பாகவத புராணம் - பகுதி 23 - பதினெண் புராணங்கள்
யார் குரு ?
யாதவகுலத்தின் முதல்வனாகிய யாது ஒருமுறை மிகவும் கற்றவனாகிய ஒரு இளைஞனைப் பார்த்தான். “இந்த வயதில் இவ்வளவு கற்றிருக்கிறாயே உன் குரு யார்?" என்று கேட்டான். அந்த இளைஞன் கற்றுக் கொள்வதற்குக் குறிப்பாக ஒரு குருவை நாடிச் செல்ல வேண்டும் என்ற தேவை இல்லை. இதோ பார். இந்தப் பூமியின் மேல் ஆயிரக் கணக்கானோர் தம் பாதங்களால் இந்தப் பூமியை மிதித்துக் கொண்டே இருக்கின்றனர். பொறுமையோடு அத்தனை பேரையும் மன்னித்து விடுகின்றது பூமி. பூமியிலிருந்து மன்னிக்கும் குணத்தை நாம் தெரிந்து கொள்கிறோம். காற்றைப் பார். எல்லா உயிர்களுக்கும் மூச்சுக் காற்றாக உள்சென்று வெளி வருகிறது. ஆனால் எதனோடும் ஒட்டிக் கொள்வதில்லை. இதிலிருந்து பற்றற்று வாழும் வழியை அறிந்து கொள்ளலாம். ஆகாயத்தைப் பார். மேகங்கள் மூடுகின்றன. பிறகு வெளி வருகின்றன. எதனாலும் ஆகாயம் பாதிக்கப்படுவதில்லை. எந்த ஒன்றும் நம்மை பாதிக்காமல் இருப்பதை ஆகாயத்தின் மூலம் கற்றுக் கொள்ளவேண்டும். நீரைப் பார். இது அனைத்தையும் சுத்தம் செய்ய உதவுகிறது. தண்ணிரிலிருந்து தூய்மை செய்வதன் அவசியத்தை அறிந்து கொள்ளவேண்டும். நெருப்பைப் பார். நெருப்புக்கு என்று தனியான வடிவம் இல்லை. எந்தப் பொருளைப் பற்றி நிற்கின்றதோ அந்த வடிவமாக நெருப்பு ஆகிவிடுகின்றது. பரமாத்மாவுக்குத் தனியே வடிவமில்லை. அதுபோல பரமாத்மாவும் எதைப் பற்றி நிற்கின்றதோ அந்த வடிவத்தைப் பெறுகின்றது.
சந்திரனைப் பார். அது பிறைகள் தேய்வதாகவும், வளர்வதாகவும் தெரிகிறது. உண்மையில் அப்படி ஒன்றும் நடைபெறுவதில்லை. மேல் தோற்றத்தைக் கண்டு எதையும் நம்பிவிடக் கூடாது என்பதை சந்திரனிலிருந்து அறிந்து கொள்கிறோம். ஆத்மனுக்கு எவ்விதமான மாற்றமும் ஏற்படுவ தில்லை. ஏற்படுவதாக நினைப்பது ஒரு மாயையே ஆகும்.
சூரியனைப் பார். கோடையில் சமுத்திரத்திலிருந்து எடுக்கின்ற நீரை, மழைக்காலத்தில் தந்து விடுகின்றது. கற்றவர்கள் பொறி புலன்களால் அனுபவிக்கும் அனுபவங்களைத் திருப்பித் தந்துவிடுகின்றனர். தாங்களே அதை வைத்துக் கொள்வதில்லை.
இதுபோன்ற குருமார்கள் எங்கும் நிறைந்திருப்பதால் அவ்வவற்றிலிருந்து ஒவ்வொரு பாடத்தை அறிந்து கொள்ள வேண்டும். இவற்றை அறிந்து கொள்வதற்குத் தனியாக ஆசிரியர் என்ற பெயரில் ஒருவர் தேவையில்லை.
பிராமணன் யார்?
மாளவ தேசத்தில் பெருஞ் செல்வத்துடன் ஒரு பிராமணன் வாழ்ந்து வந்தான். வேளாண்மை, வாணிபம் என்ற இரண்டின் மூலமாகப் பெருஞ் செல்வத்தைச் சேர்த்த அவன் யாருக்கும் எந்த உதவியும் செய்யாத பரம உலோபியாக வாழ்ந்து வந்தான். நாளாவட்டத்தில் அவன் செல்வம் கரைந்தது. எஞ்சியதைத் திருடர்கள் கொண்டுபோய் விட்டனர். அந்தப் பிராமணன் சிந்திக்கலானான். என்னுடைய வாழ்க்கை எதைச் சாதித்தது? இந்தப் பொருட்களை எல்லாம் சதம் என்று எண்ணியது எவ்வளவு தவறு? என்ற சிந்தனையுடன், தனி ஒருவனுக்கு வேண்டிய சில பொருட்களுடன் ஒரிடம் சென்று துறவியாக வாழத் தலைப்பட்டான். பிச்சை எடுத்து வயிற்றுப் பசியைத் தணித்துக் கொண்டான். சில காலம் கழித்து அவன் வைத்திருந்த ஒன்றிரண்டு சாமான்களும் களவு போயின. அவன் பிச்சை எடுத்து வந்த உணவும் களவாடப்பட்டது. அந்த நிலையிலும் அவன் யாரையும் குறை கூறவில்லை. இப் பொருள்களில் எல்லாம் பற்று நீங்கி, பொறிபுலன்கள் அவன் வசப்பட்ட போது எதுபற்றியும் கவலைப்படாமல் இருக்கப் பழகிக்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாகவத புராணம் - பகுதி 23 - Bhagavata Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, பார், அவன், அறிந்து, அந்த, பிராமணன், இந்தப், யார்