காஞ்சிபுரம் - தமிழக மாவட்டங்கள்
வி.ஜி.பி. தங்கக் கடற்கரை :
மகாபலிபுரம் செல்லும் பாதையில் சுமார் 50 ஏக்கர் நிலத்தில உருவாக்கப்பட்டுள்ளது, வி.ஜி.பி. தங்கக்கடற்கரை. இது உல்லாச பயணிகளின் சொர்க்கம் என்று வர்ணிக்கப்படுகிறது. இங்கு செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அமைப்பும் பழமையும், புதுமையும் இணைந்து எழில் கொஞ்சும் விதமாய் அமைந்துள்ளது. அசையா மனிதன், கல்தேர், செயற்கை நீர்வீழ்ச்சி, ராஜமண்டபம், பாரதி மண்டபம், குழந்தைகள் விளையாட்டரங்கு, பயணிகள் குடில்கள், 1000 பேர் அமரக் கூடிய திறந்தவெளி அரங்கு, உணவு விடுதிகள், இடையிடையே வண்ண வண்ண மலர்கள் பூத்து குலுங்கும் காட்சி என்று எல்லாமும் சுற்றுலா பயணிகளையும், உல்லாச பிரியர்களையும் கவரும் வண்ணம் அமைந்துள்ளன.
கோவளம் :
மகாபலிபுரத்திற்கும் சென்னைக்கும் இடையே அமைந்துள்ளது கோவளம் கடற்கரை. இங்குள்ள ஹோட்டல், பிஷெர்மென் கோ புகழ்பெற்றதாகும். இந்தக் கடற்கரை மிக சுத்தமாகப் பராமரிக்கப் படுவதால், இது வெளிநாட்டினர் விரும்பி வரும் சுற்றுலாத் தலமாகும்.
வண்டலூர் :
தாம்பரத்திற்கு தெற்கில் உள்ளது இவ்வூர். கலிங்கப் போரில் வென்ற கருணாகரத் தொண்டைமான் பிறந்த ஊர். இங்கு ஒரு வைணவக் கோயில் உள்ளது. இங்கு உயிரியல் பூங்கா மிருக காட்சிசாலை அமைந்துள்ளதால் சுற்றுலா வாசிகளின் வருகை இங்கு அதிகம். இவ்வுயிரியல் பூங்காவில் தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலகிலிருக்கும் தலைசிறந்த விலங்குகள், பறவைகள் யாவும் உள்ளதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இங்கு வருகின்றனர்.
கருங்குழி :
1825 -ஆம் ஆண்டு வரை பழைய செங்கற்பட்டு மாவட்டத்தின தலைநகராய் இவ்வூர் இருந்திருக்கிறது. செங்கற்பட்டுக்கு தெற்கே 24 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குள்ள 100க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளில் அரிசி தயாராகி பல ஊர்களுக்கும் அரிசி போகிறது. பிரெஞ்சுக் காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இவ்வூரில் கடுமையான போர்கள் நிகழ்ந்துள்ளன. பிரெஞ்சுக் காரர்களால் கட்டப்பட்டக் கோட்டை இங்கு சேதமுற்ற நிலையில் காணப்படுகிறது. பெரிய அகழி ஒன்றும் இக்கோட்டையில் உள்ளது. இக்கோட்டை யிலிருந்து, கருக்குழிக்கு 3கி.மீ. தொலைவிலுள்ள மலைப்பாளையம் கிராமம் வரை சுரங்கப்பாதை ஒன்றுண்டு.
சதுரங்கப்பட்டணம் :
சத்ராஸ் என்று பறங்கியரால் அழைக்கப்பட்ட இவ்வூர் பாலாறு கடலுடன் சங்கமமாகும் இடத்தின் அருகே உள்ளது. டச்சுக்காரர்கள் கட்டிய கோட்டையும் கல்லறையும் இங்குள்ளன. பல பிரிட்டிஷ்- பிரெஞ்சுப் போர்கள் இங்கு நடந்துள்ளன. விரல் அளவே பழம் கொண்ட ஒரு வகை வாழையினம் இங்கு மிகுதியாகப் பயிராகிறது. ஒரு குலையில் நிறையப் பழங்கள் இருக்கும்.
தாம்பரம் :
சென்னைக் கடற்கரைக்கும் இவ்வூருக்கும் உள்ள மின்சார ரயில் தொடர்பால் வளர்ச்சி பெற்ற ஊர். வாணிபம் சிறப்பாக நடைபெறுகிறது. புகழ் பெற்ற கிறித்துவக் கல்லூரி, விமானப் படையின் தரைப் பயிற்சி நிலையம், நுரையீரல் மருத்துவமனை ஆகியவை இங்குள்ளன.
திருமணி :
இவ்வூரில் தொழுநோய் மருத்துவ நிலையம் உள்ளது.
பல்லாவரம் :
பல்லவர் ஆட்சிக் காலத்தில் தோன்றிய ஊர். பல்லவபுரம் என்றிருந்த பழைமைப் பெயர் பல்லாவரம் என்று ஆயிற்று. மகேந்திரவர்மன் அமைத்த குகைக் கோயில் உள்ளது. தமிழ்ப் பெரியார் மறைமலை அடிகள் வாழ்ந்த ஊராகும். இதற்கு அண்மையில் மலைச்சாரலில் கல்லுடைக்கும் தொழில் சிறப்பாக நடைபெறுகிறது. இதன் சுற்றுபுற ஊர்களில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் பல இயங்கி வருகின்றன. உயர் அழுத்த மின்சாரக் கருவிகள் செய்யும் இங்கிலீஷ் எலெக்ட்ரிக் கம்பெனி உள்ளது. பல்லாவரம் மலையில் ராடார் நிலையம் இருக்கிறது. அதனருகில் உள்ள மசூதியில் நபிகள் நாயகம் உபயோகித்த மேல் சட்டை ஒன்று இருக்கிறது. இஸ்லாமிய திருநாள் மிலாடி நபி அன்று ஏராளமான முஸ்லீம்கள் அச்சட்டையைத் தரிசிக்க திரண்டு வருகிறார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காஞ்சிபுரம் - Kancheepuram - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - உள்ளது, இங்கு, மாவட்டங்கள், tamilnadu, தமிழக, காஞ்சிபுரம், கடற்கரை, இவ்வூர், நிலையம், தகவல்கள், அரிசி, பல்லாவரம், தமிழ்நாட்டுத், இங்குள்ளன, போர்கள், இவ்வூரில், நடைபெறுகிறது, இருக்கிறது, | , பிரெஞ்சுக், சிறப்பாக, பெற்ற, உள்ள, கோவளம், இந்தியா, information, districts, kancheepuram, உல்லாச, அமைந்துள்ளது, இங்குள்ள, சுற்றுலா, வண்ண, குழந்தைகள், கோயில்