ஸ்கந்த புராணம் - பகுதி 21 - பதினெண் புராணங்கள்
வர்த்தமனி தேவலோகம் சென்ற பிறகு எமன் மீண்டும் தவத்தில் ஈடுபட்டான். இந்திரன் பயந்தான். அவன் மட்டும் அல்லாமல் தேவர்கள், யட்சர்கள், கந்தர்வர்கள் ஆகிய அனைவரும் எமனுடைய தவத்தைக் கண்டு பயந்து சிவனிடம் சென்று முறையிட்டனர். சிவன், எமனுக்கு எதிரே தோன்றி, "உனக்கு என்ன வரம் வேண்டும்” என்று கேட்டார். எமன், "இந்த இடத்திற்கு என் பெயர் வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான். சிவன் அதை ஏற்றுக் கொண்டதால் அந்தப் பகுதி தர்மாரண்யம்' என்று பெயர் பெற்றது. தருமன் என்பது எமனுக்கு மற்றொரு பெயர். இந்த தர்மாரண்யப் பகுதியில் சிவன் லிங்கத்தை நிறுவினார். அந்த லிங்கத்திற்கு விஸ்வேஸ்வரா என்பது பெயர். அங்கு எமன் ஒரு குளத்தைத் தோண்டி அதற்கு தர்மவாபி என்று பெயரிட்டான்.
இதன் பிறகு சிவன் ஸ்கந்தனிடம் தர்மாரண்யம் பற்றிச் சொல்லி விஷ்ணுவுக்கு அதில் உள்ள ஈடுபாட்டைப் பற்றி விளக்கினார்.
விஷ்ணு தலை இழந்த கதை
வேதவியாசர் யுதிஷ்டிரனுக்கு மற்றொரு கதையும் சொன்னார். ஒருமுறை தேவர்கள் ஒரு பெரிய யாகத்தைச் செய்ய விரும்பினார்கள். விஷ்ணுவை அந்த யாகத்திற்கு அழைக்க வேண்டும் என்று எண்ணிய தேவர்கள் மேல் உலகம், கீழ் உலகம் ஆகிய எல்லா இடங்களிலும் தேடினார்கள். கடைசியாகத் தன்னுடைய வில்லை வளைத்துக் குறிபார்க்கும் நிலையில் விஷ்ணு தவம் செய்து கொண்டிருந்தார். அவரை எப்படியாவது எழுப்ப வேண்டும் என்று நினைத்தனர். வளைத்து நாண் ஏற்றியிருந்த வில்லில் உள்ள நாண் கயிற்றை அறுத்தால் வில் போடும் சத்தத்தில் விஷ்ணு எழுந்துவிடுவார் என்று நினைத்துக் கயிற்றைத் தின்னக்கூடிய ஒரு பூச்சியை விஷ்ணு வைத்திருந்த வில்லினுடைய நாணில் விட்டனர். அந்தப் பூச்சி அந்த நாணைத் தின்றவுடன் வளைந்திருந்த வில் விடுபட்டது. தேவர்கள் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. அவர் முகத்திற்குக் கீழே வில் இருந்ததால் அது விடுபட்டதும் அவருடைய தலையை வெட்டி விட்டது. வெட்டப்பட்ட தலை சுவர்க்கத்தை நோக்கிச் சென்றது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்கந்த புராணம் - பகுதி 21 - Skanda Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, எமன், பெயர், ", அந்த, தேவர்கள், அந்தப், வேண்டும்”, சிவன், அவன், விஷ்ணு, தவம், வில், எமனுக்கு, பகுதி, தவத்தைக், இந்திரன், தர்மாரண்யம்