ஸ்கந்த புராணம் - பகுதி 13 - பதினெண் புராணங்கள்
மாவீரனாகிய அருச்சுனனுக்கு இது பிடிக்கவில்லை. எனவே துணிந்து தீர்த்தத்தில் இறங்கினான். ஒரு முதலை வந்து அவன் காலைக் கவ்விக் கொண்டது. பெரு வீரனாகிய அருச்சுனன் அந்த முதலையையும் சேர்த்து இழுத்துக் கொண்டு கரையேறிவிட்டான். கரைக்கு வந்ததும் முதலையின் வடிவம் மாறி ஓர் அழகிய அப்ஸ்ரஸ் நின்றாள். வியப்படைந்த அருச்சுனன் நீ யார் என்று கேட்க, அப்பெண் தன் வரலாற்றைச் சொல்லத் துவங்கினாள்.
நாங்கள் ஐவர் அப்ஸரஸ் பெண்கள். எங்கள் அறியாமை காரணமாக தவத்தில் ஈடுபட்டிருந்த ஒரு முனியின் தவம் கலையுமாறு துன்புறுத்தினோம். தவம் கலைந்த அவர் எங்கள் மேல் கடுஞ்சினம் கொண்டு முதலைகளாகப் போகக் கடவீர் என்று சாபமிட்டார். நாங்கள் வருந்தி மன்னிப்புக் கேட்டவுடன், எப்பொழுது ஒரு வீரன் உங்களைக் கரையில் கொண்டு வந்து சேர்க்கிறானோ அப்பொழுது உங்கள் சாபம் நிவர்த்தியாகும் என்று கூறினார். உம்முடைய தயவால் நான் விடுதலை அடைந்து விட்டேன். என் தோழிகள் நால்வரையும் விடுதலை செய்து தரவேண்டும் என்று அப்பெண் சொல்ல, எஞ்சிய நால்வரையும் அருச்சுனன் விடுவித்தான்.
மஹிசாகர சங்கமம்: மஹி என்ற பெயருடைய பிரசித்த மான நதி கடலில் கலக்கும் இடம்தான் மஹிசாகர சங்கமம் எனப்படும். இந்தச் சங்கம ஸ்தானம் மிகவும் புண்ணியம் வாய்ந்தது என்றும், இந்தத் தீர்த்தத்தில் குளித்தால் உலகில் உள்ள எல்லாத் தீர்த்தங்களிலும் குளித்த பயன் கிடைக்கும் என்றும் ஸ்கந்தன் சொல்லியதாக இப்புராணம் கூறுகிறது. நாரதர் இதனுடைய பெருமையைப் பின்வருமாறு கூறினார்.
ஒருமுறை நாரதர், பிருகு முனிவரிடம் வந்து மஹிசகார சங்கமத்தில் ஏதேனும் தனிப்பட்ட சிறப்பு உண்டா என்று கேட்டார். அப்பொழுது இந்தத் தீர்த்தத்தின் பெருமையைப் பிருகு சொல்ல ஆரம்பித்தார்.
நான் தீர்த்த யாத்திரை சென்ற காலத்தில் ஒருமுறை மஹிசாகர சங்கமத்தில் வந்து சேர்ந்தேன். மிகவும் வயது முதிர்ந்து தள்ளாடிய நிலையில் ஒரு முனிவர் ஆகாயத்தில் கைகளை உயர்த்தி ஓவென்று அலறிக் கொண்டிருந்தார். அதிசயத்துடன் அவரை அணுகி அவர் வரலாற்றைத் தெரிந்து கொண்டேன். அந்தப் பெரியவர் தன் மனைவி, சீடர்கள் ஆகியோருடன் கங்கை சங்கமம் ஆகும் இடத்தில் ஒர் ஆசிரமம் அமைத்து அங்கே தங்கி இருந்து தம் பிதுர்க்களுக்குப் பிரீதி ஆன பல சடங்குகளைச் செய்து வந்தார். ஒருமுறை அவர் மேலே பார்த்த பொழுது தன்னுடைய பிதுர்க்கள் எளிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருப்பதையும், சுபத்திராவின் பிதுர்க்கள் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வதையும் கண்டார். இக்காட்சியைத் தேவசர்மா பெற்றது. கங்கைக் கரையிலாகும். தம் பெற்றோர் எளிய வாழ்க்கை வாழ்வதற்கும், சுபத்ராவின் பெற்றோர் செல்வ வாழ்க்கை வாழ்வதற்கும் காரணம் என்ன என்று ஆராய்ந்த பொழுது, தேவசர்மா ஒன்றினைக் கண்டார். சுபத்ரா மஹிசங்கம சாகரத்தில் வசித்துக் கொண்டிருந்து, பிதுர்க்கடனை இயற்றியதால் அவருடைய பிதுர்க்கள் செல்வ வாழ்க்கை வாழ்கின்றார்கள் என்றும் தான் கங்கைக் கரையில் அக்காரியத்தைச் செய்யாததால் தன் பிதுர்க்கள் எளிய வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றும் கண்டார். உடனே தானும் மஹிசாகர சங்கமத்திற்குச் செல்லவேண்டும் என்று விரும்பினார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்கந்த புராணம் - பகுதி 13 - Skanda Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, வாழ்க்கை, ஐந்து, என்றும், பிதுர்க்கள், கொண்டு, மஹிசாகர, வந்து, எளிய, பொழுது, கண்டார், இந்தத், ஒருமுறை, அருச்சுனன், சங்கமம், அவர்