புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 92
கேளப்பா மலை தனத்தில் சப்தகோள்கள் |
இன்னொரு கருத்தினையும் கூறுகிறேன். கேட்பாயாக! கேந்திர ஸ்தானத்திலேனும், இரண்டாமிடமான தனஸ்தானத்திலேனும் ஏழு கிரகங்கள் பொருந்தி நிற்பின் அச்சாதகன் அரச செல்வம் பெற்ற சீமானேயாவான். அவனுக்கு சேனைகளும், பரிக் கூட்டமும், வேடர் கூட்டமும் அணியாகத் திரண்டிருக்கும் என்பதோடு வைரம் முதலான நவமணிகளும் பொருந்தி நிற்பதுடன், நல்ல ரகக் குதிரைகளும் ரதங்களும் உடையவன் என்று போகமா முனிவரின் அருளாணைப்படி புலிப்பாணி கூறினேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 90 | 91 | 92 | 93 | 94 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 92 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -