விஷ்ணு புராணம் - பகுதி 17 - பதினெண் புராணங்கள்
தேவக அரசனின் மகளாகிய தேவகியை மணந்தார், வசுதேவர். இவர்களை ஏற்றிக் கொண்டு ரதத்தை செலுத்தினான் கம்ஸன். அப்பொழுது வானில் அசரீரி, 'முட்டாள் கம்ஸனே! யாரை நீ ரதத்தில் ஏற்றிச் செல்லு கிறாயோ அவளுடைய எட்டாவது மகனே உன்னைக் கொல்லுவான் என்றது. இதைக்கேட்ட கம்ஸன் வாளை எடுத்து தேவகியைக் கொல்லப் போனான். உடனே வசுதேவர் அவனைத் தடுத்து அவளுக்குப் பிறக்கும் எல்லா குழந்தை களையும் அவனிடம் ஒப்படைப்பதாகக் கூறினார்.
சுமேரு மலையிலுள்ள தேவதைகளிடம் பிருத்வி ஆகிய பூமி சென்று தைத்தியர்களின் கொடுமை தாங்கவில்லை. முன்னொரு காலத்தில் விஷ்ணு கலாநேமி என்ற அசுரனைக் கொன்றார். அந்தக் கொடியவன் இப்பொழுது உக்கிர சேனனின் மகனாகிய கம்ஸனாகப் பிறந்துள்ளான். கொடிய ஏனைய தைத்தியர்களாகிய அரிஷ்டா, தேனுகா, கேசி, நரகா, சுந்தா ஆகியவர்களோடு சேர்ந்து கம்ஸன் செய்யும் கொடுமைகள் பொறுக்கக் கூடியதாக இல்லை என்று முறையிட்டது.
இவர்கள் கூறியதை உண்மை என்று பிரம்மாவும் கூறினான். எல்லா தேவதைகளும் சேர்ந்து வடக்கே உள்ள கடற்கரைக்குச் சென்று விஷ்ணுவை வேண்டிக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தனர். உலகத்தில் இப்படிப்பட்ட கொடுமைகள் நிகழ்ந்த பொழுதெல்லாம் விஷ்ணுவே பல அவதாரங்கள் எடுத்து பூமியைக் காப்பாற்றி உள்ளார்.
பிரம்மன் முதலிய தேவர்களின் பிரார்த்தனையைக் கேட்ட விஷ்ணு அவர்கள் எதிரே வந்தார். தன் தலையிலிருந்து இரண்டு முடிகளை எடுத்துக் கீழே போட்டு, 'இரண்டும் பூமியில் தீங்கு செய்பவர்களை அழிக்கும். நானே தேவகியின் எட்டாவது மைந்தனாகப் பிறக்கப் போகிறேன் கவலை வேண்டாம் என்று சொன்னார். அசரீரிக்கு பயந்த கம்ஸன் வசுதேவனையும், தேவகியையும் சிறைக்குள் அடைத்து வைத்தான். தேவகிக்குப் பிறந்த ஆறு ஆண் குழந்தைகளையும் வசுதேவன் வாக்குப்படி கம்ஸனிடம் ஒப்படைக்க அவன் அத்தனை குழந்தைகளையும் கொன்று தீர்த்தான். தேவகியின் ஏழாவது குழந்தை சங்கர்ஷன் என்ற பெயருடன் சிறையை விட்டு வெளியே சென்று மறைந்து, வசுதேவரின் இரண்டாவது மனைவியாகிய ரோகினியிடம் வளர்ந்து வந்தது. தேவகிக்குப் பிறந்த எட்டாவது குழந்தை வசுதேவரால் நந்தகோபன் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. நந்தகோபன் வீட்டில் அவருடைய மனைவி யசோதை பெற்ற பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு அதற்குப் பதிலாக இந்த ஆண் குழந்தையை தேவகியிடம் விட்டுவிட்டு வசுதேவர் சிறைச் சாலைக்கு மீண்டார். விடியற்காலையில் குழந்தை பிறந்த சேதி அறிந்த கம்ஸன், இது பெண் குழந்தை என்று கூடப் பார்க்காமல் கொல்ல யத்தனிக்கையில் அக்குழந்தை ஆகாயத்தில் மறைந்து எட்டுக் கைகளுடைய காளிதேவியாக மாறி, முட்டாள் கம்சனே! போன ஜென்மத்தில் உன்னைக் கொன்ற அதே ஆள் இப்பொழுது பிறந்து விட்டான். அவன் தான் உன்னைக் கொல்லப் போகிறான்’ என்று கூறிவிட்டு மறைந்தது. எட்டுக் குழந்தைகளும் பிறந்துவிட்ட காரணத்தால் தேவகியையும், வசுதேவரையும் கம்சன் விடுதலை செய்தான். தன்னுடைய தோழர்களை அழைத்து, என்னுடைய ஆற்றலில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்னுடன் போர் தொடுக்க முடியாமல் இந்திரன் ஓடிய ஒட்டத்தைப் பார்த்தீர்கள் அல்லவா? நான் யாருக்கும் அஞ்சப் போவதில்லை. இருந்தாலும் முன் ஜாக்கிரதையாக இப்பொழுது மதுராவில் பிறந்துள்ள எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்று விடுவோம்’ என்று கூறினான். என்னுடைய குருவாகிய ஜராசந்தனைத் தவிர வேறு யாருக்கும் அஞ்சவும் மாட்டேன், வணக்கம் செய்யவும் மாட்டேன்’ என்று கூறி மகிழ்ந்தான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விஷ்ணு புராணம் - பகுதி 17 - Vishnu Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, குழந்தை, கம்ஸன், சென்று, இப்பொழுது, பிறந்த, குழந்தைகளையும், எல்லா, வசுதேவர், எட்டாவது, உன்னைக், விஷ்ணு