நாரத புராணம் - பகுதி 13 - பதினெண் புராணங்கள்
இந்த உலகம் துன்பமயமானது. இந்த உலக மாயையிலிருந்து எப்படி ஒருவன் விடுபடுவது, எப்படி வீடுபேற்றை அடைவது என்ற வினாக்களைச் சிந்திப்போர்க்குச் சுதா முனிவர் விடை தருகிறார்.
விஷ்ணுவே வீடுபேற்றைத் தருகிறார். விஷ்ணுவின் ஆணைக்குட்பட்டே படைத்தல் தொழிலை பிரம்மனும், அழித்தல் தொழிலைச் சிவனும் செய்கின்றனர். விஷ்ணுவிற்கு வடிவம் கிடையாது. அறத்தின் அடிப்படை அவரே ஆவார். எல்லா பூதங்களும் அவரிடம் இருந்தே தோன்றுகின்றன. அவரை வழிபடும் மனிதர்கள் தேவர்களாக மாறுகின்றனர். உண்மையான ஞானம் என்பது விஷ்ணுவே அனைத்தும் என்று அறிகின்ற ஞானம் ஆகும். இந்த வகையில் ஞானத்தை வளர்த்துக் கொள்வதன் மூலம் உண்மையான ஆனந்தத்தைப் பெறலாம். ஞானம் என்பது நம்பிக்கை என்னும் பாறையின் மேல் எழுந்தாலொழிய நிலை பெறாது. நற்செயல்கள் விஷ்ணுவிடம் நம்பிக்கை கொள்ளச் செய்கின்றன. உண்மையில் ஞானத்தை அடைவதற்குச் செயல்களே (கர்மமே) அடிப்படையாகும். நேரடியாக ஞான யோகத்தில் ஈடுபடுபவர்கள் மிக மிகச் சிலரே. ஞானத்தின் முதிர்ந்த நிலையை அடையும்பொழுது எல்லாப் பொருளுடனும் விஷ்ணுவே நிறைந்திருப்பதையும், ஒருயிருக்கும், மற்றோர் உயிருக்கும் எவ்வித வேற்றுமையும் இல்லை என்பதை அறிய முடியும் எல்லாம் விஷ்ணு மயம் என்பதை அறிகின்ற நிலையே “யோகம்” என்று சொல்லப்படும்.
இந்த உயர்ந்த ஞானத்தை அடைவதைக் குறிக்கோளாகக் கொண்ட ஒருவனையே "முமுக்ஷீ” என்று கூறுவர். முமுக்oக் களைத் தெரிந்து கொள்வதற்குச் சில அடையாளங்கள் உண்டு. முமுக்ஷீயிடம் கோபம், பொறாமை, காழ்ப்புணர்ச்சி, வெறுப்புணர்ச்சி என்பவை அறவே இராது. அவன் பொறி புலன்களுக்குக் கட்டுப்பட்டவன் அல்லன். எப்பொழுதும் பிறர் மேல் இரக்கம் கொள்பவன் ஆவான். அவன் மனம் எப்பொழுதும் விஷ்ணுவிடமே லயித்திருக்கும்.
யோகத்தை வேறு ஒரு வகையாகவும் விளக்கலாம். பரமாத்மன் என்று சொல்லப்படுகின்ற ஒன்றிற்கும், வெவ்வேறு உடம்புகளில், வெவ்வேறு குறிகளுடனும் அடையாளங் களுடனும், அந்த உடலுக்குரிய அகங்காரங்களுடனும் இருக்கும் ஜீவாத்மாவுடன் இருக்கும் ஒற்றுமையைக் காண முற்படுவதே யோகமாகும். ஜீவாத்மா உடம்பு என்னும் பருப்பொருளின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கி நிற்கிறது. இந்த உடம்பு கட்டுப்பாடு என்பது, ஒரு மாயை என்று அறிவதே அந்த உடலுக்குள் இருக்கும் ஜீவாத்மாவுக்கு மிக முக்கியமான செயலாகும். இந்த உடலுக்குள் இருக்கும் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றுதான் என்பதைத் தெளிவாக அறிந்து ஐக்கியப்படுவதே பிரம்ம ஞானம் எனப்படும்.
