரும் படையோடு மதுராவை எதிர்த்தான். கிருஷ்ணனுக்குத் தேவருலகத்திலிருந்து இரண்டு தேர்களும், சார்ங்கம் என்ற வில்லும், கெளமேதகி" என்ற ஒர் ஆயுதமும், எடுக்கக் குறையாத இரண்டு அம்பறாத் துணிகளும் வந்து சேர்ந்தன. இவற்றை வைத்துக்கொண்டு சகோதரர்கள் இருவரும் ஜராசந்தனைத் தோற்கடித்தனர். இதேபோல ஜராசந்தன் 18 முறை படையெடுத்துப் பதினெட்டு முறைகள் தோற்றுப் போனான்.
'கார்கியா என்ற பிராமணன் யாதவர்களால் மிகவும் அவமானப்படுத்தப்பட்டான். தென் கடற்கரைக்குச் சென்று 12 ஆண்டுகள் இரும்புத் தூள்களைத் தின்று தவம் புரிந்தான். தவத்தின் முடிவில் மகாதேவர் தோன்றி, ‘என்ன வரம் வேண்டும்? என்று கேட்க, யாதவர்களை வெல்ல ஒரு மகன் வேண்டும் என்றார். அப்படியே மகாதேவர் வரமளித்தார். கரிய நிறமுடைய ஒரு பலசாலியான பிள்ளை பிறந்தான். யவன அரசன் பிள்ளை இல்லாததால் இந்த பிராமணன் மகனைத் தன் மகனாக ஏற்றுக் கொண்டு காலயவனன்' என்ற பெயரும் தந்தான். இப்பிள்ளை
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விஷ்ணு புராணம் - பகுதி 19 - Vishnu Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, இரண்டு, கிருஷ்ண, ஜராசந்தன், கம்ஸனின், கிருஷ்ணன், கொண்டு, அந்த, கம்ஸன்