ஸ்கந்த புராணம் - பகுதி 14 - பதினெண் புராணங்கள்
சில காலம் கழித்தவுடன் மனைவியைத் தனியே விட்டு வந்த துயரம் அவரை ஆட்கொண்டது. பிதுர்க்களைத் திருப்திப் படுத்த வேண்டுமானால் மஹிசாகர சங்கமத்தில் தங்க வேண்டும். மனைவியை திருப்திப்படுத்த வேண்டுமானால் கங்கைச் சங்கமத்தில் தங்க வேண்டும். எதைச் செய்வது என்று தர்மசங்கடத்தில் அகப்பட்டுக் கொண்டு ஓவென அழுது கொண்டிருந்த நிலையில்தான் நான் அவரைப் பார்த்தேன். நல்லவேளையாக நான் அங்கே இருந்தபொழுது சுபத்ரா வந்து சேர்ந்தாள். விபரத்தை அறிந்த அவர் அம்மாவைப் பார்த்து, நீ கவலைப்பட வேண்டாம். உம்முடைய பிதுர்க்களுக்கு நான் இங்கே தங்கி கடன்கள் செய்கிறேன். நீர் கங்கை சங்கமத்தில் தங்கி என் பிதுர்க்களுக்குக் கடன்களைச் செய்யும். ஆனால் ஒன்று, நீர் சேகரிக்கும் புண்ணியத்தில் கால்பங்கை எனக்குத் தந்துவிட வேண்டும் என்று கூறினார். இந்தத் திட்டத்தில் மன மகிழ்ச்சியோடு தன் சம்மதத்தைத் தெரிந்த அம்மா கங்கை சங்கமம் வந்து சேர்ந்தாள் என்று பிருகு முனிவர் நாரதருக்குச் சொன்னார். இதுவே மஹிசாகர சங்கமத்தின் சிறப்பாகும்.
இந்தக் கதையை அருச்சுனனுக்குச் சொல்லிய நாரதர் மேலும் ஒரு செய்தியைச் சொன்னார். இந்தச் சங்கமத்தில் ஸ்கந்தனால் நான்கு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளன. அதன் காரணம் என்ன தெரியுமா? தாரகாசுர வதம் முடிந்தவுடன் பெரிய சிவபக்தனாகிய அவனைக் கொன்றதற்காக ஸ்கந்தன் மிகவும் மனம் வருந்திக் கொண்டிருந்தார். அப்பொழுது விஷ்ணு அங்கே வந்து, ஸ்கந்தனைப் பார்த்து, கவலைப்படத் தேவை இல்லை. தாரகன் இறந்த இடத்தில் ஒர் லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டால் போது மென்றார். ஸ்கந்தன் உடனே ஒன்று என்ன, மூன்று லிங்கங்கள் பிரதிஷ்டை செய்தார். தன்னுடைய கடமை முடிந்ததை உணர்த்த குமாரேஷ்வரா என்ற லிங்கத்தை ஸ்தாபிக்கிறேன் என்று மூன்று லிங்கங்களை நிறுவினார். இந்த இடத்தில் ஸ்கந்தன் வெற்றியைக் குறிக்க ஓர் உயர்ந்த தூணின் மேல் லிங்கத்தை ஸ்தாபித்தார்கள். அதற்கு ஸ்தம்பேஷ்வரா என்று பெயரிட்டனர்.
மஹிசாகர சங்கமக் கதை - 2
நாரதர் மஹிசாகர சங்கமத்தின் பெருமையை அருச்சுனனுக்குக் கூறிக் கொண்டு வரும்பொழுது அதை நிரூபிக்கும் வகையில் மற்றொரு கதை கூறினார். கலியுகத்தின் தொடக்கத்தில் விடசிங்கா என்ற மன்னன் சிங்கள தேசத்தை ஆட்சி செய்தார். அவனுக்கு ஒர் அழகிய பெண் இருந்தார். அழகிய பெண் உருவமானாலும் அவள் தலை மட்டும் ஆட்டின் தலையாக இருந்தது. அவளைப் பார்ப்பவர்கள் அனைவரும் அஞ்சி ஒடினர்.
ஒருநாள் அப்பெண் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்ததும் அவளது பழம்பிறப்பு நினைவுக்கு வந்தது. பழைய பிறப்பில் அவள் ஒரு பெண் வெள்ளாடாக இருந்தாள். மஹி சங்கமத்தின் பக்கத்தில் மிகப் பெரிய காடு ஒன்று இருந்தது. முள்ளும் புதரும் கடக்க முடியாமல் நெடிதுயர்ந்து வளர்ந்து இருந்தது. அதன் இடையே பெண் வெள்ளாடு சிக்கிக் கொண்டது. அதைத் தாண்டிப் போக முடியாத நிலையில் பசியால் வருந்தி உயிரை நீத்தது. மஹி சங்கமக் கரையில் வெள்ளாடு உயிர் நீத்தாலும் அதன் உடல் மெள்ள வழுக்கி, மஹிசகார சங்கமத்தில் விழுந்து விட்டது. ஆனால் ஆட்டின் தலை மட்டும் புதர்கள் நடுவே சிக்கிக் கொண்டதால் தலை பெரும் புண்ணியத்தைப் பெற்று சிங்கள மன்னனின் மகளாகப் பிறந்தது. ஆனால் ஆட்டின் தலை தண்ணிரில் விழாமல் மேலேயே தங்கி விட்டதால் இந்தப் பெண்ணின் தலையும் வெள்ளாட்டின்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்கந்த புராணம் - பகுதி 14 - Skanda Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, மஹிசாகர, சங்கமத்தில், வேண்டும், வந்து, பெண், ஸ்கந்தன், லிங்கத்தை, ஆட்டின், சங்கமத்தின், நான், நீர், அங்கே, தங்கி, ஒன்று