கருட புராணம் - பகுதி 14 - பதினெண் புராணங்கள்
உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் பிறப்பின் அடிப்படையில் நான்கு வகையாகப் பிரிக்கப்படும். முட்டையில் பிறப்பன அண்டஜா என்றும், வேர்வையில் பிறப்பன ஸ்வேதஜா என்றும், செடி கொடியில் பிறப்பன உத்பீஜா என்றும், நடக்கும் ஜீவராசிகள் ஜராயுஜா என்றும் கூறப்படும். ஒவ்வொரு ஆத்மாவும் ஒவ்வொரு வகைப் பிறப்பிலும் பிறந்து, அடுத்தடுத்து மேல் பிறவி அடைந்து இறுதியாக மனிதராகப் பிறக்கின்றனர். ஒவ்வொரு ஆத்மாவும் ஒவ்வொரு வகையிலும் இருபத்தியொரு லட்சம் தடவை பிறந்து, நான்காவது பிறவிக்கு வரும்பொழுது எண்பத்தியோரு லட்சம் பிறப்பை அடைகின்றனர்.
(இதே கருத்தை நம் நாட்டில் தோன்றிய மாணிக்கவாசகர் "புல்லாய், பூடாய், புழுவாய், மரமாய், பல்விருகமாய், பறவையாய், பாம்பாய், கல்லாய், மனிதராய் என்று வரும் அடிகளில் குறிப்பிடுவதையும், ஒவ்வொரு ஆத்மாவும் இத்தனையும் தாண்டி வருகிறது என்பதையும் அதே பாடவில்,
"……………. ……... இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்”
என்று கூறுவதைக் காண்க
எண்டத்தோரு லட்சம் பிறவிகள் என்று கருடபுராணம் கூறுவதைத் திருஞானசம்பந்தர்,
உரைசேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம்
யோனி பேதம்
நிறைசேரப் படைத்து அவற்றின் உயிர்க்கு உயிராய்
அங்கங்கே நின்றான் கோயில்
என்று திருவழிமழலைப் பதிகத்தில் கூறுவதையும் காணலாம்)
உயிர் வாழ்க்கை
கருடன் விஷ்ணுவைப் பார்த்து, வேதத்தில் சொல்லப்பட்ட படி நூறாண்டு வாழ்பவர் குறைவாகவே உள்ளனர். பலரும் இதை எட்டாமல் இறந்து விடுகின்றனரே, ஏன்?
விஷ்ணு : அவரவர்கள் செய்த புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப, ஆயுள் கணிக்கப்படுகிறது.
உடலமைப்பு
அடுத்து விஷ்ணு சர ராசிகளின் உடலமைப்புப் பற்றிப் பின்வருமாறு கூறினார்.
மனித உடல் என்பது தோல், சதை, இரத்தம், கொழுப்பு. எலும்பினுள் இருக்கும் ஜவ்வு, எலும்பு, உயிர் என்பவற்றால் ஆனது. பஞ்ச பூதங்களும் உடலமைப்பிற்கு உதவுகின்றன. பூமி-தோல், எலும்பு, நரம்புகள், சதை உரோமம் என்பவற்றில் கலந்துள்ளது. நீர்- எச்சில், இரத்தம், எலும்பு, சவ்வு என்பவற்றிலும், நெருப்பு- பசி, தூக்கம், தாகம், களைப்பு, சுறுசுறுப்பு என்பவற்றிலும், காற்று- கோபம்,
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கருட புராணம் - பகுதி 14 - Garuda Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, ஒவ்வொரு, என்றும், எலும்பு, லட்சம், ஆத்மாவும், பிறப்பன