ஸ்கந்த புராணம் - பகுதி 17 - பதினெண் புராணங்கள்
வதரிகாசிரமத்தின் சிறப்பு
வதரிகாசிரமத்தின் பெயர் அங்கு நிறைந்துள்ள வதரி மரங்களால் ஏற்பட்டதாகும். அம்மரங்கள் அமிர்தத்தைச் சொரிந்து கொண்டிருப்பதால் அந்த ஆசிரமம் மிக்க சிறப்புப் பெற்றிருந்தது. விஷ்ணுவைப் பொறுத்தமட்டில் சில யுகத்தில் சில தீர்த்தங்களை விட்டு அப்பால் போய்விடுகிறார் என்றாலும், வதரியை விட்டு அவர் போவதே இல்லை.
சிவன் ஒருமுறை பிரம்மாவின் ஐந்தாவது தலையை வெட்டி விட்டார். பிரம்மன் பிராமணன் ஆகையால் பிரம்ம ஹத்தி தோஷம் சிவனைப் பற்றிக்கொண்டது. என்ன முயன்றும், வெட்டிய கையில் ஒட்டிக் கொண்ட பிரம்ம கபாலம் சிவன் கையை விட்டு நீங்கவில்லை. இறுதியாக விஷ்ணு அவரைப் பார்த்து, வதரி தீர்த்தம் சென்றால் இந்தக் கபாலம் கையை விட்டுக் கழன்றுவிடும் என்று கூறினார். சிவன் வதரி தீர்த்தம் வந்து, தீர்த்தத்தில் குளித்தவுடன் கபாலம் அவர் கையை விட்டு நீங்கியது.
முன்னொரு காலத்தில் முனிவர்கள் எல்லாம் கூட வதரியில் தங்கி இருக்கும் பொழுது அக்னி, அவ்விடத்திற்கு வந்து தன் குறையைக் கூறினான். பார்வதியிடம் பெற்ற சாபத்தின் காரணமாக அக்னி நல்லது, கெட்டது பாராமல் எல்லாவற்றையும் எரித்துவிடும் இயல்பைப் பெற்றுவிட்டான். நல்லவர்களுக்குத் தீங்கு செய்த பாவம் அவனிடம் மிகுதியும் சேர்ந்து விட்டது. முனிவர்களைப் பார்த்த அக்னி, நான் எங்கே சென்றால் என் பாவங்களைக் கரைக்க முடியும் என்று கேட்டான். அங்கிருந்த நாராயண முனிவர், "அக்னியே, நீ ஒன்றும் கவலைப்படத் தேவையில்லை. எந்த நேரத்தில் வதரி தீர்த்தத்தில் கால் வைத்தாயோ அப்பொழுதே உன்னுடைய பாவங்கள் அழிக்கப்பட்டு விட்டன” என்று கூறினார். எந்த இடத்தில் அக்னியின் பாவங்கள் அழிக்கப்பட்டனவோ அந்த இடமே அக்னி தீர்த்தம் என்று விளக்கப்பட்டது.
அயோத்தி வைபவம்
ஸ்கந்தன் ஒருமுறை அயோத்தியின் பெருமையை அகஸ்தியருக்குச் சொன்னான். அவர் சொல்லிய விபரம் வருமாறு:
சரயு நதிக்கரையில் நீர் வசமாக அமைந்திருப்பது அயோத்தி மாநகரம். ராமன் ஆட்சி செய்திருந்த காலத்தில் ராமன் ஒரு கடுமையான உத்தரவைப் போட்டிருந்தார். அரண்மனையில் உள்ள ரகசிய ஆலோசனை அறையில் அவர் இருந்தால் யாரும், எக்காரணம் கொண்டும், எந்த நேரத்திலும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வரக்கூடாது. மீறி நடப்பவர்கள் அரண்மனையை விட்டு வெளியே போக நேரிடும் என்று உத்தரவிட்டிருந்தார். ஒருமுறை தம்பி லக்ஷ்மணனைக் காவல் வைத்துவிட்டு ரகசிய ஆலோசனை மண்டபத்திற்கு ராமர் சென்றிருந்தார். காவல் காக்கும் லக்ஷ்மணன் எதிரே துர்வாசர் தோன்றி, எனக்குப் பசி அதிகமாக இருக்கிறது. உடனே ராமனைப்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்கந்த புராணம் - பகுதி 17 - Skanda Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, விட்டு, அவர், வதரி, அக்னி, தீர்த்தம், கையை, எந்த, சிவன், யாரும், உள்ள, ஒருமுறை, கபாலம்