முன்னுரை - பகுதி 8 - பதினெண் புராணங்கள்
சத்திய, திருத திரேத, கலி இந்த நான்கு யுகங்களுக்கும் சேர்ந்த ஒரு மகாயுகத்திற்கு எல்லை 43,20,000 மனித ஆண்டுகள் ஆகும். இதுபோன்று எழுபத்தியொரு மகாயுகங்களுக்கு 43,20,000 X 71 = 30,ள்,20,000 ஆண்டுகள் ஒரு மன்வந்திரமாகும். இதுபோன்று 14 மன்வந்திரங்களுக்கு, இந்த எண்ணிக்கையை 14ஆல் பெருக்கினால் வரும் ஆண்டுகள் ஒரு கல்பம் எனப்படும். இந்த கல்பம் பிரமனுடைய ஒரு நாளாகும். பிரமனுடைய ஒர் இரவும் இதே அளவுள்ள ஆண்டுகளாகும். பிரமனுடைய நாளின் முடிவில், அதாவது 14 மன்வந்திரங்களின் முடிவில் ஒரு மகாபிரளயம் தோன்றுகிறது. அதன்பிறகு பிரமனுடைய இரவு முழுவதும் சூன்யமே நிலவுகிறது. பிரமனுடைய மறுநாள் காலையில் மறுபடியும் உற்பத்தி தொடங்குகிறது. பிரம்மாண்ட புராணத்தின் இக்கணக்கு, நம் அறிவையும் மனத்தையும் கதிகலங்கச் செய்யும் ஒர் எண்ணிக்கை யாகும்.
இவ்வாறு நம் முன்னோர் கூறியதன் அடிப்படையைச் சிந்திக்க வேண்டும். இந்த பூமி நித்தியத்துவம் வாய்ந்தது என்பதைக் குறிப்பதற்கே இந்தக் கணக்கைப் பயன்படுத்தினர். யுக முடிவில் மகாபிரளய காலத்தில் 5. பூதங்களும் ஒன்றுக்குள் ஒன்று ஒடுங்கி ஆகாயமாக நின்று விடுகின்றது. அதனையே, திருமாலின் வயிற்றுக்குள் அனைத்தும் சென்று அடங்கிவிடுகின்றன என்று நம் முன்னோர் கூறினர். மறுபடைப்புக் காலத்தில் ஒன்றிலிருந்து ஒன்று வெளிப்பட்டுப் பிரபஞ்சமாகக் காட்சியளிக்கிறது. இவை ஒன்று ஒன்றாக மாறுதல் அடைவது தவிர, உள்ளது அழிவதுமில்லை, இல்லாதது தோன்றுவதுமில்லை.
திரு. எஸ்.டி. குல்கர்னி அவர்கள் பொதுப் பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்டுள்ள The Puranas என்ற நூலின் 2வது பாகத்தில் வியாச முனிவர்களைப் பற்றிப் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. ஆழ்ந்து சிந்தித்தால் அவர் கூற்று பெரிதும் பொருத்தமுடையதாகவே காணப்படுகிறது. 5 வேதங்களை அனைவரும் படித்துப் புரிந்துகொள்வது என்பது மிகவும் கடினமான காரியம். ஆகவே வேத ஆராய்ச்சி செய்து மக்களுக்குப் புரியும் வகையில் அதனை எடுத்துச் சொல்பவர்கள் வியாசர் என்று அழைக்கப் பட்டனர். ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வேதவியாசர் இருந்ததாக வாயு புராணம் கூறுகிறது. முதலாவது வேத வியாசர் சுவயம்பு மனுவே ஆவார். இப்புராணத்தில் 28 வியாசர்கள் இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்தப் பதினெட்டு மகாபுராணங்களிலும் எல்லா தெய்வங்களும் ஒவ்வொரு புராணத்திலும் பேசப் படுகின்றனர். புராணத்தின் பெயர்களை மட்டும் வைத்துக் கொண்டு சிவ சம்பந்தமுடையது, விஷ்ணு சம்பந்தமுடையது என்று கூறுவதற்கில்லை. பதினெட்டுப் புராணங்களும் பின்வரும் முறையில் பிரிக்கப்பட்டுள்ளன. பிரமன் சம்பந்தமானவை பிரம புராணம், பத்ம புராணம், சூரிய சம்பந்தமானது பிரம்ம வைவர்த்த புராணம்; அக்னி சம்பந்தமுடையது அக்னி புராணம், சிவ சம்பந்தமானவை வாயு புராணம், ஸ்கந்த புராணம், இலிங்க புராணம், கூர்ம புராணம், வாமன புராணம், வராக புராணம், பவிஷ்ய புராணம், மச்ச புராணம், மார்க்கண்டேய புராணம், பிரம்மாண்ட புராணம் ஆகிய பத்து புராணங்கள்; விஷ்ணு சம்பந்தமானவை நாரத புராணம், பாகவத புராணம், கருட புராணம், விஷ்ணு புராணம் ஆகிய நான்கும் ஆகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முன்னுரை - பகுதி 8 - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, புராணம், பிரமனுடைய, சம்பந்தமுடையது, சம்பந்தமானவை, விஷ்ணு, ஒவ்வொரு, முடிவில், ஒன்று, ஆண்டுகள்