ஸ்கந்த புராணம் - பகுதி 19 - பதினெண் புராணங்கள்
காலவ முனிவரால் சாபம் பெற்ற வித்யாதர சகோதரர்கள் இருவரும், கோவிந்தசாமி என்ற பிராமணன் பிள்ளைகளாய்ப் பிறந்தனர். யமுனை நதிக்கரையில் கோவிந்தசாமி வசித்து வந்தார். அந்த இடத்தில் பஞ்சம் வந்ததால் அவர் குடும்பத் தோடு குடிபெயர்ந்தார். பிள்ளைகள் இருவரும் இப்போது இளைஞர்களாய் வளர்ந்துவிட்டனர். பஞ்சத்திற்கு பயந்து குடிபெயர்ந்த கோவிந்தசாமி ஒரு பாழடைந்த கோயிலில் ஒர் இரவு தங்கினர். நடு ஜாமத்தில் மூத்தவனாகிய விஜயா என்பவன் குளிர் சுரத்தால் மிகவும் அவதிப்பட்டு, குளிர் காய்வதற்கு எங்கிருந்தாவது நெருப்புக் கொண்டு வருமாறு தன் தகப்பனைக் கேட்டான். தந்தை கோவிந்தசாமி நடு இரவாக உள்ள இந்நேரத்தில் யார் வீட்டிலும் போய் நெருப்புக் கேட்க முடியாது. காலையில் பார்த்துக் கொள்ளலாம்' என்றான். விஜயன், "தந்தை! பொய் சொல்ல வேண்டாம். அதோ துரத்தில் நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. அதில் சென்று குளிர் காயலாம்” என்றான். இதைக் கேட்ட தந்தை "மகனே! அது சுடுகாடு. அங்கே ஒரு பிணம் எரிந்து கொண்டிருக்கிறது. பிணத்தைச் சுடும் நெருப்பில் குளிர்காய்தல் செய்யக் கூடாது என்றான். மகன் பிடிவாதமாக அங்கே போகப் போகிறேன் என்று சொல்ல, பிள்ளைப் பாசத்தால் உந்தப்பட்ட கோவிந்தசாமி தானும் உடன் சென்றான். எரிந்து கொண்டிருந்த பிணத்தின் பக்கத்தில் வந்தவுடன், நெருப்பினுள் எரிந்து கொண்டிருக்கும் பிணத்தைக் காட்டி, 'பளபளவென்றிருக்கும் அது என்ன? என்று விஜயன் கேட்டான். அது மண்டை ஒடு' என்று தந்தை சொன்னவுடன், விஜயன் ஒரு கல்லை எடுத்து மண்டை ஒட்டை உடைத்தான். உள்ளே இருந்து இரத்தமும், நிணமும் விஜயன் முகத்தில் தெறித்தன. அதைத் துடைப்பது போல நக்கி, ருசித்துச் சாப்பிட்டான் விஜயன். உடனே, ஒரு வேதாளமாக மாறிவிட்டான். சதை, இரத்தம் இரண்டையும் சுவைத்துச் சாப்பிட்டவன் தந்தையின் கழுத்தையே நெறிக்கத் தொடங்கினான். உடனே செய்த பாவம் போதும், தகப்பனைக் கொன்று மேலும் பாவத்தைச் சேர்த்துக் கொள்ளாதே’ என்ற குரல் கேட்டது. விஜயன் தந்தையை விட்டுவிட்டு ஆகாயத்தில் சஞ்சரிக்கும் வேதாளங்களோடு ஒன்றாகச் சேர்ந்து விட்டான். மண்டை ஒட்டை ருசித்ததால், வேதாளமாக மாறிவிட்ட விஜயனுக்கு கபாலஸ்வேதனா' என்ற பெயர் நிலைத்தது. இப்பெயரின் பொருள் ‘மண்டையை உடைத்தவன்’ என்பதாகும்.
கோவிந்தசாமி, அவன் மனைவி, இரண்டாவது மகன் அசோகன் ஆகிய மூவரும் வேதாளமாக மாறிவிட்ட விஜயனை நினைத்துப் புலம்பிக் கொண்டிருந்த பொழுது, அவ்வழியே வந்த வணிகன் இவர்களை அழைத்துச் சென்று, சிலநாட்கள் தன் பாதுகாப்பில் இருக்குமாறு செய்தான். இளையவனான அசோகன் சிறந்த கல்விமானாகவும், மந்திரங்கள் கற்றவனாகவும், வலிமையான உடம்பைப் பெற்றவனாகவும் இருந்தமையால் இவன் புகழ் எங்கும் பரவிற்று. அப்போது காசியை ஆண்டு கொண்டிருந்த பிரதாபமுக்தா என்பவன் அசோகன் அறிவை மெச்சித் தன் அரசவையில் அவனுக்குப் பதவி கொடுத்தான்.
ஒருநாள் அரசனும், அசோகனும் குதிரைமேல் சென்று கொண்டிருந்த பொழுது ஒரு சுடுகாட்டின் பக்கம் வந்தனர். அங்கே நடப்பட்டிருந்த கழுமரத்தில் ஒருவனை ஏற்றி இருந்தனர். உயிர் பிரியாத அவன், நான்கு நாட்களாக இக் கழுமரத்தில் தொங்குகிறேன். வறட்சியால் நா உலர்ந்துள்ளது. யாராவது நீர் கொடுங்கள் என்று கேட்டான். இந்தக் குரலைக் கேட்ட அரசன் அசோகனைப் பார்த்து நீ கொஞ்சம் தண்ணர் கொடுத்து வா’ என்றான். கழுமரத்தில் இருந்தவன் பக்கம் தண்ணிருடன் சென்ற அசோகனுக்கு அதிர்ச்சி தரும் ஒரு நிகழ்ச்சி அங்கே நடந்தது. அழகிய பெண் ஒருத்தி அவன் எதிரே வந்து, இக்கழுமரத்தில் தொங்குபவன் என் கணவன். இவனுக்குத் தண்ணீர் கொடுக்கும் உரிமை எனக்குத்தான் என்றாள். அசோகன் குவளையை அவளிடம் கொடுத்து, நீங்களே கொடுங்கள் என்றான். தொங்குபவன் உயரத்திற்கு என்னால் எட்ட முடியவில்லை என்றாள் அவள். உடனே அசோகன், கவலை வேண்டாம். நான் குனிந்து
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்கந்த புராணம் - பகுதி 19 - Skanda Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, விஜயன், கோவிந்தசாமி, அசோகன், என்றான், அங்கே, கொண்டிருந்த, தந்தை, எரிந்து, வேதாளமாக, உடனே, கழுமரத்தில், அவன், சென்று, குளிர், கேட்டான், பொழுது, மண்டை