புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 174
இடித்திட்டே னின்னமொன்று யியம்பக்கேளு |
நான் வேறொரு கருத்தினையும் கூறுகிறேன். நன்றாக ஆராய்ந்து அதன் பொருளை உணர்க. குற்றமில்லாத சந்திரனுக்குப் பத்தாமிடத்தில் அரசன் எனக் குறிப்பிடப்படும் குரு நிற்க, அந்த வீட்டிற்குடையவன். 1,4,7,10 ஆகிய கேந்திரத்தில் இருக்க. பெருமைக்குரியவனே, அச்சாதகன் தான், தனக்கு 5,4 ஆகிய இடங்களில் வித்தை புத்திக்குரியவர்கள் நிற்க அவன் இந்நிலவுலகில் நிலைத்த பேர் பெறுவோன் ஆவான். பெரிய படையை நடத்திச் செல்லும் வீரன் என்றும் நீ கூறுவாயாக என, போகரது கருணையால் புலிப்பாணி கூறினேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 172 | 173 | 174 | 175 | 176 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 174 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -