நாரத புராணம் - பகுதி 14 - பதினெண் புராணங்கள்
ரைவத நாட்டில் தேவமாலி என்றொரு பிராமணன் வாழ்ந்து வந்தான். ஏகப்பட்ட உறவினர்கள், பிள்ளைகள், மனைவி என்பவர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவனுக்கு இருந்தது. ஆகவே அவன் வாணிபம் செய்யப் புறப்பட்டான். ஒரு பிராமணன் எந்தெந்தப் பொருட்களைக் கையால் கூடத் தொடக் கூடாதோ அந்தப் பொருட்களையே அவன் வியாபாரம் செய்தான். அளவற்ற செல்வத்தைக் குவித்தான். அந்த முதிர்ந்த வயதில் அவனுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். யக்ஞமாலி, சுமாலி என்பது அவர்கள் பெயர். அவர்களுக்கும் இந்தத் தீண்டத் தகாத பொருட்களை எப்படி விற்றுப் பணம் சம்பாதிப்பது என்று சொல்லிக் கொடுத்தான்.
ஒருநாள் தன்னிடம் இருந்த பொன்னை எல்லாம் ஒன்றாகக் கொட்டி எண்ணத் தொடங்கினான். கோடிக் கணக்கான தங்க நாணயங்கள் தன்னிடம் இருப்பதை அறிந்தான். இவ்வளவு சேர்த்தும் மேலும் மேலும் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை அவனை விட்டுப் போகவில்லை. எனவே அவன் சிந்திக்கலானான். இவ்வளவு பொருளைச் சேர்த்தும் தன்னுடைய ஆசை அடங்கவில்லை என்பதை அறிந்து கொண்ட அவன் இவ்வாறு பொருளைச் சேர்ப்பதால் தன் வாழ்வில் அமைதியைக் காணவோ இறை நாட்டம் கொள்ளவோ முடியாது என்பதை அறிந்து கொண்ட அவன் திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தான்.
தன்னிடம் உள்ள பொருளை எல்லாம் நான்காகப் பங்கிட்டான். அதில் இரண்டு பங்கு எடுத்து இரண்டு பிள்ளைகளுக்குக் கொடுத்து விட்டு, மீதமிருந்த இரண்டு பங்கைத் தான் வைத்துக் கொண்டான். தான் வைத்துக் கொண்ட பொருளிலிருந்து விஷ்ணுவிற்குக் கோயில் கட்டுதல், குளம் வெட்டுதல், மரம் நடுதல், சாலைகள் போடுதல் என்பன போன்ற நற்காரியங்களில் ஈடுபட்டுத் தன் செல்வத்தைச் செலவழித்தான். ஏழைகளுக்கும் வேண்டுமான அளவு கொடுத்தான். தள் செல்வம் முழுவதும் தீர்ந்த பிறகு கங்கைக் கரையிலுள்ள வத்திரிகாசிரமத்திற்குச் சென்றான். அங்குள்ள முனிவர்கள் பலரோடு சேர்ந்து யோகம் பயிலத் தொடங்கினான். அங்குள்ள ஜனந்தி என்ற முனி. யோக மார்க்கத்தின் நுணுக்கங்களை அவனுக்குக் கற்றுத் தந்தார். இந்த யோகப் பயிற்சியின் மூலம் தேவமாலி மாயையிலிருந்து விடுபட முடிந்தது.
தேவமாலியின் பிள்ளைகள்
தேவமாலியின் இரு பிள்ளைகளுக்கும் தன் சொத்தில் சரிபாதியை இரண்டாகப் பிரித்துத் தந்திருந்தான் அல்லவா? மூத்தவனாகிய யக்ஞமாலி தன் ஒரு பங்கை வைத்துக் கொண்டு நல்ல முறையில் தான தருமம் செய்து புண்ணியத்தைத் தேடிக் கொண்டான். இளையவனாகிய சுமாலி பெருஞ் சொத்து கிடைத்தவுடன் தீயவர்களுடன் கூட்டுச் சேர்ந்து தகாத வழிகளில் தன் சொத்தைக் கரைத்தான். பணம் கையை விட்டுப் போனதும் சுற்றி இருந்த உறவினர்களும் நண்பர்களும் அவனைக் கைவிட்டுப் போயினர். இந்த நிலையில் யக்ஞமாலி அவனை அழைத்து, அவன் தகாத செயல்களை எடுத்துக் கூறி, அவன் நேர்வழிக்கு வரவேண்டும் என்று அறவுரை கூறி, தன்னிடம் மிச்சமிருந்த சொத்தில் ஒரு பகுதியைக் கொடுத்து, 'இதை வைத்துப் பிழைத்துக் கொள் என்று தம்பிக்குத் தந்தான். ஆனால் சுமாலி பழைய வாழ்க்கை முறையை விடாமல் இருந்ததால் இந்தச் சொத்தும் அழிந்தது. இப்பொழுது தமையனைக் கொன்றுவிட்டால் அவனது பெருஞ்சொத்து தனக்கே வரும் என்று நினைத்த சுமாலி, கத்தியை எடுத்துக் கொண்டு அண்ணனைக் கொல்ல நினைத்தான். அந்நிலையில் காவலர்கள் அவனைப் பிடித்துச் சென்று அரசனிடம் வாழ்ந்து வந்தான் தேவமாலி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாரத புராணம் - பகுதி 14 - Narada Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, அவன், தேவமாலி, சுமாலி, இரண்டு, தன்னிடம், கொண்ட, வைத்துக், யக்ஞமாலி, வந்தான், பிள்ளைகள், தகாத