யோகம்
யோக மார்க்கம் என்பது எட்டுப் படிகளைக் கொண்டது. முதலாவது இயமம் எனப்படும். அஹிம்சை, உண்மை, அன்பு, பிற உயிர்களிடத்தே இரக்கம், பொறிபுலன் அடக்கம் ஆகியவற்றை மேற்கொண்டு, பொறாமை, காழ்ப்புணர்ச்சி ஆகியவற்றை ஒதுக்குவதே இயமம் என்ற படி இரண்டாவது படி நியமம். மனத்துய்மை, நாம ஜெபம், தியானம், ஞான நூல்களைக் கற்றல் ஆகியவை நியமம் என்ற இரண்டாவது படி இயமம், நியமம் ஆகிய இரண்டும் உடலையும் மனத்தையும் தூய்மைப்படுத்தி, தியானத்திற்கு வழி வகுக்கிறது. தியானத்திற்கு உரிய முறையில் உடம்பை இருக்கச் செய்ய வேண்டும். அதுவே ஆசனம் எனப்படும் மூன்றாவது படி. மூன்றாவது படியில், யோகம் பயில்பவர்களுக்கு முப்பது வகையான ஆசனங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. நான்காவது படி பிராணாயாமம் எனப்படும் மூச்சுக் காற்றை கட்டுப்படுத்துவது தியானத்திற்குப் பெரிதும் உதவுகிறது. பிரத்யாகாரம் என்பது ஐந்தாவது படி. பொறிபுலன்களால் ஏற்படும் இன்ப அனுபவத்திலிருந்து மனத்தை மீட்டுக் கொண்டுவரும் படி இந்த ஐந்தாவது படியாகும். தாரணை என்பது ஆறாவது படியாகும். எங்கும் நிறைந்துள்ள விஷ்ணுவோடு ஜீவாத்மனை ஒருமுகப்படுத்தி அந்த ஒன்றுபட்ட விஷ்ணுவின் வடிவை தியானிப்பதே தாரணை எனப்படும். தாமரை மலரில் அமர்ந்திருக்கும் விஷ்ணுவின் வடிவை இடைவிடாமல் சிந்தனையில் இருத்துவதற்கு இது உதவிபுரியும். தியானம் என்பது ஏழாவது படியாகும். இந்த வடிவத்தை இடையீடு இல்லாமல் சிந்தனையில் இருத்துவதே தியானம் எனப்படும். தியானிப்பு, தியானிக்கப்படும் பொருள். தியானம் என்ற மூன்றும் இதில் அடங்கி இருக்கக் காணலாம். சமாதி என்பது எட்டாவது படி. தியானிப்பவன், தியானிக்கப்படும் பொருள், தியானம் என்ற மூன்றும் மறைந்துவிடும் நிலையே சமாதி எனப்படும். காண்பான், காட்சி, காணப்படும் பொருள் என்றும் இந்த மூன்றைக் கூறலாம். காண்பானும் காட்சியும், காணப்படும் பொருள் ஒன்றி ஐக்கியமாவதே சமாதி எனப்படும். இந்நிலையில் பொறிபுலன்களால் ஏற்படும் அனுபவங்கள் முற்றிலும் மறைந்து, பிரம்மம் ஒன்று மட்டுமே நிற்கும். அதுவே சமாதி நிலையாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாரத புராணம் - பகுதி 13 - Narada Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, என்பது, எனப்படும், தியானம், பொருள், சமாதி, இருக்கும், ஞானம், படியாகும், விஷ்ணுவின், ஞானத்தை, நியமம், அந்த, இயமம், விஷ்ணுவே