முதன்மை பக்கம் » ஜோதிடம் » வேத ஜோதிடம் » புலிப்பாணி ஜோதிடம் 300 » பாடல் 212 - சந்திர மகாதிசை, கேது புத்திப் பலன்கள்
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 212 - சந்திர மகாதிசை, கேது புத்திப் பலன்கள்
தெரிந்து நின்ற சந்திர திசை கேதுபுத்தி |
மேலும், இச்சந்திர மகாதிசையில் கேது புத்தியானது, மிகவும் கலக்கத்தைச் செய்வதேயாகும். இக்கேதுவின் பொசிப்புக்காலம் ஏழு மாதம் என்பதையும் உணருக. இக்காலகட்டத்தில் ஏற்படும் பலன்களாவன: புகழ்தற்குரிய பெருத்த மார்பகத்தில் பிணியேற்படுதலும், இவர்களுக்காகப் பரிந்து நின்ற பெண்களுக்குப் பகைவர்களால் பெருநாசமும் விளைவதாகும். மேலும், பெற்ற தாய், தந்தை மற்றும் பிறந்த மகன் முதலியோரின் மரணமும் நேரும். அதிகப்பட்டுப்போன வியாதி பெருத்த விரயத்தை உண்டு பண்ணும். இச்சாதகன் காரணமின்றியே தேசாந்தரம் சென்றலைவான் என்று போகரது கருணையினால் புலிப்பாணி பாடினேன்.
இப்பாடலில் சந்திர மகாதிசையில் கேது புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 210 | 211 | 212 | 213 | 214 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 212 - சந்திர மகாதிசை, கேது புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -