வராக புராணம் - பகுதி 19 - பதினெண் புராணங்கள்
பாற்கடலைக் கடைந்த தேவர்களுக்குச் சோமபாணம் கிடைக்கின்றது. இந்தச் சோமபாணம் சந்திரனே ஆகும். சிவ பெருமான், சந்திரனை எடுத்துத் தன் தலையில் சூடிக் கொண்டார். மேலே கூறிய நிகழ்ச்சிகள் அனைத்தும் பெளர்ணமி அன்று நடைபெற்றதால் பெளர்ணமி விரதம் மிகச் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விரதத்தினை முடித்த பின்னர் ஒருவர் அரிசிச்சோறு சாப்பிடலாம். இவ்விரதம் அனுஷ்டிப்ப வர்களுக்கு எல்லாச் செல்வமும் கிடைக்கப் பெறும்.
விரதங்கள்
பிருத்வி வராகத்தைப் பார்த்து விரதங்கள் பற்றி அறிய விரும்புகிறேன் என்று சொல்லியவுடன் வராகம் கூறத் தொடங்கியது. “விரதங்கள் பலவகைப்படும். முதல்வகை பிரமச்சரியம், சத்தியம் காத்தல் ஆகிய இரண்டையும் தலையாய கடமையாகக் கொண்டது. இரண்டாவது பஜனை செய்தல், இறைவனின் புகழைப் பாடுதல் ஆகியவையாவன. மூன்றாவது வகை குறிப்பிட்ட நாட்களில் பட்டி இருத்தல் ஆகியவையாம்.
இதுபற்றிப் பல கதைகள் சொல்லலாம் எனினும், உதாரணத்திற்கு ஒன்றிரண்டைச் சொல்கிறேன்.
துர்வாசர் ஒருமுறை அவருக்கு நண்பனாக இருந்த ஒரு வேடனுக்கு சத்யதபா என்று பெயர் சூட்டினார். காரணம் அவன் வேடனாகப் பிறந்தும் நேர்மை, சத்தியம் என்ற இரண்டிற்கும் பெருமதிப்புக் கொடுத்து வாழ்க்கையில் கடைப் பிடித்தான் ஆதலின் அவனுக்கு இந்தப் பெயரைத் தந்தார். ஒருமுறை வராகம் பிருத்விக்குக் கூறிய ரகஸ்யமான ஒரு விரதச் சடங்கை துர்வாசர் இப்பொழுது சத்யதபாவிற்குக் கூறினார். ஏகாதசி அன்று பட்டினி கிடந்து துவாதசி அன்று காலையில் ஆற்றுக்குச் சென்று, ஆற்று மண்ணை உடம்பில் பூசிக் கொண்டு நாராயணனை நினைத்தவாறே நீந்திக் குளிக்க வேண்டும். பிறகு வந்து உணவு கொள்வதே துவாதசி விரதத்தின் மகிமை. இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் கல்வி அறிவு இல்லாதவர்களாய் இருந்தாலும் பிரம்மத்தை அடையும் வழியை அவர்கள் அடைய முடியும். இந்த விரதம் மார்கழி மாதத்தில் அனுஷ்டிக்கப்பட வேண்டும்.
இதே போன்று வராக துவாதசி விரதத்தை மாசி மாதத்தில் அனுஷ்டிக்க வேண்டும். இந்த விரதத்திற்கு வராகத்தின் வடிவத்தைச் செய்து, அதை வெள்ளைத் துணியால் உடுத்தி மண்பானையில் வைத்து பகலில் பூஜிப்பதுடன் ஏகாதசி இரவு கண் விழித்து பூஜித்தால் சிறந்த பயன் உண்டு. இவற்றை அல்லாமல் ராம துவாதசி ஆனி மாதத்தில் கிருஷ்ண துவாதசி ஆடி மாதத்திலும் புத்த துவாதசி ஆவணி மாதத்திலும் அனுஷ்டிக்கப்பெற வேண்டும்.
கந்திவிரதம்
சந்திரன், தட்சனின் சாபத்தை முறியடிக்க மேற்கொண்ட விரதமாகும். சுக்கிலபட்சம் என்பது வளர்பிறை என்றும், கிருஷ்ணபட்சம் என்பது தேய்பிறை என்றும் கூறப்படும். இந்த விரதம் கார்த்திகை மாதம் சுக்கிலபட்சம் துவிதியை திதியில் ஆரம்பமாகும். கிருஷ்ண பலராமர்களை வழிபட வேண்டும்.
அவிஞ்ஞ விரதம்
திரிபுராசுரனைக் கொல்வதற்கு முன்பு சிவபெருமானாலும், கடல்நீரைப் பருகுவதற்கு முன்பு அகத்திய முனிவராலும் கடைப்பிடிக்கப்பட்ட விரதமாகும். பங்குனி மாதத்தில் வரும் சதுர்த்தி திதி அன்று கணேசனின் மந்திரங் களைச் சொல்லுதலும், அதைத் தொடர்ந்து பஞ்சமி திதியில் விநாயகனைத் தயிர், எள், பூக்கள் முதலிவற்றால் பூஜை செய்வதும் முக்கியமானதாகும். ஒருவருக்கு வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை நீக்குவதற்கு அனுஷ்டிக்கப்படும் விரதம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 22 | 23 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வராக புராணம் - பகுதி 19 - Varaha Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, துவாதசி, வேண்டும், விரதம், மாதத்தில், அன்று, என்பது