காஞ்சிபுரம் - தமிழக மாவட்டங்கள்
குரோம்பேட்டை :
குரோம் லெதர் கம்பெனி இப்பகுதியில் தொடங்கப்பட்ட பிறகே குரோம்பேட்டை என வழங்கலாயிற்று. இங்கு தோல் தொழிற்சாலைகள் நிறைந்துள்ளன. இங்கு பல்லவன் பஸ் பணிமனை ஒன்று பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. வரைபடம் (விணீஜீ) தயாரிக்கும் அச்சகம் ஒன்றும் இப்பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. அண்ணாப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரியும் அமைந்துள்ளது. குரோம்பேட்டை இரயில் நிலையத்திற்குக் கிழக்கில் ஒரு குன்றின் மீது குமரன் குன்றம் உள்ளது.
கல்பாக்கம் :
மத்திய அரசால் சுமார் 148 கோடி ரூபாய் மதிப்பில் கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மின்சாரம் பற்றாக்குறையை இவ்வணுமின்நிலையம் நிறைவு செய்கிறது. ஆண்டுக்கு ரூ.30 கோடிக்கும் அதிகமாக வெளிச் செலாவணி பெறுகிறது. கல்பாக்கம் நகரியம் திட்டமிட்டுக் கட்டப்பட்ட சீரான அமைப்புடையது. கடற்கரையைச் சார்ந்து சோலைகளின் நடுவே அமைந்துள்ளது.
மறைமலைநகர் :
சென்னைக்குத் தெற்கில் 40 கி.மீ. தொலைவில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் நூறாயிரம் மக்கள் வாழும் வீட்டுமனைகளை இப்புதுநகர் உருவாக்கியுள்ளது. மறைமலைநகரின் தென்பால், சிறுதொழில் நிறுவனங்களுக்கென 15 ஏக்கர் நிலம் அமைத்து புதிய தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு அமைந்துள்ள சாலைகளின் நீளம் 5 கி.மீ. ஆகும். புதிய நகரியத்திற்குத் தேவையான அத்தனை அத்தியாவசிய வசதிகளும் கொண்டது மறைமலைநகர்.
காட்டாங்குளத்தூர் :
மறைமலை நகருக்கு வடக்கில் உள்ள சிற்றுர். இங்கு அரசுத்துறை ஆட்டுப்பண்ணை, கோழிப்பண்ணை, மற்றும் ஆய்வு நிலையங்களும் உள்ளன.
மாங்காடு :
குன்றத்தூர் அருகிலுள்ள மாங்காடு கிராமத்தில் இருக்கும் மாங்காட்டு அம்மன் ஆலயம் மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். பல இடங்களிலிருந்தும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் அம்மனை தரிசனம் செய்ய வருகிறார்கள். முக்கிய விழா நாட்களில் மாங்காடு செல்லச் சிறப்புப் பேருந்துகள் விடப்படுகின்றன.
நாகல்கேணி :
பம்மல் கிராமத்திற்கு அருகிலுள்ள இவ்வூரில் தோல் பதனிடும் தொழிலகங்கள் பல உள்ளன. இங்குப் பதனிடப்படும் தோல்கள் இந்தியாவில் பஞ்சாபுக்கும், மேலை நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் அந்நிய செலாவணி மிகுதியாகக் கிடைக்கிறது.
படாளம் :
இவ்வூரில் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நடைபெறுகிறது. இது விவசாய நிலங்கள் சூழ்ந்த பகுதி.
கவுல்பஜார் :
பல்லாவரத்திற்கு மேற்கில் 2 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது. இங்கு தாதா பார்மசூடிகல்ஸ் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் செயல்படுகிறது. இங்கு பலவிதப் பூக்கள் உள்ள தோட்டங்கள் ஏராளம். இங்கிருந்து சென்னைக்கும், அதன் சுற்றுபுறங்களுக்கும் பூக்கள் தினமும் அனுப்பப்படுகின்றன.
இருங்காட்டுக்கோட்டை :
இங்கு ஆண்டுதோறும் கார் பந்தயம் நடைபெறுகின்றது.
புள்ளலூர் :
காஞ்சி மாநகரிலிருந்து ஏறத்தாழ 16 கி.மீ. தொலைவில் கோவிந்தவாடிக்கு அருகில் உள்ளது. முதலாம் மகேந்திரவர்மன், புலிகேசி என்ற சாளுக்கிய மன்னனைத் தோற்கடித்த இடம். ஹைதர் அலி-திப்புசுல்தான் படைகள் கி.பி. 1780 இல் பெய்லி என்ற ஆங்கிலப் படைத்தளபதியை வெற்றி கொண்ட ஊர். கி.பி. 1781 இல் மீண்டும் ஹைதர் அலிக்கும் சர் அயர் கூட் என்ற ஆங்கில படைத்தளபதிக்கும் போர் நிகழ்ந்த இடம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காஞ்சிபுரம் - Kancheepuram - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இங்கு, காஞ்சிபுரம், tamilnadu, மாவட்டங்கள், தமிழக, மாங்காடு, உள்ளது, தொலைவில், குரோம்பேட்டை, தமிழ்நாட்டுத், தகவல்கள், ஏக்கர், | , உள்ள, ஹைதர், அருகிலுள்ள, பூக்கள், இவ்வூரில், இடம், அமைந்துள்ளது, information, districts, kancheepuram, இப்பகுதியில், தோல், செலாவணி, கல்பாக்கம், செயல்பட்டு, மறைமலைநகர்